search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actors"

    • பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி?

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் ஆர்.டி.ஓ ராஜா தலைமையில் நடைபெற்றது. உதவி வனபாதுகாவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் மீனா, தோட்டக்கலை உதவி இயக்குனர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், ரேஞ்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு வனத்துறையிடம் மனுக்கள் அளித்தும் அவற்றின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

    மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் காய்கறி பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. கொடைக்கானல் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து நடிகர்கள் வீடு கட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி? அரசு நிலத்தை மறித்து சாலை அமைத்துள்ளனர். அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    பேத்துப்பாறையை சேர்ந்த ஊர்தலைவர் மகேந்திரன்தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜே.சி.பி வாகனங்களை கொண்டு சாலை அமைத்துள்ளார். நடிகர் பாபிசிம்ஹா அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருகிறார். விதிகளை மீறி மின்இணைப்பு பெற்றுள்ளார். 24 மணிநேரமும் ஜே.சி.பி வாகனங்களை இயக்கி வேலைசெய்துவரும் நடிகர்கள் மீதும், இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • ஜூலை மாதம் 15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப் பட்டி மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் மாபெரும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டா டப்பட்டு வருகிறது.

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி கள் பல்வேறு போட்டி கள் நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்னகமே போற்றும் வகையில் சரித்திர சான்று படைக்கும் வகையில் மதுரையில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    மதுரையில் மற்றொரு அடையாளமாக வரவுள்ள சிறப்பு மிக்க இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூலை மாதம்

    15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒரு மாநாடு போல் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், மதுரையே விழா காணும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை பசுமலையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் , பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், த்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறா ர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா. ரஞ்சித் இதை கூறியுள்ளார். #pranjith

    சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    “சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

    மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

    வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு... என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றது இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றிய ஸ்டாலின், தலைவராக வருவது தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



    பா.ஜனதா கட்சி என்றைக்கும் நடிகர்கள் பின்னால் சென்றதில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்ன என்றால் கர்நாடகத்திடம் இருந்து முறைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவது மட்டும் தான்.

    அந்த தண்ணீரை சேமிப்பதா? அல்லது கடலில் கலக்க விடுவதா? பாசனத்துக்கு விடுவதா? என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியாக. முதல்நிலை கூட்டணியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    ×