search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blackheads"

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    • பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
    • ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள்.

    சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை `ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும். ஒவ்வாமை, மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க உதவுகிறது

    `கோஜிக் அமிலம்'. பெரும்பாலான அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து அதில் இருந்தும் கோஜிக் அமிலத்தை தயாரிக்கிறார்கள்.

    `மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் பொது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது. 'டைரோசின்' என்ற அமினோ அமிலத்தின் மூலம்தான் மெலளின் ற்பத்தியாகிறது. கோஜிக் அமிலம், உடலில் டைரோசின் உருவாவதை தடுக்கிறது. இதன்மூலம் மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு, சருமத்தில் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது. கோஜிக் அமிலத்தின் பயன்கள் பற்றிய மேலும் சில விஷயங்கள் இங்கே.

    கரும்புள்ளிகளை நீக்கும்

    முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகம் பொலிவு இழந்து காணப்படும். கோஜிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகள் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கக்கடியவை இந்த அமிலத்தை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களி பூச வேண்டும். அது எளிதாக சருமத்தில் ஊடுருவி மெல்வின் உற்பத்திக்கு காரணமான டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின்  உற்பத்தியை தடுக்கும். இதன்மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், புள்ளிகள் ஆகியவை எளிதாக நீக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சினையும் குறையும்.

    சருமத்தை பிரகாசமாக்கும்

    அடிக்கடி வெயிலில் செல்பவர்களுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டு சருமம் கறுத்துப்போகும். அந்த இடங்களில் கோஜிக் அமிலத்தை பூசும்போது அது ஆழமாக ஊடுருவி சருமத்தின் பலவேறு அடுக்குகளில் இருந்து கருமையை நீக்கும். இதன்மூலம் மீண்டும் சருமம் பிரகாசமாக மாறும்.

    மெலஸ்மாவுக்கு தீர்வாகும்

    கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகம் மற்றும் உடலில் கருத்திட்டுகள் உருவாகும். இந்த நிலையை மருத்துவத்தில் 'மெலஸ்மா' என்று அழைக்கிறார்கள். சிலருக்கு பிரசவத்திற்கு பின்னும் இந்த கருந்திட்டுகள் போகாமல் சருமத்தில் நிரந்தரமாக படித்துவிடும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உண்டு.

    கிருமித்தொற்றை எதிர்க்கும்

    பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றால் முகத்தில் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோஜிக் அமிலம் இவற்றை குணப்படுத்துவதோடு இவற்றால் சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் அதுமட்டுமில்லாமல் அவற்றையும் குணப்படுத்தும். கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசர்களையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    • வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும்.
    • சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    வைட்டமின் சி நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் நம்முடைய சருமத்துக்கும் வைட்டமின் சி அவசியம். இது சருமத்தில் உண்டாகும் இன்ஃபிளமேஷன்கள் முதல் தீவிரமான சருமப் பிரச்சினைகள் வரை தீர்க்கச் செய்யும். இந்த வைட்டமின் சி சீரமில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருக்கும். நம்முடைய உடலுக்கு எப்படி ஆக்சிடென்ட்கள் தேவையோ, அதேபோல தான் சருமத்திற்கும் வைட்டமின் சி அவசியம்.

    சருமத்தில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புறஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் இந்த வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சருமத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படுவது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது சருமம் அதிக வறட்சி அடையும். சருமத்தை நீரேற்றத்துடனும் மென்மையாகவும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் இல்லாமல் இளமையாகவும் வைத்திருப்பதில் கொலாஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க வைட்டமின் சி சீரம் உதவி செய்கிறது.

    சருமம் நெகிழ்வுத் தன்மையுடனும் இளமையாகவும் இருக்க வேண்டுமென்றால் உங்களுடைய பகல் நேர சரும பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள்.

    சருமத்தில் கரும்புள்ளிகள், தடிப்புகள், பருக்கள் ஆகியவை இல்லாமல் தெளிவான க்ளியர் சருமத்தையும், பளபளக்கும் சருமத்தையும் பெறுவதற்கு வைட்டமின் சி மிக முக்கியம். குறிப்பாக வைட்டமின் சி -யில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தின் மேல் அடுக்குகளில் உள்ள கருமை, சன் டேன் ஆகியவற்றை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

    குறிப்பாக சருமத்தில் ஆங்காங்கே காணப்படும் கருந்திட்டுக்கள், பெண்களுக்கு 40 வயதிற்குமேல் ஏற்படும் மங்கு பிரச்சனை, சூரிய வெப்பத்தால் ஏற்படும் சன் டேன் அதிகரிப்பதால் ஏற்படும் பிக்மண்டேஷன்கள் ஆகியவற்றை குறைத்து சருமத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள வைட்டமின் சி சீரம் உதவுகிறது.

    உடலுக்கு நீர்ச்சத்து எவ்வளவு அடிப்படையோ அவசியமோ அதே அளவிற்கு சருமமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்தும் போது சருமம் அதிக நீர்ச்சத்துடன் இருக்கும்.

    வைட்டமின் சி சீரமில் நீர்ச்சத்துக்கான மூலக்கூறுகள் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு தோலின் வறட்சியைப் போக்கி நல்ல மாய்ஸ்ச்சரைசராகவும் செயல்படும்.

    இயற்கையாகவே சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உற்பத்தியாகும். அப்படி இறந்த செல்கள் நீங்கும்போது சருமத்தில் சின்ன சின்ன புள்ளிகள், கருமை, தோலுரிதல், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக நாம் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதற்கு ஸ்க்ரப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது அழுத்தி தேய்ப்பதால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றை சரிசெய்து சருமம் சிவந்து போதல், தடித்தல் போன்ற பிரச்சினைகளை மிக வேகமாக ஆற்றும் ஹீலிங் பண்பு வைட்டமின் சி சீரமில் அதிகமாக இருக்கிறது.

    சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்களின் தாக்கத்தால் சருமத்தில் நேரடியான பாதிப்புகள் உண்டாகும். சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க தவறினால் அது சருமத்தில் சிறு சிறு பாதிப்புகள் தொடங்கி, சரும புற்றுநோய் வரை கொண்டு போய்விடும். அதனால் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதோடு சேர்த்து வைட்டமின் சி சீரமும் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்திற்கு டபுள் புரொடக்ஷனை கொடுக்கும். புற ஊதா கதிர்களின் தாக்கத்தின் தன்மையை குறைத்து இளமையாக வைத்திருக்கச் செய்யும்.

    ஸ்கின் டோன் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. முகம் மற்றும் சருமத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு நேரத்திலும் மற்ற இடங்கள் கருமையாகவும் அதாவது வாயைச் சுற்றிய பகுதிகள், கண்ணுக்கு அடியில், கைகளில் முட்டிக்கு மேல் என சில பகுதிகள் கருமையாகவும் மற்ற பகுதிகள் வேறு நிறத்திலும் என இருப்பவர்கள் மிக அதிகம்.

    இந்த பிரச்சினையை சரிசெய்வதில் வைட்டமின் சி சீரம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வைட்டமின் சி சீரமில் உள்ள ப்ளீச்சிங் பண்பு சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமை, கருத்திட்டு ஆகியவற்றைச் சரிசெய்து சருமத்தை ஒரே நிறமாக வைத்திருக்க உதவி செய்யும். எனவே சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனையை சரிசெய்ய உதவும்.

    வைட்டமின் சி சீரமை உங்களுடைய சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.
    சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும். இந்த பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும்.  மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த பிளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 1
    ஓட்ஸ் - 2 மேஜைக்கரண்டி
    தேன் - 1 மேஜைக்கரண்டி

    செய்முறை

    வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.

    ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும்.  ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது. 
    சில பெண்களுக்கு மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுக்கும். இன்று எளிய முறையில் மூக்கின் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் கிரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

    இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

    இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

    இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.

    மூக்கை சுற்றியுள்ள இடங்களில் பிளாக்ஹெட்ஸ் தொல்லை கொடுக்கும். சரியான முகப்பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக்கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது.
    மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக்ஹெட்ஸ் தொல்லை கொடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக்கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது.

    பேக்கிங் சோடாவில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை உள்ளது. மேலும் இது ஸ்கின் பராமரிப்புக்கு ஏற்றது. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி பிளாக் ஹெட்ஸ் இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவவும். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சீக்கிரமே கருமை மறையும்.

    இலவங்கப்பட்டைக்கு அதிகளவு ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 தேக்கரண்டி பட்டை பொடி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்யவும்.

    சர்க்கரை ஒரு அருமையான ஸ்கிரப். தேன் அழுக்கை அகற்றி தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது. மூன்று தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

    முட்டையின் வெள்ளைக் கரு தோலை இறுக்கமாக்கும். அதோடு சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவும். முகத்திற்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து சருமம் பளபளக்கும். 
    ×