search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayodhya case"

    அயோத்தி நிலம் வழக்கு தொடர்பான விசாரணையில், மத்தியஸ்தம் குழுவுக்கு ஆகஸ்டு 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது சுப்ரீம் கோர்ட். #Ayodhyacase #SupremeCourt
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர்.

    மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் கால தாமதம் ஆனது. அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 
     
    இதற்கிடையே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடமும் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தம் குழுவினர், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு கோரினர்.

    இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மத்தியஸ்தம் குழுவினருக்கு ஆகஸ்டு 15-ம் தேதிவரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. #Ayodhyacase #SupremeCourt
    பிரச்சினைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரிக்க உள்ளது. #Ayodhyacase #SupremeCourt
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர்.

    மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் கால தாமதம் ஆனது. அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். 

    இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடமும் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை இன்று சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனையடுத்து பிரச்சினைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரிக்க உள்ளது. 

    அயோத்தியில் ராமஜென்ம பூமி என கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. #Ayodhyacase #SupremeCourt
    அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழு, பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக வழக்கின் மனுதாரர்கள் நேற்று இந்த குழு முன் ஆஜரானார்கள். #Ayodhya
    பைசாபாத்:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி நியமித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 3 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த குழு ஒரு வாரத்துக்குள் சமரச பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 8 வாரங் களுக்குள் அதை முடித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையை உத்தரபிரதேசத்தின் பைசாபாத்தில் நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு தங்கள் உத்தரவில் கூறியது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டது. இதற்காக பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் ஒரு அறையை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. பின்னர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு இந்த வழக்கின் மனுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்காக நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் நேற்று முன்தினம் பைசாபாத் சென்றனர். பின்னர் நேற்று அவர்கள் அவாத் பல்கலைக்கழகத்தில் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர். இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது. இதற்காக சமரசக்குழுவினர் 3 நாட்கள் பைசாபாத்திலேயே தங்கி இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சமரச பேச்சுவார்த்தையை முன்னிட்டு அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறு பைசாபாத் மாவட்ட நிர்வாகத்துக்கு சமரசக்குழுவினர் அறிவுறுத்தி இருந்தனர். அத்துடன் அயோத்தி வழக்கின் மனுதாரர்கள் மற்றும் அவர்களது வக்கீல்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி இருந்தனர்.

    அதன்படி அவாத் பல்கலைக்கழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் சமரசக்குழு முன் ஆஜராவோரை தவிர வேறு யாரையும் போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என இந்த நாட்டின் குடிமகனாக விரும்புகிறேன் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyacase #RaviShankarPrasad
    பாட்னா:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



    ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மத்திய சட்டத்துறை மந்திரி  ரவிசங்கர் பிரசாத் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ‘ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். இவ்விவகாரம் சட்டப்படித்தான் தீர்க்கப்பட வேண்டும். எனினும், இந்த சர்ச்சை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.

    கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. எனவே, இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் கூற வேண்டுமானால் இந்த விவகாரத்துக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    சபரிமலை வழக்கு உள்பட சில விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் மிக அவசரமான விசாரணைகளை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில போலீசார் பலரை கைது செய்த வழக்கு, மெஜாரிட்டியே இல்லாத எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. இதெல்லாம் நல்ல விஷயம்தான்.

    இதேபோல், நாட்டு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கும் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார். #Ayodhyacase #RaviShankarPrasad
     
    நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

    முன்னதாக கடந்த 10-ந் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி யு.யு.லலித், வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். எனவே புதிய அமர்வு அமைப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் மற்றொரு நீதிபதி என்.வி.ரமணாவும் அமர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.  #AyodhyaCase #SupremeCourt 
    அயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. கவலை தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 
     
    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார். அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. வருத்தம் தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வில் இருந்து நீதிபதி யூ.யூ.லலித் விலகியதால் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #SC #AyodhyaCase #JusticeUULalit
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.



    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார்.

    இன்று காலை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னர் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு முஸ்லிம் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தாவான், ‘இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான யூ.யூ.லலித் கடந்த 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பில் ஆஜரானவர்’ என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் சுட்டிக்காட்டினார்.

    அதனால், இந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என நான் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதைகேட்ட நீதிபதி யூ.யூ.லலித் இந்த அமர்வில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என உடனடியாக தெரிவித்தார்.

    அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #SC #AyodhyaCase #JusticeUULalit 
    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 10-ம் தேதி முதல் 5 பேர் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த புதிய அமர்வு வரும் 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase 
    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #AyodhyaCase
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். புதிதாக அமைக்கப்படும் அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.



    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அயோத்தி வழக்கை விசாரிக்கும் தகுதிவாய்ந்த புதிய அமர்வு குறித்து ஜனவரி 10-ம் தேதி விசாரணை நடத்தி, அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    இன்று ஒரு நிமிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றது, எந்த வாதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, அயோத்தி வழக்கை தினந்தோறும் விசாரணை நடத்த வலியுறுத்தி வழக்கறிஞர் ஹரிநாத் ராம் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AyodhyaCase
    ×