என் மலர்
உலகம்
- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது.
துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.
- கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.
அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் குறைவு என கூறப்படும் நிலையில் 22 சக்கர கனரக வாகனத்தை ஒரு பெண் ஓட்டி அசத்தியுள்ளார். துபாயை சேர்ந்தவர் பவுசியா சஹுரான். 22 வயதான இவர் பிறக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இவர் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்தார். வணிக வரி துறையில் பட்டம் பெற்ற இவர் ஆணுக்கு நிகராக பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.
துபாயில் கனரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவது சுலபமல்ல. 2013-ம் ஆண்டு முதல் முறையாக இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்ற இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகன உரிமம் பெற முயற்சி செய்தார். கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.
ஆனாலும் தனது விடா முயற்சியால் முதல் முயற்சியிலேயே கனரக வாகன ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். புஜாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக சேர்ந்த இவர் 2 மற்றும் 3 அச்சுகள் கொண்ட 22 சக்கர கனரக வாகனத்தை ஓட்டி அசத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கனரக வாகனம் ஓட்டுவது சாதாரணமாக கார் ஓட்டுவது போன்று அல்ல. நீண்ட தூர பயணத்தில் முழு கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அதே போல டீசல், தண்ணீர் மற்றும் டயரில் போதிய அளவு காற்று இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
- முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.
உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர் அவர்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2 முயற்சிகள் நடந்து, 2 பேர் துப்பாக்கிகளுடன் கைதானதாக டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இன்று காலை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டொனால்டு டிரம்ப் உயிருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து எலான் மஸ்க் இந்த பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.
- அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
- சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது.
மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவை களில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.
அந்த வகையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளது.
இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டாலர்கள்.
இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்!

அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
இது மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.
தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.
இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.

ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.
இந்த பூமியில், சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது. ஆனால் சிலருக்கோ. குடிக்கும் நீருக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணம் செலவழிக்க முடிகிறது. அதையும் கூட தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நம் உலகமே உள்ளது!
- குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார்.
- பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது.
துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல.
- வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

ஆபிரகாம் லிங்கன்
1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வில்லியம் மெக்கின்லே
1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தியோடர் ரூஸ்வெல்ட்
1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்
1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.

ஜான் எப்.கென்னடி
1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது

ராபர்ட் எப்.கென்னடி
ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் வாலஸ்
1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.

ஜார்ஜ் போர்ட்
1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.

ரொனால்டு ரீகன்
1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.
- கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
- வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.
இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

- கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.
பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் ரஃபா நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 8 மாதங்களாக நடக்கும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 38,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் கான் யூனிஸ் பகுதியில் பதுங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு இன்டலிஜென்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டாரா என்று உறுதிசெய்யப்படவில்லை.

தற்போது 58 வயதான 'முகமது டெய்ஃப்' என்று அழைக்கப்படும் முகமது டெய்ஃப் இப்ராஹிம் அல் மஸ்ரியை கொல்ல முயற்சித்து இஸ்ரேல் இதுவரை 7 முறை தாக்குதல் நடத்தி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடந்துள்ள தாக்குதல் அவர் மீதான எட்டாவது கொலை முயற்சி ஆகும். முகமது டெய்ஃப் ஐ கொல்வது இந்த போரில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக உள்ளது.
1948 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக பெருமபாலான பாலஸ்தீன மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குளேயே அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அப்படி கான் யூனிஸ் நகரில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த தாய் தந்தைக்கு 1965 ஆண்டில் அகதி முகாமில் வைத்து பிறந்தவர் முகமது டெய்ஃப். காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்ற டெய்ஃப் 1987 வாக்கில் அப்போதைய பாலஸ்தீனிய இளைஞர்கள் பலர் செய்ததைப் போலவே தங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை எதிர்க்க உருவான ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார்.

தற்போதய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக இருக்கும் டெய்ஃப் ராணுவ விவகாரங்களில் திறனுடையவராக இருந்தார். 1989 இல் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அதன்பின்னர் 90 களில் அமைதிப் பேசுவார்த்தையை ஏற்காமல் ஹமாஸ் தலைவர்களை படுகொலை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் பல தற்கொலை தாக்குதலைகளை திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் மீதான இஸ்ரேலின் கடந்தகால தாக்குதலைகளில் தனது ஒரு ஒரு புற கண்ணை டெய்ஃப் இழந்ததாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல முறை படுகாயமடைந்து மீண்டுள்ளார் டெய்ஃப். சிலர் அவர் வீல் சேரில் தான் இருப்பதாக கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் முகமது டெய்ஃப் இன் மனைவி, 7 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ரகசிய சுரங்கபாதைகள் அமைப்பது, ராக்கெட்டுகள் உருவாக்குவது, வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என ஹமாஸின் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் முகமது டெய்ஃப். இதன் உச்சமாகவே கடந்தஅக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.

முகமது டெய்ஃப் தனது 20 களில் இருந்த புகைப்படமும், சமீபத்திய புகைப்படம் ஒன்றும், தாக்குதலுக்கு பின் கிடைத்த அவரின் ஆடியோ செய்தியில் உள்ள குரல் மட்டுமே வெளியுலகிற்கு அவரைப் பற்றி கிடைத்த சொற்ப ஆதரங்களாகும். இந்நிலையில் 90 பேரைக் கொன்று அவர் மீது இஸ்ரேல் நடத்திய 8வது கொலை முயற்சியில் அவர் உயிரிழந்தாரா என்பதும் மர்மமாகவே உள்ளது.
- குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் உள்ளார்.
- பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ம் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூட்டில் டொனால்டு டிரம்ப் காதில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
Footage showing the Reaction of the U.S. Secret Service Counter-Sniper Team who Eliminated the Shooter, the Moment that Shots rang out at the Trump Campaign Rally in Butler, Pennsylvania. pic.twitter.com/1ni7L1Makp
— OSINTdefender (@sentdefender) July 14, 2024
- அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தெய்ஃப் முகமது.
- சுரங்கத்தில் மறைந்து இருந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. எல்லையை ஒட்டியுள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் காசாவின் தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்தியது.
ரஃபா நகருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கான் யூனிஸ் நகர் இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. அங்கு ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டியதாக கூறியது. பின்னர் அங்கு பாதுகாப்பான ஒரு பகுதியை உருவாக்கியதாக இஸ்ரேல் கூறியது. ரஃபா பகுதியில் இருந்து மக்கள் அந்த பகுதிக்க செல்லுமாறு எச்சரித்தது.
இந்த நிலையில் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ஃப் எனக் கருதப்படுகிறது. இவர் கான் யூனிஸ் அருகே உள்ள அல்-மவாசி பகுதியில் சுரங்கத்தில் மறைந்து இருந்ததாக தெரிகிறது.
இதை அறிந்து கொண்ட இஸ்ரேல் அந்த பகுதியில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீது ஆர்வம் காட்டவில்லை என்பது காண்பிக்கிறது என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், 289 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்தார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
முகமது தெய்ஃப் இஸ்ரேலின் தேடப்படும் பட்டியலில் முக்கிய நபராக இருந்தார். இஸ்ரேலின் பல தாக்குதலில் உயிர்தப்பினார். தற்போதைய இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா? என்பது தெளிவாகவில்லை.
- உக்ரைனின் இரண்டு டிரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தது.
- ரஷியாவின் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்தது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியாவின் தெற்மேற்கில் உள்ள ரோஸ்டவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. சுமார் 2100 சது அடிக்கு அளவிற்கு தீ பரந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும் இரண்டு டிரோன்கள் பறந்து வந்த நிலையில் ரஷியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் அவற்றை இடைமறித்து அழித்துள்ளது.
அதேவேளையில் ரஷியாவின் ஐந்து டிரோன்களில் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்து அழித்துள்ளது. ஒரு விமானம் பெலாரஸ் திசையில் உக்ரைன் வான்வெளியை விட்டு வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விவாகரத்து அல்லது கணவர் இறந்த நான்கு மாதத்திற்கு பிறகுதான் மறுதிருமணம் செய்து கொள்ள முடியும்.
- இம்ரான் கானின் மனைவியின் முன்னாள் கணவர் திருமணம் செல்லாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டார். இம்ரான் கானின் 3-வது திருமணம் இதுவாகும்.
ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக அதாவது விவாகரத்து அல்லது கணவன் இறந்த பிறகு நான்கு மாதங்கள் காத்திருக்காமல் அதற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாக புஷ்ரா பிபியின் கணவன் வழக்கு தொடர்ந்தார். மேலும் இம்ரான் கான்- புஷ்ரா பிபி திருமணம் செல்லாது என உத்தரவிடக்கோரியும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இம்ரான் கான்- புஷ்ரா பிபி ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து கூடுதல் மாவட்ட செசன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அஃப்சல் மஜோகா என்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கு நடைபெற்றது. இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பை மதியம் தெரிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி இன்று மதியம் தீர்ப்பை வாசித்தார். அப்போது இம்ரான் கான்- புஷ்ரா பிபியை விடுவித்து உத்தரவிட்டார்.
மேலும், மற்ற வழக்குகளில் இவர்கள் தேடப்படவில்லை என்றால் உடனடியாக ஜெயிலில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தோஷாகானா ஊழல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிப்ஹெர் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான திருமண வழக்கில் மட்டும் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். தற்போது இந்த வழக்கிலும் விடுதலை பெற்றுள்ளதால் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.
புஷ்ரா பிபி தனது முன்னாள் கணவர் மனேகாவை விவாகரத்து செய்து 2018-ல் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். புஷ்ரா பிபி- மனேகாவின் 28 வருட திருமண வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






