search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளகாய் வத்தல்"

    • மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
    • ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 2 ஆயிரம் மெட்ரிக்டன் குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள்-உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 47.80மெ.டன் (2369 மூடைகள்) அளவுள்ள மிளகாய் வத்தல், 12.3மெ.டன் (1315 பெட்டிகள்) அளவுள்ள புளி, .03மெ.டன் தட்டைப்பயறு விளைபொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று பயனடையலாம் என தெரிவித்தார். ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ரூ.2.87 லட்சத்திற்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்யப்பட்டது.
    • உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய் வத்தல் ஏலம் நடந்தது. ஏலத்தில் முதுகுளத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் 13 பேர் தாங்கள் கொண்டு வந்த 16.7 குவிண்டால் மிளகாய் வத்தலை ஏலத்திற்கு வைத்தனர். இதனை அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.19 ஆயிரத்து 200-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.16ஆயிரத்து 500-க்கும் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 598க்கு விற்றனர்.

    இந்த ஏலம் குறித்து ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசுகையில், இனிவரும் காலங்களில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்க வரும் போது உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    இந்த வசதியை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி விளை பொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையலாம் என்றார்.

    முதுகுளத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் நூர்ஷிபா, இ-நாம் திட்ட பணியாளர்கள் இந்த ஏலத்தின் போது உடனிருந்தனர்.

    ×