search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூக்கு"

    • பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் போயம்பாளையம் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தோட்டத்துப்பாளையம் ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பள்ளி தலைவர் பட்டுலிங்கம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஸ்ரீ சரண் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முழுநேர காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் பழனிசாமி மற்றும் டாக்டர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இதில் பள்ளியில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 250 பேருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் ஏ.பி.எஸ். பள்ளி தாளாளர் சரவணக்குமார், நிர்வாக அலுவலர் யோகேந்திரன், பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏ.பி.எஸ். பள்ளியில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளிலும், அதைத்தொடர்ந்து மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் என்று டாக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

    • குழந்தையின் மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது.
    • குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

    பெரியவர்களை போல குழந்தைகளால் தாங்களாகவே மூக்கை சுத்தம் செய்துகொள்ள முடியாது. அழுக்காகதான் இருக்கும். சில குழந்தைகள் தன் கைகளால் மூக்கைத் தேய்க்கவும் செய்வார்கள். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யாமல் அப்படியே விடக்கூடாது. இது குழந்தைக்கு நல்லதல்ல. அழுக்கு அடைத்துள்ள மூக்கால் குழந்தை மூச்சு விட மிகவும் சிரமப்படும். மூக்கில் உள்ள அழுக்கால்,

    மூச்சு விடுவதில் சிரமம்

    சத்தமான மூச்சு

    தூக்கம் சரியாக வராமல் தவிப்பார்கள்

    தொற்றுக்கள் உருவாகவும் வாய்ப்பு அதிகம்.

    குழந்தையின் மூக்கை அடிக்கடி, தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகள் முழுக்க முழுக்க பெற்றோரை சார்ந்திருப்பதால் அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் பெற்றோரின் கையிலே இருக்கிறது. ஆகையால், குழந்தையை முறையாக கவனிக்கத் தவறி விடாதீர்கள். சுத்தமான குழந்தை என்றும் ஆரோக்கியமான குழந்தை என்பதை நினைவில் வையுங்கள். ஆரோக்கியமான குழந்தை என்றும் மகிழ்ச்சியான குழந்தையாக இருக்கும்.

    குழந்தையின் மூக்கை சுத்தம் செய்வதற்கான டிப்ஸ்

    கடையில் விற்கும் வேப்பரைசர் (Vapourizer) வாங்கிப் பயன்படுத்துவதற்கு, அவற்றால் எப்படி சுத்தம் செய்வது என மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தை மூக்கில் உள்ள அழுக்கு, மிகவும் கடினமானதாக இருந்தால், மூக்கில் ஊற்றப்படும் டிராப்ஸ்களை (Saline drops) பயன்படுத்தலாம். மூக்கில் உள்ள அழுக்கை உங்களால் வெளியே எடுக்க முடியவில்லை என்றால், சிறிதளவு வேப்பர் ரப்பை மூக்கு, கழுத்து பகுதியில் லேசாகத் தடவி விடுங்கள்.

    இதனுடன் உள்ளங்காலிலும் வேப்பர் ரப் தடவி சாக்ஸ் அணிந்து விடுங்கள். காலையில், மூக்கடைப்பு நீங்கி, அழுக்கு மூக்கில் நீர் போல வழிந்து ஒழுகிவிடும். நீங்கள் அதை எளிதில் சுத்தம் செய்து விடலாம். குழந்தைக்கு எப்போதும் அளவான வேப்பர் ரப்பை பயன்படுத்துங்கள். அதிகமாகப் பயன்படுத்த கூடாது. குழந்தைக்கு எரிச்சல் உண்டாகலாம்.

    ×