search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது - ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, ஆதங்கம்
    X

    அயோத்தி வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது - ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, ஆதங்கம்

    அயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. கவலை தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 
     
    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

    இந்த அமர்வு 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யூ.யூ.லலித் இன்று தெரிவித்தார். அவர் விலகியதால் இந்த அமர்வுக்கு புதிதாக இன்னொரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி லலித் விலகியதால், வழக்கு இழுத்தடித்துக் கொண்டே வருவது துரதிருஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. வருத்தம் தெரிவித்துள்ளது. #SC #AyodhyaCase #JusticeUULalit #RSS #VHP
    Next Story
    ×