search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Headphone"

    • தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
    • இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண், மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.

    ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் `ஸ்மார்ட் ஃபோன்கள்'. ஆம்...! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருடைய கைகளிலுமே புகுந்து விளையாடுகிறது இந்த `ஸ்மார்ட்' போன்கள்.

    செல்போன் உடன், அதன் இணைபிரியா நண்பனாக காதில் மாட்டிக்கொள்ள இயர்போன் கட்டாயம் கையில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு. இதன் பயன்பாடு காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கதிர்வீச்சு காது கேளாமைக்கு காரணமா...?

    செல்ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் பார்வை பாதிப்படைகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. செல்ஃபோன் அழைப்புகளின் போது `ரேடியோ ஃப்ரீக்வன்ஸி' எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவிலான பாதிப்பை உண்டாக்கும். அதாவது, ஒருவரின் மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்கக் கூடியது. இந்த கதிர்வீச்சுகளின் வேகமானது குறையவும் செய்யலாம், கூடவும் செய்யலாம் அது முழுக்க முழுக்க அவரவர் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தது.

     தொடர்ந்து பாடல் கேட்பது தவறா...?

    காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு பேசுவதைக் காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதையே பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாடல்கள் கேட்கும் போது நம்முடைய காதுகள் செவித்திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் காதுகளின் உயிரணுக்களின் உணர்ச்சி நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும். இதனை மீண்டும் சரிசெய்ய சாத்தியமே இல்லை. இதனால் நிரந்தர காது கேளாமை கூட ஏற்படலாம்.

    மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலுக்கு என்ன காரணம்...?

    இயர்போன்களை பயன்படுத்துவதை ஒரு அன்றாட பழக்கமாகக் கொள்வது ஒருவரது சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இறுதியாக நம்முடைய மனஅமைதி கெடும். அதுபோக, இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால் சாதாரணமாக கவனம் செலுத்துவதில்கூட குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    இயர்போன்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா...?

    இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இதயம் வேகமாக துடிக்கும். அதோடு இதயம் சார்ந்த அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

     பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:

    சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காதுகள் பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 60 டெசிபலுக்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது.

    ஹெட்போனோ அல்லது இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்பது நல்லது. அதாவது அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுக்க வேண்டும். இயர்போனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும்.

    • ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹார்மன் இண்டர்நேஷனல் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜெபிஎல் பிராண்டு ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.

    சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிடெட் அங்கம் ஹார்மண் இண்டர்நேஷனல் ஆட்டோமோடிவ், நுகர்வோர் மற்றும் தொழில்துறை செயலிகள், கனெக்டெட் தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. வளர்ந்து வரும் ஹெட்போன் சந்தையில், அதிக தரமுள்ள ஆடியோ சாதனங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டதோடு, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததன் அங்கமாக ஜெபிஎல் பிராண்டு 20 கோடி ஹெட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.

    ஆடியோ பிரிவில் ஒவ்வொருத்தரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த தசாப்தத்தை கடந்து வந்துள்ளதாக ஜெபிஎல் தெரிவித்து இருக்கிறது. 2020 முதல் ஹெட்போன்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. பெருந்தொற்று காரணமாக ஹெச்டி மியூசிக் ஸ்டிரீமிங், இன்-கேம் மியூசிக், பாட்காஸ்ட், வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை என வாழ்க்கை முறை முழுவதும் வீட்டை சார்ந்தே மாறி போயின.

    இதன் காரணமாக தற்போதில் இருந்து 2028-க்குள் ஹெட்போன் சந்தையில் 17.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஜெபிஎல் முடிவுகளிலும் எதிரொலிக்கும். இரண்டாவது காலாண்டு வாக்கில் சர்வதேச ஜெபிஎல் நிறுவனம் முன்னிலையில் இருந்தது. இதன்படி ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் ஜெபிஎல் முன்னணி ஆடியோ பிராண்டாக உள்ளது. சமீபத்தில் தான் ஜெபிஎல் டியூன் ஃபிளெக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனங்களில் முதன்மையானதாக ஜெபிஎல் இருக்கிறது. ஜெபிஎல் பிராண்டு ஹெட்போன்கள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஹெட்போன்கள் பலதரப்பட்ட பயனர்களுக்கும் சிறப்பான தேர்வாக அமைந்தது.

    • நத்திங் நிறுவனம் ஒவர் தி இயர் ரக ஹெட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் இந்த ஹெட்போனின் கான்செப்ட் ரெண்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் அடுத்த புதிய சாதனம் ஹெட்போன்களாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆடியோ சாதனத்தின் கான்செப்ட் ரெண்டர் படங்களை நத்திங் நிறுவனர் கால் பெய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ரெண்டர்களை யான்கோ டிசைன் எனும் ஆன்லைன் இதழ் உருவாக்கி இருக்கிறது.

    கால் பெய் இவற்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு, இதனை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ட்விட்டரில் பலரும் இதை அறிமுகம் செய்யுங்கள் என பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஹெட்போன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய நத்திங் நிறுவன ஹெட்போன் நத்திங் ஹெட் (1) என அழைக்கப்படலாம்.

    ரெண்டர்களில் உள்ள நத்திங் ஹெட் (1) பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது போன் (1) மற்றும் இயர் (1) போன்றே இந்த ரெண்டர்களில் உள்ள ஹெட்போனும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் க்ளிம்ப் இண்டர்பேஸ் போன்று இயர்கப்களை சுற்றி எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன.

    ஹெட்போனுடன் சார்ஜிங் ஸ்டாண்ட் ரெண்டரையும் யான்கோ டிசைன் வெளியிட்டு இருக்கிறது. இதில் வயர்லெஸ் காயில்கள் உள்ளன. இத்துடன் ஸ்டாண்டின் பின்புறம் சார்ஜிங் சர்பேஸ் உள்ளது. இந்த இடத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    • சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
    • முன்னதாக இந்த ஹெட்போன் மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சோனி நிறுவனத்தின் WH 1000XM5 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட புது ஹெட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி WH 1000XM5 மாடலில் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 உள்ளது. இது சோனியின் ஹெச்டி தர நாய்ஸ் கேன்சலிங் பிராசஸரின் முழு திறனை வெளிக்கொண்டு வரும்.

    பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மில்லிமீட்டர் டிரைவர் யூனிட், எடை குறைந்த, உறுதியான டோம் கார்பன் பைபர் பாகங்களை பயன்படுத்தி சவுண்ட் தரத்தை அதிக இயற்கையாக மாற்றுகிறது. இதில் கூகுள் பாஸ்ட் பேர் அம்சம் உள்ளது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் மிக எளிதில் கனெக்ட் செய்து விட முடியும். இத்துடன் LDAC கோடெக் சப்போர்ட், DSEE எக்ஸ்டிரீம் மற்றும் நுனுக்கமாக வாய்ஸ் பிக்கப் செய்யும் திறன் உள்ளிட்டவை இந்த ஹெட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.


    சோனி WH 1000XM5 மாடலில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இது ஆம்பியண்ட் சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ தலைசிறந்த அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றுகிறது. மேலும் மல்டி பாயிண்க் கனெக்‌ஷன் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு ப்ளூடூத் சாதனங்களுடன் கனெக்ட் செய்ய முடியும். இந்த ஹெட்போன்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், டிசைன் மாற்றப்பட்டு இருப்பதால், சோனி WH 1000XM5 ஹெட்போனை மடிக்க முடியாது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் யுஎஸ்பி சி பவர் டெலிவரி மூலம் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    இந்தியாவில் சோனி WH 1000XM5 ஹெட்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் மற்றும் shopatsc வலைதளங்களில் இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஹெட்போன் ரூ. 26 ஆயிரத்து 990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #WirelessHeadphone



    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக அறியப்படும் ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    ஸ்டஃப்கூல் மாண்டி என அழைக்கப்படும் புதிய ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போனினை ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் இணைக்க முடியும். நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி இருக்கும் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை சுற்றி சிறிய கேபிள்கள் இயர்பட்களுக்கு வழங்கப்படுகிறது.



    மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கொண்டிருப்பதால் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை தொடாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், இசையை கேட்டு அனுபவிக்கலாம். இத்துடன் இந்த ஹெட்போனில் காந்த வசதி வழங்கப்பட்டிருப்பதால் ஹெட்போனை பயன்படுத்தாத போது இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்.

    ஸ்டஃப்கூல் மாண்டி வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன்களில் 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹெட்போனினை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். ஹெட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

    இந்தியாவில் ஸ்டஃப்கூல் மாண்டி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போனின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வ விற்பனை ஸ்டஃப்கூல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sony #headphones



    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி WH-CH700N என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சத்தத்தை தடுக்கும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் (Artificial Intelligence Noise Cancellation) தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

    இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. 

    சோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்பட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.



    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சோனி WH-CH700N மாடலில் ப்ளூடூத் 4.1 மற்றும் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதில் கழற்றக்கூடிய ஒருபக்க கேபிள் 1.2 மீட்டர் நீளத்தில் வழங்கப்படுகிறது. இதனை வழக்கமான 3.5 எம்.எம். ஜாக் போன்று பயன்படுத்தலாம்.

    இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

    சோனி WH-CH700N ஹெட்போன் மாடல் ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்படுகிறது.

    நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #headphones


    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்களில் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்டு ப்ரோட்டீன் லெதர் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது.

    இத்துடன் ஹெட்போன்களில் இன்-லைன் கன்ட்ரோல்கள் இருப்பதால், மியூசிக், வால்யூம் கன்ட்ரோல், மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும். டூயல் மோட் வசதியில் இயங்குகிறது. இதனால் சார்ஜ் குறைவாக இருக்கும் போது ஆக்சிலரி கேபிள் கொண்டு பயன்படுத்த முடியும். 

    போல்ட் கியூ ஹெட்போன் ஐ.ஓ.எஸ்., ஆன்ட்ராய்டு மற்றும் பிளாக்பெரி இயங்குதளங்களில் வேலை செய்யும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் ஸ்டான்ட்-பை மற்றும் 8 முதல் 10 மணி நேர பிளேபேக் வழங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் ஹெட்போனில் உள்ள ப்ளூடூத் ஆடியோ டீகோட் தொழில்நுட்பம் சிறப்பான ஆடியோ டிரான்ஸ்மிஷன் செய்கிறது.

    புதிய போல்ட் கியூ ஹெட்போனில் CSR 8635 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி. தரத்தில் ஆடியோ வழங்குவதோடு 3D அகௌஸ்டிக் டிரைவர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்-லைன் கன்ட்ரோல்கள் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் கொண்டு இசையை கேட்பதோடு, அழைப்புகளையும் ஏற்க முடியும்.

    இதனுடன் அடிக்கடி சிக்கிக் கொள்ளாத வகையிலான கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போல்ட் கியூ ஹெட்போன் விலை ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மிந்த்ரா தளத்தில் ரூ.1,449 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #headphones #Wireless
    ஜெ.பி.எல். நிறுவனத்தின் புதிய ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் தள்ளுபடி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #headphones


    இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெ.பி.எல். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள்: ஜெ.பி.எல். கோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஜெ.பி.எல். T250BT ஹெட்போன் உள்ளிட்டவற்றை அறிமுகமாகி உள்ளன.

    இத்துடன் ஆகஸ்டு 7, 2018 துவங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் அனைத்து ஜெ.பி.எல். சாதனங்களிலும் அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கு அவரவர் வாங்கும் பொருளுடன் இலவச ஜெ.பி.எல். ஸ்போர்ட்ஸ் இயர்போன் வழங்கப்படுகிறது.



    சிறப்பு விற்பனையின் கீழ் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் துவங்கி, ஹோம் மற்றும் மல்டிமீடியா சாதனங்களும் புதிய ஜெ.பி.எல். ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுன்கிறன.

    புதிய சாதனங்களின் படி ஜெ.பி.எல். கோ பிளஸ் ஆல்-இன்-ஒன் ஸ்பீக்கர் இசையை ப்ளூடூத் வழியே ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் இருந்து இசைக்கிறது. இதனுடன் 5 மணி நேர பிளேடைம் கொண்டுள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் நாய்ஸ்-கேன்சலிங் வசதி கொண்ட ஸ்பீக்கர்போன் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்பீக்கரை ஆஃப் செய்யாமல் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்து பேச முடியும்.



    இத்துடன் ஜெ.பி.எல். TBT ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12.5 எம்எம்-இல் டிரைவர்கள் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக் இயக்குவதோடு, அழைப்புகளையும் பேச முடியும்.

    மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜெ.பி.எல். கோ பிளஸ் ஸ்பீக்கர் விலை ரூ.3499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெ.பி.எல். T205BT ஹெட்போன் விலை ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இரண்டு சாதனங்களும் தற்சமயம் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜெ.பி.எல். சாதனங்கள் பிரத்யேகமாக ஜெ.பி.எல். வலைதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. #headphones #speakers
    ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    ஹூவாய் சப்-பிரான்டு நிறுவனமான ஹானர் தனது க்ளியர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability-HRV) அளவுகளை ஆய்வு செய்து, உடனடி பரிந்துரைகளை இந்த ஹெட்போன் வழங்கும்.

    ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக் வசதியை ஹானர் க்ளியர் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ அனுபவமானது குறைந்த பிட்ரேட் கொண்ட ஆடியோக்களையும் அதிக துல்லியமாக, உயர் ரகத்தில் கேட்க வழி செய்யும். இதன் ரியல்-டைம் ஹார்ட் ரேட் டிட்டெக்ஷன் வலது புற இயர்பட்-இல் பொருத்தப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மானிட்டர் மூலம் டிராக் செய்யப்படுகிறது.

    ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் ஹூவாய், ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்றே ஹூவாய் ஹெல்த் ஆப் கொண்டிருக்கும் மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் என ஹானர் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் சீனாவை சேர்ந்த அறிவியில் குழுமத்தின் உளவியல் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.



    இந்த சாதனம் பயனரின் உளவியல் சார்ந்து மன அழுத்தத்தை இயக்கி, அதற்கேற்ற ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் தகவல்களை வழங்கும். இதன் இயர்பட்கள் மிகவும் மென்மையாகவும், மனித தோல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும், நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுரகரியமாக இருக்கும் படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஹானர் க்ளியர் ஹெட்போன்களின் இயர் ஃபின்கள் மற்றும் இயர்-டிப்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் MEMS மைக்ரோபோன், இன்-லைன் மியூசிக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் க்ளியர் ஹெட்போன் சீனாவில் 129 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,350) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவில் இன்று (ஜூன் 7) முதல் துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ×