என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai lawyer"

    • பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார்.

    மேலும், திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிய வருகிறது.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.

    எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.

    அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    சென்னை அருகே வக்கீல் வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்த வேலைக்காரி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் ராம் தெருவைச் சேர்ந்தவர் வைஜெயந்தி. வக்கீல். இவரது வீட்டில் கடந்த 7-ந்தேதி 60 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதுபற்றி பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் வைஜெயந்தி புகார் செய்தார். புகாரில் வேலைக்காரி ஜெயலட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலைக்காரி ஜெயலட்சுமி, தனது மகன் விவேக்குடன் சேர்ந்து 60 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.

    இந்த நகையை ரூ.7 லட்சத்துக்கு விற்றுள்ளனர். அந்த பணத்தை கொண்டு விவேக் புது மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார்.

    இதையடுத்து விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலைக்காரி ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×