search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலையத்தில் ஒரு கிலோ கொக்கைனுடன் பிரேசில் நாட்டுப் பெண் கைது
    X

    டெல்லி விமான நிலையத்தில் ஒரு கிலோ கொக்கைனுடன் பிரேசில் நாட்டுப் பெண் கைது

    அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். #cocaine #delhiairport
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்து கொண்டிருந்தனர்.

    அப்போது, ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, பிரேசில் நாட்டை சேர்ந்த சுமார் 25 வயது பெண்ணான அவரது வயிற்றுக்குள் இருந்த 106 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. 14-ம் தேதியில் இருந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை காவலில் அடைக்கப்பட்டதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தெற்கு அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட வீரியம் மிக்க இந்த போதைப்பொருளை டெல்லியில் உள்ள ஆப்பிரிக்காவை சேர்ந்த இடைத்தரகர்களிடம் ஒப்படைப்பதற்காக அந்தப் பெண் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  #cocaine #delhiairport
    Next Story
    ×