என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விடமாட்டேன்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
- பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு அழைப்பு.
- ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உத்தண்டியில் பேசும்போது தெரிவித்ததாவது:-
* மருத்துவர் ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
* ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு மருத்துவ பரிசோதனைதான். பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
* பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு., இதெல்லாம் அசிங்கமாக உள்ளது.
* யார் யாரோ வந்து பார்த்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்க., வந்து பாருங்க.. எனச் சொல்லிக்கிட்டு.., அவர் என எக்சிபிஷனா?
* ஐயா பாதுகாப்பிற்கான, அருகில் யாரையும் விடமாட்டேன். இவர்கள் கதவை தட்டி நேராக சென்று., ஐயாவை தூங்க விடவில்லை.
* ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
* வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?.
* ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.






