என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளுடன் வந்த"
- வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
- இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த 2 வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் ஒருவர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (20), மற்றொருவர் சேலம் மாவட்டம் உடையாபட்டி பகுதியை சேர்ந்த குமார்(19) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்