கோவையில் பெண் என்ஜினீயரிடம் ரூ.5 லட்சம் மோசடி

ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது என தெரிவித்தார்.
கோவையில் பெண் என்ஜினீயரிடம் ரூ.5 லட்சம் மோசடி
Published on

கோவை 

கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். அப்போது ஜெய்கணேஷ் என்பவர் வந்து அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்துள்ளேன் இங்கு எனக்கு அலுவலம் உள்ளது என்றார்.

மேலும் அவருக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ. 5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.

இதனை நான் உண்மை என நினைத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆடரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆடரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. போன் செய்த போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.

அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com