என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செயல் வீரர்கள் கூட்டம்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
- ஜூலை மாதம் 15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப் பட்டி மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகம் போற்றும் மாபெரும் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டா டப்பட்டு வருகிறது.
மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி கள் பல்வேறு போட்டி கள் நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தென்னகமே போற்றும் வகையில் சரித்திர சான்று படைக்கும் வகையில் மதுரையில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
மதுரையில் மற்றொரு அடையாளமாக வரவுள்ள சிறப்பு மிக்க இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூலை மாதம்
15-ந்தேதி திறந்து வைத்து பெருமை சேர்க்க உள்ளார். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒரு மாநாடு போல் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், மதுரையே விழா காணும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை பசுமலையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் , பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், த்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறா ர்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்