search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.86 lakhs in"

    • ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணி, ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை புதுப்பிக்கும் பணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கரட்டுப்பாளை யம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணி, மேட்டு நாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், கட்டப்பட்டு வருகிறது.

    லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.52 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள நாற்றுப்பண்ணை, தெற்கு தெருவில் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் மற்றும் மண க்காட்டூர் பகுதியில் ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வளர்ச்சி திட்ட ப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பு றங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர்கள் (பயிற்சி) பொன்மணி, வினய்குமார் மீனா, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி மற்றும் அலு வலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    ×