search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிகளை"

    • சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து சஞ்சய் அந்த சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறப்படு கிறது.

    இது குறித்து சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமாருக்கு தகவல் கிடை த்தது. இதையடுத்து அவர் கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். ஆனால் சஞ்சய் தலை மறைவாகி விட்டார். போலீ சார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் சஞ்சயை பிடித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவரை போலீ சார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதை யடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டி பாளை யம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    இதையடுத்து தனசேகரை போலீசார் போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×