search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 youths arrested"

    • தேவகோட்டையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தேவகோட்டை நகரில் இளைஞர்களிடையே கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

    இதனை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசாா தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் மற்றும் போலீசார் வாகன சோதனையை ஈடுபட்டனர்.

    அப்போது பழைய சருகணி ரோடு இம்ரான் நகரை சேர்ந்த சலீம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு சேக் அப்துல்லா மகன் முகமது யூசுப் (23) ஆகிய இருவரும் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்தார்கள்? என்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் மொடக்குறிச்சி, சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    இதில் அவர்கள் சாவடி ப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதி யை சேர்ந்த வடிவேல் என்கிற துரை (49). ஆலங்காட்டுவலசு நேரு வீதியை சேர்ந்த செந்தில்குமார் (40) எனவும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து 53 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தகர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து சஞ்சய் அந்த சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறப்படு கிறது.

    இது குறித்து சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமாருக்கு தகவல் கிடை த்தது. இதையடுத்து அவர் கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். ஆனால் சஞ்சய் தலை மறைவாகி விட்டார். போலீ சார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் சஞ்சயை பிடித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவரை போலீ சார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதை யடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டி பாளை யம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    இதையடுத்து தனசேகரை போலீசார் போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
    • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் விசாரணையில் ஒருவர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (20), மற்றொருவர் சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியை சேர்ந்த குமார்(19) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 20). இவர் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து பள்ளியில் கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.எனவே போலீசார் இவரை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஐவதக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (41). இவர் கலவரத்தினை தூண்டு விதமாக செயல்பட்டார். எனவே சிறப்பு புலனாய்வு குழு போலீசார்வீடியோ காட்சி களின் அடிப்ப டையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது

    திருச்சி:

    தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கி விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் வசம் இருந்து 3 கிலோ கஞ்சா செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா கடத்தி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


    • ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
    • 7 கிலோ பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய ஒரிசா மாநில 2 வாலிபர்கள் ரெயில்வே போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படையினர் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1 வது பிளாட்பாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் சோதனை செய்தபோது சீட்டு எண் 4 ல் அமர்ந்து இருந்த சந்தேகத்தின் பேரில் 2 வாலிபரின் உடமைகளை சோதனை செய்யும் போது கள்ளத்தனமாக கருப்பு கலர் பையில் 7 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிய வந்தது

    மேலும் கஞ்சா கடத்திய வாலிபர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் பலாஸ்கீர் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை பயணம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ரெயில்வே போலீசார் இவரை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒரிசா மாநிலம், பெல்பாரா கடம்படா பகுதியை சேர்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் சுஜித் நாக் (வயது 29) மற்றொருவர் கசல்பூர் பகுதியைச் சேர்ந்த புராணசந்திர பகா என்பவரின் மகன் பிபேகானந்தா பகா (வயது 31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஜோலார்பேட்டை ரெயில் போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    இதனை அடுத்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஒரிசா மாநில 2 வாலிபர்கள் சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவின் மதிப்பு 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் பள்ளப்பட்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு பிரபு (வயது 28) என்ற வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி செல்ல முயன்றனர்.இதைக் கண்ட பிரபு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 வாலிபர்களை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாமக்கல் மாவட்டம் பட்ட ணம் அருகில் உள்ள பர மேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் செல்வ ராஜ் (20) மற்றும் சிட்டிபாபு மகன் அர்ஜூன் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
    • கஞ்சா பொட்டலங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் வில்லரசம்பட்டி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த குமார்(20), நவீன் (20) என தெரியவந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்தபோது அவர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தயை சென்னியப்பன் (58) என்பதும் 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

    அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்த சென்னியப்பனை கைதுசெய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×