என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு அழைப்பு.
- ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உத்தண்டியில் பேசும்போது தெரிவித்ததாவது:-
* மருத்துவர் ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
* ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு மருத்துவ பரிசோதனைதான். பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
* பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு., இதெல்லாம் அசிங்கமாக உள்ளது.
* யார் யாரோ வந்து பார்த்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்க., வந்து பாருங்க.. எனச் சொல்லிக்கிட்டு.., அவர் என எக்சிபிஷனா?
* ஐயா பாதுகாப்பிற்கான, அருகில் யாரையும் விடமாட்டேன். இவர்கள் கதவை தட்டி நேராக சென்று., ஐயாவை தூங்க விடவில்லை.
* ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
* வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?.
* ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
- அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
- வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது.
தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (AMRAAMS) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது.
இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.
- கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.
புதுடெல்லி:
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
கரூரில் போலீசார் அறிவுறுத்தலின்படியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறினார். விஜய் அங்கு இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகி விடும் என்று போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.
கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. ஆனால் கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடி விட்டதாக ஐகோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க. நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகமோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்? வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமை பண்பு குறித்து எல்லாம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
எதிர்மனுதாரராக சேர்க்காமல், விளக்கம் கேட்காமல் விஜய் குறித்து ஐகோர்ட்டு அவதூறு கருத்துக்களை கூறியுள்ளது.
மாநில அதிகாரிகளை மட்டுமே கொண்டு சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை. காவல் துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததை எதிர்க்கிறோம்.
எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், "சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ராகார்க் சிறந்த அதிகாரி. அவர் சி.பி.ஐ.யில் பணியாற்றி உள்ளார். அவரை பரிந்துரைத்தது ஐகோர்ட்டுதான்.
விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். 41 பேர் உயிரிழந்ததால்தான் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு உள்ளது" என்றனர்.
அவர்களிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-
ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு வரம்புக்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம். பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது.
தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ, வழிகாட்டுதல்களுக்கான சென்னை ஐகோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஆனது எப்படி? ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன? கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன்?
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்தது ஏன்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து இந்த வழக்கில் விவாதம் நடைபெற்றது.
- ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
- இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார்.
- நகைச்சுவை கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
மலையாளத்தில் 2015 இல் அல்போன்ஸ் புத்ரனின் பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே மலையாளத்தில் பிரணீஷ் விஜயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தி பெட் டிடெக்டிவ்" என்ற படத்திலும் அனுபமா நடித்துள்ளார்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஷராபுதீன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயிலர் புகழ் விநாயகன் நடித்துள்ளார்.
நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
- வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.
- பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதில் முதன்மையாக கருதப்படும் மூன்று தேவைகளை தேர்வு செய்வது அதனை நிவர்த்தி செய்வதுதான் அரசின் நோக்கம். நம்ம ஊரு, நம்ம அரசு திட்டத்தின் கீழ் இந்த மூன்று தேவைகளை குறைவான கால கட்டத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணத்திற்கு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு, குப்பை உள்ளிட்டவை ஆகும். மேலும், கிராமங்களில் இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதி பெயர்கள் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் பொது உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை நீக்கி வேறு பெயர்களை சூட்டுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் விவாதிக்கப்படும்.
குறிப்பாக, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணாங்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பல்வேறு பெயர்கள் மாற்றப்பட வேண்டியவை தொடர்பாக கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். இதனை பரிசீலனை செய்து அரசு முடிவு எடுக்கும்.
கிராமங்களில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை கிராம சபை மூலமாக தேர்வு செய்து தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக நலிவுநிலை குறைப்பு நிதி கொடுத்து அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் இதற்கென தயாரிக்கப்பட்ட நலிவுநிலை குறைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத்தின் நிதி, வரவு-செலவு மற்றும் தணிக்கை அறிக்கைகள் விவாதிக்கப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்தும் விவா திக்கப்படும். கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும் தேவைகளை கோரிப் பெறுவதற்காகவும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. ஒரு ஆண்டில் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன.
- இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை வேரியண்ட்கள் அடிப்படையில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன்படி கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் தற்போது புதிய HTX(O) வேரியண்ட் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன. HTX வேரியண்ட்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய HTX(O) வேரியண்ட் கியா கிளாவிஸில் எட்டு ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிரைவ் மோட்கள் (சுற்றுச்சூழல், நார்மல் மற்றும் ஸ்போர்ட்), ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய EPB ஆகியவை இடம்பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTK+ வேரியண்ட் (1.5 டர்போ யூனிட் மற்றும் DCT, 1.5 டீசல் AT) மற்றும் HTK+(O) (1.5 டர்போ DCT) வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் புது வேரியண்ட் விவரங்கள்:
6 இருக்கைகள் கொண்ட HTK+ ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் 1.5 TGDi ரூ.16.28 லட்சம்
HTK+ 1.5 CRDi VGT என்ஜின் மற்றும் 6 இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ரூ.17.34 லட்சம்
HTK+ (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6 இருக்கைகள்) ரூ.17.05 லட்சம்
HTX (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6- மற்றும் 7-இருக்கைகள் இரண்டும்) ரூ.19 லட்சம்
- இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
- ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கி ரன்கள் குவிக்க தொடங்கியது. 38 ரன்கள் எடுத்த ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் 57 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். மறுபுறம் ஸ்கோர் மெஷினாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்தார்.
50 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புடன் 196 ரன்கள் எடுத்துள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
- தனுஷ் நடித்து வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் 'இட்லி கடை. இப்படம் கடந்த 1-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படம் மீதான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இணைந்துள்ள தனுஷ்- அனிருத் காம்போ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான தனுஷின் 'இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தையும் டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போது மீண்டும் தனுஷின் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடித்து வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'தங்கமகன்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்களால் இருவரின் கூட்டணிக்காகவே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி எப்போது அமையும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ள இன்ப செய்தியால் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி கார் மாறி சென்றாலும் பரவாயில்லை, விழும் கால் மாறி விழுகிறார்.
* கால் மாறி விழுந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உள்வாடகைக்கு விட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார்.
மேலும், திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிய வருகிறது.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.
அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






