search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அறிவிப்பு மெஷின் விரைவில் செயலிழந்து விடும் - சிவராஜ் சிங்கை தாக்கிய கமல்நாத்
    X

    அறிவிப்பு மெஷின் விரைவில் செயலிழந்து விடும் - சிவராஜ் சிங்கை தாக்கிய கமல்நாத்

    • மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் கரேலி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் எங்கு சென்றாலும் மக்கள் சிவராஜ் சிங்குக்கு அன்பான பிரியாவிடை கொடுக்க முடிவு செய்திருப்பதைக் காண்கிறேன்.

    சிவராஜ் சிங் 22,000 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் அவரது அறிவிப்பு மெஷின் இரட்டிப்பு வேகத்தில் இயங்கியது.

    ஆனால் அறிவிப்பு மெஷினின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் என தெரிவித்தார்.

    Next Story
    ×