என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Cocaine
நீங்கள் தேடியது "cocaine"
- மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.
- போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரைப் பணயம் வைத்து 246 கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளை குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மெக்சிகோ:
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் 246 கோகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஜப்பானுக்கு கடத்துவதற்காக அளவுக்கு அதிகமாக கோகைன் பாக்கெட்டுகளை விழுங்கியிருக்கிறார். அவற்றில் சில பாக்கெட்டுகள் பிரிந்து, ரத்தத்தில் போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.
மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
உடனே விமானத்தை ஹெர்மோசில்லோ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினர். உடனே அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் நாட்டில் சிறைக்கைதிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வாழைப்பழ பெட்டிகளுக்குள் இருந்து 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Cocaine #Texas
ஆஸ்டின்:
டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #MumabiAirport #Cocaine
புதுடெல்லி:
எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.
மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #MumabiAirport #Cocaine #tamilnews
எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.
மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #MumabiAirport #Cocaine #tamilnews
ரூ.9 கோடி மதிப்புடைய கொகைன் போதைப்பொருளை வயிற்றில் கடத்தி வந்து டெல்லியில் சிக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் சிறையிலடைத்தனர். #DelhiAirport
புதுடெல்லி:
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 22-ம் தேதி கொலம்பியாவில் இருந்து வந்திறங்கிய நபர் பாதுகாப்பு சோதனைக்கருவி வழியாக வரும் போது, அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, அந்த நபரை எக்ஸ்ரே செய்து பார்த்ததில் 66 கேப்சூல்கள் வயிற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அனைத்து கேப்சூல்களும் வெளியே எடுக்கப்பட்டன. ரூ.9 கோடி மதிப்பிலான 900 கிராம் கொகைன் அந்த கேப்சூல்களில் இருந்து எடுக்கப்பட்டது.
இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். #cocaine #delhiairport
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பிரேசில் நாட்டை சேர்ந்த சுமார் 25 வயது பெண்ணான அவரது வயிற்றுக்குள் இருந்த 106 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. 14-ம் தேதியில் இருந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை காவலில் அடைக்கப்பட்டதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட வீரியம் மிக்க இந்த போதைப்பொருளை டெல்லியில் உள்ள ஆப்பிரிக்காவை சேர்ந்த இடைத்தரகர்களிடம் ஒப்படைப்பதற்காக அந்தப் பெண் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. #cocaine #delhiairport
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X