search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coromandel train derail"

    • இரண்டு பயணிகள் ரெயில் என்பதால் 1000-க்கும் மேற்பட்டோர் காயம்
    • விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது

    ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.

    மேலும் காயம் அடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 1100 பேர் காயம் அடைந்தனர். அதில் 900 பேர் முதல் உதவி உள்ளிட்ட லேசான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்னும் 200 பயணிகள் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 278 பேர் உயிரிழந்துள்ளனர். 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    புவனேஸ்வர் நகராட்சியின் கமிஷனர் விஜய் அம்ரித் குலாங்கே கூறியதாவது:-

    193 உடல்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவி எண் 1929-க்கு வந்துள்ளன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தினர் அதிக அளவில் பாதிப்பு
    • ரெயில்வே அதிகாரிகள் பேசிய உரையாடல் கசிந்ததாக குற்றச்சாட்டு

    ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினார்.

    ஒரு ரெயில் மேற்கு வங்காளத்தில் இருந்து புறப்பட்டது. மற்றொரு ரெயில் அங்கு சென்றது. இதனால் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ரெயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. உயர்மட்ட குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்கு மேற்கு வங்காள அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி என மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி. வேறு மாநிலத்தில் விபத்து நடந்திருக்கும்போது, நேற்றிலிருந்து அவர்கள் ஏன் அதிக அளவில் பீதி அடைந்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்?. போலீஸ் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகளின் ஒட்டுக் கேட்டுள்ளனர். இரண்டு அதிகாரிகளின் போன் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது. எப்படி உரையாடல் கசிந்தது. இது சிபிஐ விசாரணையில் வரவேண்டும். இது வரவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்வேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள்.
    • ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியவர்களில் தரணி மட்டுமே ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சிறப்பு ரெயில் மூலம் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னை திரும்பினோம்.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் உயிர் தப்பிய சென்னை காசிமேட்டை சேர்ந்த தரணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    ரெயில் விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், எனது வாழ்நாளில் இது போன்ற ரெயில் விபத்தை நான் பார்த்ததே இல்லை என்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தரணி கூறும்போது, 'டிரைவரான நான் வேலை விஷயமாக மேற்கு வங்காளத்துக்கு சென்றுவிட்டு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். திடீரென பலத்த சத்தம் கேட்டு பெட்டியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    நானும் தூக்கி வீசப்பட்டேன். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. லேசான விபத்தாக இருக்கும் என்று நினைத்து வெளியில் வந்து பார்த்தால் ரெயில் பெட்டிகள் சுக்குநூறாக உடைந்து நொறுங்கி கிடந்தன. அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை' என்றார்.

    ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியவர்களில் தரணி மட்டுமே ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஸ்கேன் எடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    சிவரஞ்சனி

    சிவரஞ்சனி

     விபத்துக்குள்ளான தாஜ் கோரமண்டல் ரெயிலில் பயணம் செய்த தாம்பரத்தை சேர்ந்த சிவரஞ்சனி கூறியதாவது:-

    எனது கணவர் சதீஷ் குமார். அசாமில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணி புரிந்து வருகிறார். எனது மகளுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து நாங்கள் இருவரும் கணவர் பணிபுரியும் இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்தோம்.

    பள்ளி திறக்கப்படுவதையொட்டி சென்னை தாஜ் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நானும் எனது மகளும், கணவரின் நண்பர் குடும்பத்தினருடன் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

    திடீரென ரெயில் விபத்துக்குள்ளானது. எப்படி என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தடம்புரண்டதால் அருகில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உயிர் பிழைத்தால் போதும் என்று கீழே இறங்கினோம்.

    அப்போதுதான் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிந்தது. அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தோம். சென்னை திரும்பியதும் நிம்மதி அடைந்தோம். சிறப்பு ரெயில் மூலம் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னை திரும்பினோம்.

    • ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும்.
    • அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

    ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடம் சோக சுவடுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கும்.

    அந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் பல இதயங்களின் வலியையும், ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

    தண்டவாளத்தின் சில அடி தூரத்துக்குள் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது மீட்பு குழுவினர் கண்களில் வேதனை கலந்த கண்ணீர் கசிந்தது.

    ஏனெனில் அந்த நோட்டு புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது அனைத்தும் காதல் கவிதைகள்.

    சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களை கவிதையாக வடித்து இருந்தார். வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் ஒவ்வொன்றும் காதலையும், காதலின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தியது.

    'சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன' என்று அந்த கடிதங்கள் நீள் கிறது. எழுதியவர் யார்? அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவரது காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் எஞ்சி நிற்கிறது.

    குழந்தைகளுக்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த பொம்மைகள், உடைகள் சிதறி கிடந்தன. கிழிந்தும், சிதைந்தும் கிடந்த அவற்றின் மீது ரத்த கறைகள் படிந்து காணப்பட்டன. சிதறி கிடந்த பயணிகளின் உடமைகளை தன்னார்வலர்கள் சேகரித்து ஆங்காங்கே குவித்து வைத்துள்ளார்கள்.

    • மத்திய அரசு ரெயில்வே துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.
    • தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது.

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து மிகவும் வருத்தத்திற்குறியது. வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரியாக இயங்காதது தான். இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு.

    இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது தற்போதைய ரெயில்வே அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணைக்கு இடையூறாக இருக்கும். எனவே இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    மத்திய அரசு ரெயில்வே துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பராமரிக்கவில்லை.

    இந்த ரெயில் விபத்து நடைபெற்ற உடனே தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது. மேலும் தமிழக முதல்வர் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து இருக்கிறார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையிலும், அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தை வைத்து, அதில் உள்ள தகவல்களை வைத்து வாதாடி உரிய நீதி பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். மதுரை சுற்றுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த தாக்குதல்களை கண்டித்து வருகிற 12-ந் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
    • ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த பயணிகள் பஸ்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு கொல்கத்தாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று விபத்தில் சிக்கியது.

    கொல்கத்தாவில் உள்ள மேதினிபூருக்கு சென்ற அந்த பஸ் மதியம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரெயில் விபத்தில் காயங்களுடன் தப்பியவர்கள், மீண்டும் பஸ் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 21 வருடங்களில் நான்கு முறை விபத்தை சந்தித்துள்ளது
    • இந்த முறை இரண்டு ரெயில்களுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹனாகா பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய விபத்தில் 3 ரெயில்கள் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த ரெயில் விபத்துக்கு முக்கிய காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது கோரமண்டல் ரெயில் மோதி பெட்டிகள் தடம் புரண்டதுதான் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோரமண்டல் ரெயில் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மூன்று முறை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை 21 தற்போது நடைபெற்றது 4-வது முறையாகும்.

    2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். நெல்லூர் அருகே மோசமான மெயின் லைன் காரணமாக விபத்து நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    2009-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி ஒடிசா மாநிலம் ஜாஜ்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தண்டவாளம் மாறும்போது விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். அதிவேகமாக சென்ற நிலையில் தண்டவாளம் மாறியதால் ரெயில் இன்ஜின் தலைகீழாக கவிழ்ந்தது.

    2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நெல்லூர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் 32 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    தற்போது 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது.

    இதில் உள்ள விசித்திரமான விசயம் என்னவெனில் இந்த விபத்துக்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையிலேயே நடந்துள்ளது. ஒருவேளை கோரமண்டல் ரெயிலுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆகாமல் இருக்குமோ?.

    எதுவாக இருந்தாலும் தொழில்நுட்பமும், மனிதத் தவறும் நடைபெறாமல் இருந்தால விபத்துக்களை தடுக்கலாம்.

    • காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    யாருக்கும் தீவிர சிகிச்சைக்கான பெரிய பாதிப்புகள் இல்லை.

    305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என தெரிவித்தார்.

    • ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 131 பயணிகள் இன்று அதிகாலை சென்னை வந்தனர்.
    • அவர்களை மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    சென்னை:

    கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த கோர 288 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

    சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பயணிகளை அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

    • இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட ரயில்களின் இடிபாடுகள் மற்றும் சிதைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்படுவதால், மறுசீரமைப்பு பணிகள் இரவு வரை தொடர்ந்து வருகின்றன.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
    • மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடக்கம்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

    மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானார்ஜி செல்கிறார். ஹெலிகாப்டரில் புறப்பட்ட மம்தா சம்பட இடத்தில் நிலைமையை பார்வையிட உள்ளார்.பின்னர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    ×