search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female engineer"

    • சிறிய தொகையை செலுத்தி விளையாடினால் பணம் இரட்டிபாக தரப்படும் என தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை லோகமுத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரின் மகள் பத்மபிரியா(25), சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த 10-ந் தேதி இவரின் செல்போனுக்கு அமேசான் சென்டர் பிலிப்பைன்ஸ் கிளை என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது.

    அதில், சிறிய தொகையை செலுத்தி விளையாடினால் பணம் இரட்டிபாக தரப்படும் என தெரிவித்தனர்.

    சிறிய தொகை செலுத்தி பத்மபிரியா விளையாடியபோது இரட்டிப்பு பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. இதை நம்பி அதிக பணம் செலுத்தி விளையாடினார்.

    ஆனால் இரட்டிப்பு பணம் வரவில்லை. சந்தேகமடைந் பத்மபிரியா மொத்தமாக செலுத்திய ரூ.87 ஆயிரத்தை திருப்பி அனுப்பும்படி கூறினார்.

    ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை. அந்த நிறுவனத்திலிருந்து பேசிய நபர் பிலிப்பைன்ஸ் நாட்டின் விதிப்படி ரூ.31 ஆயிரம் செலுத்தினால் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பத்மபிரியா பணம் இல்லை என்றவுடன் அவரின் எண்ணை பிளாக் செய்துவிட்டனர்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மபிரியா முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
    • போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26 -ம் தேதி வசுமதி, தனது பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு திருமணமாகி வந்த நாளில் இருந்து தன்னிடம், கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்து வருகிறார்கள். என்னை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். தினமும் டார்ச்சர் செய்வதால் என்னால் இங்கு வாழ முடியாது. என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி கதறி அழுதார்.

    இதனால் அத்தியப்பன் நல்லிபாளையம் சென்று தனது மகள் வசுமதியை அழைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மன வேதனையில் இருந்த வசுமதி கடந்த 30 -தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வசுமதி பரிதாபமாக உயிரிழந்தார் .

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.

    இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்தால் தான் வசுமதி, உடலை வாங்குவோம் என கூறி உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வசுமதியின் கணவர் வினோத் உள்பட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இன்று 3-வது நாளாக வசுமதியின் பெற்றோர் தனது மகள் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை மகளின் உடலை பெறமாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் 3-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் 4 பேரையும் பிடிக்க தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்
    • மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது என தெரிவித்தார்.

    கோவை 

    கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். அப்போது ஜெய்கணேஷ் என்பவர் வந்து அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்துள்ளேன் இங்கு எனக்கு அலுவலம் உள்ளது என்றார்.

    மேலும் அவருக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ. 5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.

    இதனை நான் உண்மை என நினைத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆடரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆடரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. போன் செய்த போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.


    அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் கோவிலுக்கு செல்வதாக அழைத்து வந்து பெண் என்ஜினீயரை தவிக்க விட்டு கார் மற்றும் குழந்தையுடன் மாயமான கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருச்சி:

    திருச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    ராஜேஷ் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவியிடம் சம்பளத்தை கேட்டு தொல்லை செய்த தோடு, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் ராஜேஷ், தனது மனைவி சிவரஞ்சனியிடம் திருச்சி சென்று கோவில்களில் வழிபாடு செய்து வரலாம் என கூறியுள்ளார். அதனை நம்பிய சிவரஞ்சனியும் தனது குழந்தை, கம்பெனி லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணத்துடன் பெங்களூரில் இருந்து கணவருடன் திருச்சிக்கு புறப்பட்டார்.

    திருச்சி வந்ததும் ராஜேஷ் சிவரஞ்சனியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் ராஜேஷ் செல்லும் போது, சிவரஞ்சனியின் கார் மற்றும் லேப்-டாப், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றுடன் குழந்தையையும் தூக்கி சென்று விட்டார். இதனால் ராஜேஷ் தன்னை ஏமாற்றியது தெரிய வரவே, சிவரஞ்சனி இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், குழந்தையுடன் எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன் மாயமான ராஜேசை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்து பெண் என்ஜினீயரிடம் அத்துமீறிய தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கரூரை சேர்ந்த இளம்பெண் என்ஜினீயர் ஒருவர் வேலைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார்.

    தனது தாயுடன் சரவணம்பட்டி பகுதியில் வீடு எடுத்து தங்கிய அவர் கடந்த வாரம் அத்திப் பாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில் நிறுவன உரிமையாளரான மோசஸ் (37) என்பவர் பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச மெசேஜ் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்தார். இதை அவர் கண்டித்தார். அதை மோசஸ் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெண் என்ஜினீயருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    நேற்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் என்ஜினீயரிடம் மோசஸ் தகாத வார்த்தைகள் பேசியதோடு, அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார்.

    அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போடவே மோசஸ் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டி விட்டு தப்பி ஓடினார்.

    இதுகுறித்து இளம்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் மோசஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் ஆபாச நடனம் ஆடியதாக கூறி பெண் என்ஜினீயரிடம் லஞ்சம் கேட்ட மிரட்டிய டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் எனது தோழிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கி இருந்தோம்.

    நள்ளிரவு 1 மணிக்கு லாட்ஜுக்கு வந்த அப்போதைய கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் ஆபாச நடனம் ஆடியதாக கூறி எங்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

    ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×