என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.

    முக்கிய அம்சங்கள்:

    இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.

    யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.

    சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

    எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.

    இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது

    குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.

    வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.

    பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.

    IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.

    • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
    • புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மீடியாடெக் பிராசஸருக்கு பதிலாக எக்சைனோஸ் 1330 SoC பிராசஸரால் இயக்கப்படுகிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது. இத்துடன் ஜெமினி லைவ் ஆப்ஷன் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    முந்தைய கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் சற்று மெல்லியதாகவும் இலகுவாகவும் மாறியுள்ளது. மேலும் கேமரா வடிவமைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் சஃபையர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.12,499 என்றும் 6GB + 128GB மாடலின் விலை ரூ.13,999 மற்றும் டாப்-எண்ட் 8GB + 128GB மாடலின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி M17 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் .

    இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 500 வங்கி சார்ந்த கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் உள்ளது.

    • சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
    • சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு தொடரும்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் நேற்று காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்,

    சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு தொடரும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டனர்.

    • டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது.
    • புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரை இன்ஸ்பயர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. டாப்-எண்ட் "எசென்ஸ்" வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய வெர்ஷனில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்...

    வெளிப்புறத்தில் வின்ட்சர் EV இன்ஸ்பயர் பியர்ல் ஒயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் என டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், ரோஸ் கோல்ட் கிளாடிங், கருப்பு ORVMகள் மற்றும் 'இன்ஸ்பயர்' பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளன.

    உட்புறம் சாங்ரியா ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. அவை பிளாக் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டுள்ளன. டேஷ்போர்டும் கருப்பு நிறம் கொண்டுள்ளது. முன்புற கிரில் பகுதி ரோஸ் கோல்டு நிறமும், பாடி சைடு மோல்டிங்ஸ், 'இன்ஸ்பயர்' மெத்தைகள், லெதர் கீ கவர் மற்றும் பம்பர் கார்னர் ப்ரொடெக்டர்கள் உள்ளது.



    புதிய வின்ட்சர் EV இன்ஸ்பயர் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறவில்லை. இதிலும் 100 கிலோவாட் (134hp பவர்) /200 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் FWD மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 38kWh LFP பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 331 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

    எம்ஜி வின்ட்சர் EV இன்ஸ்பயர் மாடல் இந்திய சந்தையில் வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் ஒரு வருட நிறைவு மற்றும் இந்தியாவில் 40,000 யூனிட் விற்பனையையும் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
    • சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 

    2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார். 

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது. அடுத்த வருடமேனும் அவருக்கு இந்த பரிசு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

    • இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

    • பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு அழைப்பு.
    • ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உத்தண்டியில் பேசும்போது தெரிவித்ததாவது:-

    * மருத்துவர் ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

    * ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு மருத்துவ பரிசோதனைதான். பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

    * பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு., இதெல்லாம் அசிங்கமாக உள்ளது.

    * யார் யாரோ வந்து பார்த்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்க., வந்து பாருங்க.. எனச் சொல்லிக்கிட்டு.., அவர் என எக்சிபிஷனா?

    * ஐயா பாதுகாப்பிற்கான, அருகில் யாரையும் விடமாட்டேன். இவர்கள் கதவை தட்டி நேராக சென்று., ஐயாவை தூங்க விடவில்லை.

    * ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.

    * வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?.

    * ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    • அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
    • வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.

    புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

    அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.

    அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.  

    இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது.

    தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (AMRAAMS) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது.

    இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.   

    • கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    • தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.

    புதுடெல்லி:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

    கரூரில் போலீசார் அறிவுறுத்தலின்படியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறினார். விஜய் அங்கு இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகி விடும் என்று போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.

    கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. ஆனால் கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடி விட்டதாக ஐகோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க. நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.

    இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகமோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்? வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமை பண்பு குறித்து எல்லாம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    எதிர்மனுதாரராக சேர்க்காமல், விளக்கம் கேட்காமல் விஜய் குறித்து ஐகோர்ட்டு அவதூறு கருத்துக்களை கூறியுள்ளது.

    மாநில அதிகாரிகளை மட்டுமே கொண்டு சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை. காவல் துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததை எதிர்க்கிறோம்.

    எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், "சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ராகார்க் சிறந்த அதிகாரி. அவர் சி.பி.ஐ.யில் பணியாற்றி உள்ளார். அவரை பரிந்துரைத்தது ஐகோர்ட்டுதான்.

    விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். 41 பேர் உயிரிழந்ததால்தான் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு உள்ளது" என்றனர்.

    அவர்களிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-

    ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு வரம்புக்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம். பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது.

    தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ, வழிகாட்டுதல்களுக்கான சென்னை ஐகோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஆனது எப்படி? ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன? கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன்?

    உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்தது ஏன்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் விவாதம் நடைபெற்றது.

    • ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
    • இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.



    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 



    • 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • நகைச்சுவை கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

    மலையாளத்தில் 2015 இல் அல்போன்ஸ் புத்ரனின் பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

    தமிழில் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திலும் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இதற்கிடையே மலையாளத்தில் பிரணீஷ் விஜயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தி பெட் டிடெக்டிவ்" என்ற படத்திலும் அனுபமா நடித்துள்ளார்.

    ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஷராபுதீன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயிலர் புகழ் விநாயகன் நடித்துள்ளார்.

    நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. 

    ×