search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணீஷ் திவாரி"

    • மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின.
    • லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத். இவர்கள் இருவரும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    தற்போது கமல்நாத்தைப் போல மணீஷ் திவாரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.அத்துடன் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகமோ, இது அப்பட்டமான வதந்தி. நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே மணீஷ் திவாரி தங்கியிருந்தார் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.

    • ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று மணீஷ் திவாரி கூறினார்.
    • கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கேரளாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ராகுல் காந்தியின் தண்டனை சட்டத்தில் மோசமானது என்றும், அவரது தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

    'ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, மேல்முறையீடு செய்ய அவசரம் இல்லை. அவசர அவசரமாக அவரை தகுதி நீக்கம் செய்து, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பாஜக அரசு காலி செய்யும்படி கூறியது. இதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறது' என்றும் மணீஷ் திவாரி கூறினார்.

    அப்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திவாரி, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • வாக்காளர் பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி :

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவை சேர்ந்த சசிதரூர், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்தநிலையில், இக்குழுவில் உள்ள மற்றொரு எம்.பி.யான மணீஷ் திவாரி, இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், யாராவது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? ஒருவேளை யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

    எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பட்டியலை பார்ப்பதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு ஏன் செல்ல வேண்டும்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அவரது கருத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    யார் யார் வாக்களிப்பார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.

    சீர்திருத்தவாதிகளை கிளர்ச்சி செய்பவர்களாக பார்க்கக்கூடாது. கட்சியை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அப்படியானால் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள்தான் கட்சியில் இருக்க வேண்டுமா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரின் வேட்புமனுவை ஏதேனும் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முன்மொழிந்தால் போதும்.

    தேர்தல் நடைமுறை குறித்து என் சகாக்கள் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? வெளிப்படையான முறையை கொண்டுள்ள நாம் பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தை வெளிப்படையாக வரவேற்று மணீஷ் திவாரி டுவிட்டர் பதிவு.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு உறுதியாக தெரிவித்தது.

    இந்த திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்தன் கீழ் விமானப்படையில் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வரும் 18ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அக்னிபாத் திட்ட பிரச்சினையை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 12 எம்பிக்கள், 6 பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இதில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட பங்கேற்ற மணீஷ் திவாரி அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

    முன்னதாக அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், எதார்த்தம் என்னவென்றால், இலகுவான ஆர்வமுள்ள இளைஞர்களின் ஆயுதப்படை இந்தியாவுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அக்னிபாத் திட்டத்திற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

    இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி வெளிப்படையாக அந்த திட்டத்தை ஆதரித்து இருப்பது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மணீஷ் திவாரியை காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×