search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல் வீரர்கள்"

    • நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்–போது அவர் கூறியதாவது:-

    வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் இளைஞரணி பட்டியல் இறுதி செய்யப்பட்டதில், தமிழகத்திலேயே அதிக அளவில் பெயர் கொடுத்த முதல் 2 மாவட்டங்களில் ஒன்று நாமக்கல், மற்றொன்று சேலம்.

    இதையொட்டி வருகிற 18-ந் தேதி காலையில் சேலத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டம் வருகை தருகிறார். அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது. இந்த திட்டங்களுக்கு விதித்திட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.

    மேலும் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், கபிலர்மலை, நாமக்கல் ஒன்றியங்களை இணைத்து ரூ.750 கோடி மதிப்–பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது என்றும், செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • ஜூலை மாதம் 15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

    இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப் பட்டி மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் மாபெரும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டா டப்பட்டு வருகிறது.

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி கள் பல்வேறு போட்டி கள் நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்னகமே போற்றும் வகையில் சரித்திர சான்று படைக்கும் வகையில் மதுரையில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    மதுரையில் மற்றொரு அடையாளமாக வரவுள்ள சிறப்பு மிக்க இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூலை மாதம்

    15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒரு மாநாடு போல் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், மதுரையே விழா காணும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை பசுமலையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் , பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், த்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறா ர்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×