search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector survey"

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாரிகள் வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அவர் மீஞ்சூர் ஒன்றியம், லட்சுமிபுரம் அணைக் கட்டு, ஏ.ரெட்டி பாளையம், சோமஞ் சேரி, ஆண்டார் மடம், தத்தை மஞ்சி, ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் முன்னெச்சரிக்கையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், கயிறு, கம்புகளை பார்வையிட்டார், பின்னர் திருப்பாலைவனம் பேரிடர் மைய கால கட்டிடத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள், கழிவறைகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ஆய்வின் போது, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், ஆரணிஆறு செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகர், குமார், ராம கிருஷ்ணன் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,

    மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
    • காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த தாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ, மாணவி களுக்கும் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவி கள் பயனடைந்து வருகின்ற னர்.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியினை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அறைகளில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும். உணவு வழங்குவதற்கு முன்னர் சாப்பாடு தட்டுகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் தட்டுகள் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். அதேபோல் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும். தண்ணீர் வசதி, சுற்றுப்புற தூய்மையை பராமரிக்க வேண்டும்.

    காலை உணவு தயாரிக்கு ம்போது, அரசு அறிவுறுத்தி யுள்ள வழிமுறைகளை பின்பற்றி சத்தான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்து, பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரண்ம னைபுதூர் பகுதியில், ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி களையும், 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும்,

    கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினை யும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.

    • மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
    • 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.

    மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.

    • மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
    • கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கரட்டுப்பாளை யம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி, மேட்டு நாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், கட்டப்பட்டு வருகிறது.

    லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.52 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெருவில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் மற்றும் மண க்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வளர்ச்சி திட்ட ப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பு றங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி மற்றும் அலு வலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம மேல்மலையனூரில் அமை ந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- 

    வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு துறையினரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதன்படி காவல்துறையினர் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். சுகாதார துறையினர் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளிப்ப தோடு தெருக்களில் கொட்ட ப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்களைக் கொண்டு அவ்வப் போது அகற்ற வேண்டும்.

    மின்சார துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் கோவில் வளாகம் மற்றும் அக்னி குளம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து கோவிலுக்கு அருகில் தற்காலி கமாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சகாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம்சப்- கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் பாலசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மின் நகர் மற்றும் ஆஞ்சிநேயா நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்களிடம் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கபிலர் வீதியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.468 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்ப ட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.173 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணி மற்றும் சக்தி மெயின் ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.699.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய தினசரி அங்காடி கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆஸ்பத்திரி சாலை பகுதி, நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.194.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையப் பணியினையும்,

    தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு நகர் பகுதியில் ரூ.30.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை மேம்பாட்டுப் பணியையும், கம்பர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் சாலையின் தரத்தினையும் என மொத்தம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி நல்லகவுண்டன்பாளையம் இந்திரா நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத பொருள் தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரபு கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளு க்குளி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 25.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பணியினையும், அளுக்குளி கிராம சேவை மையத்தையும்,

    பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பா டுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மகளிர் சுய உதவிக் குழு மூலம், சுழல் நிதி கடன் ரூ.50 ஆயிரம் பெற்று பாக்கு மட்டை தயாரிக்கும் குழுக்க ளின் பணியினையும் என பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.51.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலிங்கியம் ஊராட்சி மல்லிகை நகரில், கோபிசெட்டிபாளையம் வட்டார அளவிலான நர்சரியில் புங்கமரம், பூவரசு, வேப்பமரம், முருங்கை, பப்பாளி, பாதானி, சீதாமரம், மாதுளை, எலுமிச்சை, நாவல், கொய்யா உள்ளிட்ட செடிகள் பதியம் செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், லக்கம்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
    • ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 2 ஆயிரம் மெட்ரிக்டன் குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள்-உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 47.80மெ.டன் (2369 மூடைகள்) அளவுள்ள மிளகாய் வத்தல், 12.3மெ.டன் (1315 பெட்டிகள்) அளவுள்ள புளி, .03மெ.டன் தட்டைப்பயறு விளைபொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று பயனடையலாம் என தெரிவித்தார். ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.16.99 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    • இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக் கப்பட்டு வரும் கோப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவல கங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டி டங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை யூனியன் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×