search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continue rain"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    அறந்தாங்கி:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை , அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. சிதலமடைந்த சாலை பகுதிகள் சகதியாக மாறியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. குடிசை வீடுகள் சேதமானதால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். மின்சாரம், குடி நீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    மழை பெய்து கொண்டிருந்த போதிலும் மின் ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர். ஆனாலும் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அந்த பகுதிகளுக்கு மின் கம்பங்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பெய்த மழையாலும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    புயலால் சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து தங்கியிருந்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவர்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    புதுக்கோட்டை-30, ஆலங்குடி-34, கந்தர்வக்கோட்டை-7, கறம்பக்குடி-29, திருமயம்-16.20, அறந்தாங்கி -22.40, ஆவுடையார்கோவில் -26.40, மணல்மேல்குடி-39, இலுப்பூர்-62, குளத்தூர்-7.60, பொன்னமராவதி-15.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 288.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். கஜா புயலில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமாகின.

    50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காணாமல் போயின. சேதமான மற்றும் காணாமல் விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு இன்னும் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்கள் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தற்போது அந்த மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விற்பனை பாதிக்கும் என்பதால் கடலுக்கு இன்னும் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். நாளை முதல் அவர்கள் மீண்டும் மீன் பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #SathanurDam
    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடியாகும். தற்போது அணையில் 96.40 அடி அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 3.249 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    சாத்தனூர் அணையை பொறுத்தவரை தென்பெண்ணை ஆற்றில் வரும் மழை வெள்ளம் கல்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழை நீர்ஆகியவற்றையே ஆதாரமாக உள்ளது.

    தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கல்வராயன் மலை தொடர் பகுதியிலும் தென்பெண்ணை ஆற்றிலும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சாத்தனூர் அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 162 கன அடி நீர் வர தொடங்கி உள்ளது. எனவே நீர்வரத்து படிபடியாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றபடவில்லை. #SathanurDam

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வினாடிக்கு 1556 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4,072 மில்லியன் கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,473 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2,961 மில்லியன் கன அடியாக உள்ளது.

    56 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 46.50 அடியாக உள்ளது.

    நீர் வரத்து 170 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியாக உள்ளது.

    அணைக்கு வரும் 184 கன அடி தண்ணீரில் 181 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாக உள்ளது

    பெரியாறு 1.4, தேக்கடி 5.6, கூடலூர் 2.6, சண்முகாநதி அணை 11, வீரபாண்டி 11, உத்தமபாளையம் 6.4, மஞ்சளாறு 44, சோத்துப்பாறை 44 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியகுளம், தாமரைக்குளம், பாப்பிப்பட்டி கண்மாய்கள், மேல்மங்கலம் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளான 1,825 ஏக்கர் நிலங்களும் லெட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான 1040 ஏக்கர் நிலங்களும் இதனால் பாசன வசதி பெறும். அணை நிரம்பியுள்ளதால் வராக நதிக்கரையோரம் உள்ள பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டும்போது அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடும் சூழல் உள்ளது.
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா, சிக்மகளூர் உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றும் மழை நீடித்தது.

    குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா மடிகேரி ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள சிற்றாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்த வெள்ளம் காவிரியில் வந்து சேர்வதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 883 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 22 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 342 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    124.8 அடி உச்சநீர் மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 82.8 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 86.6 அடியாக உயர்ந்தது.

    இதே போல நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் 4 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. நீர்மட்டம் 100 அடியை தாண்டும் போது அதில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடும் சூழல் உள்ளது.

    இதே போல கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்யும் கன மழையால் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 46.72 அடியாக இருந்த நிலையில் அணைக்கு 17 ஆயிரத்து 921 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 100 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கபினி அணையின் நீர்மட்டம் 12 அடி அதிகரித்திருக்கிறது. இதே நிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் கபினி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலதாக திறக்கும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1800 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 847 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 616 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.94 அடியாக இருந்தது.

    ×