என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெற்றி பெற்ற பிறகு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாக குற்றச்சாட்டு.
- பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த போட்டி நடுவருக்கு ஐசிசி உத்தரவு.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் அத்துமீறல், இந்தியாவின் பதிலடி என இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டைபெற்று, இன்னும் இருநாட்டு உறவுகள் மேம்படாத நிலையில் இந்த போட்டி தேவையா? என்ற கேள்வி எழும்பியது.
ஆனால், இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை மத்திய அரசு ஆதரிக்காது. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடரில் இந்தியா பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
இருந்தபோதிலும் போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும்போதும் கைக்குலுக்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது "சரியான சந்தர்ப்பம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய எங்கள் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்கள் அரசு, BCCI இன்று இணைந்துள்ளோம். நாங்கள் இங்கு ஜஸ்ட், போட்டியில் விளையாட வந்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது அரசியல் தொடர்பான கருத்துகளை வீரர்கள், கேப்டன்கள் வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்தினால் அது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறுவதாகும். சூர்யகுமார் நன்னடத்தை விதியை மீறியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சனை விசாரணை நடத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதை ரிச்சி ரிச்சார்ட்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிசிசிஐ சிஓஓ ஹெமங் அமின் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு மானேஜர் சம்மேர் மலாபுர்கர் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பெங்களூரு வெளிப்புற ரிங் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்.
- விப்ரோ வளாக சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கடிதம்.
பெங்களூருவின் வெளிப்புற ரிங் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு சில கி.மீ. தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆகிறது. இதற்கு கர்நாடக அரசு ஒரு நிரந்தரமாக தீர்வை காண முடியாமல் தவித்து வருகிறது.
விப்ரோ நிறுவனத்திற்கு சர்ஜாபூரில் வளாகம் உள்ளது. இந்த வளாகளத்தில் வாகனங்கள் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாகிய ஆசிம் பிரேம்ஜி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஆசிம் பிரேம்ஜி சித்தராமையாகவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். நாங்கள் சர்ஜாபூரை வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளோம். உலகளாவிய சேவை பணிகளுக்கான அந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடுமையான அணுகுதல் கட்டுப்பாடு உள்ளது.
பொதுப் பாதைக்காக அல்லாமல் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்பதால், குறிப்பிடத்தக்க நிர்வாகம் மற்றும் சட்டரீதியான சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் ஒரு நிலையான, நீண்டகால பயனுள்ளதாக தீர்வாக இருக்காது என பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
- நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
- வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-
செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.
விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
- இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
வங்கதேச அணி வெற்றி பெற்றால் வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? போட்டியாகும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் ஜாகர் அலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
- நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:-
நான் படிக்கிற வயதில் ஒரு மும்மொழி ஒன்றை சொல்லுவார்கள். கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாலும் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது. கல்வியை தன்மானத்திற்கு இணையாக கருத வேண்டும்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிங்க.. படிங்க.. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். என்று நம் முதல்வர் சொல்வதை கேட்டு கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் கிடைக்கக்கூடிய சலுகைகளை பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.
- போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
- கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.
இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.
இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் விராட் கோலியின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2024-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 231.1 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2023-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியனாக இருந்தது.
2 ஆம் இடத்தில உள்ள பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 170.7 மில்லியன் டாலராகும். 3 ஆம் இடத்தில உள்ள ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 145.7 மில்லியன் டாலராகும். கடந்தாண்டை விட ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு இந்தாண்டு 21% உயர்ந்துள்ளது.
116.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட் 4 ஆம் இடத்திலும் 112.2 மில்லியன் டாலர் மதிப்புடன் சச்சின் தெண்டுல்கர் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் எம்.எஸ்.தோனி 7 ஆம் இடத்திலும் 48.4 மில்லியன் டாலர் மதிப்புடன் ரோகித் சர்மா 17 ஆம் இடத்திலும் 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் ஹர்திக் பாண்ட்யா 20 ஆம் இடத்திலும் 38.1 மில்லியன் டாலர் மதிப்புடன் பும்ரா 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் சிஸ்டத்தை இந்தியா சஸ்பெண்ட் செய்தது.
- இந்தியாவுக்கான நீரை வேறு வழிகளில் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த நிலையில் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சிந்து நதி நீர் அமைப்பில் (பல ஆறுகள் இணைந்தது) உள்ள ஆறுகளின் நீரை வடஇந்திய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் மூத்த அமைச்சர்களிடையே நடைபெற்றுள்ளது. பீஸ் நதியை சிந்து நதியுடன் இணைப்பது தொடர்பான முழு திட்ட அறிக்கை (detailed project report) தயாரிக்கப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியன் நதியை 14 கி.மீ. சுரங்கம் மூலம் சிந்து நதியுடன் இணைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க எல்&டி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த வருடத்திற்குள் தயாராகும் எனக் கூறப்படுகிறது.
சிந்து நதி நீரை 113 கி.மீ. கால்வாய் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தண்ணீரம், ரத்தமும் ஒன்றாக பயணிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டாக தெரிவித்தது. அதில் இருந்த சிந்து நதி நீரில் இந்தியாவுக்கான பகிர்வை எப்படி பயன்படுத்தலாம் என மத்திய அரசு தொடர்ந்த யோசனை செய்து வந்தது.
இந்த திட்டத்தில் 14 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சுரங்கம் அமைக்க மலைப்பாறைகள் குறித்த முழு ஆய்வு அவசியம். பாறைகள் பலவீனமாக இருந்தால், சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. DPR அறிக்கை பெற்ற பிறகு கட்டுமான பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்த சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இணைக்கப்படும், இது ராவியின் துணை நதியான உஜ் நதியிலிருந்து பீஸ் படுகைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமாகும்.
- தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட் கூறினார்.
- இரவின் விழிகள் படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான 'பங்காரா' என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது:-
இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள்.
ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ?
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






