என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.
    • மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

    தனுசு ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் மனக்குழப்பங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். மார்கழி 6-ந் தேதி குரு மிதுன ராசிக்கு வருகிறார். அப்பொழுது அவர் உங்கள் ராசியை சப்தம பார்வையாக பார்க்கிறார். எனவே அதன்பிறகு இடர்பாடுகள் அகலும். இனிய பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வருகிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உண்டு. அந்த அடிப்படையில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும். குதூகலம் கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உதிரி வருமானமும் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்துப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குருவின் பார்வை சகோதர ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதிவதால் உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்பும் கைகூடலாம்.

    உடன்பிறந்தவர்கள் பகை மாறி பாசம் காட்டுவர். பூர்வீக சொத்துக்களை தக்கவிதத்தில் பாகம் செய்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோரின் மணி விழாக்கள், முத்து விழாக்கள் போன்ற விழாக்களை நடத்தும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். இதுவரை விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்திய பங்குதாரர்கள் இப்பொழுது, தொழிலில் நீடிப்பதாக சொல்வார்கள். புகழ்பெற்ற புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கே வரும் இந்த நேரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான சூழ்நிலை உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்து விலகிக் கொண்டு புதிய இடத்திற்குச் செல்லலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில நல்ல நன்மைகளும் வந்துசேரும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில், விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. சகோதர அனுசரிப்பு சற்று குறையும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு திருப்தி தராது. சேமிப்பு கரையும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி மேன்மை உண்டு. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 23, 24, 27, 28, ஜனவரி: 7, 8, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மகர ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.

    குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கும்ப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மீன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.

    'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    • அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
    • காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது ​​வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

    டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

    இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.

    அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

    கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .

    கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.

    வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    • இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
    • இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.

    ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு நாராயணமூர்த்தி (54)

    இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி சாலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலை விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக நாராயண மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல்வேறு எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் பாலிசிகள் பெறப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

    நாராயண மூர்த்தி இறந்தால் காப்பீட்டுத் தொகை தங்களுக்கு வந்துவிடும் என்ற பேராசையில் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.   

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது.
    • சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்தப் போட்டியையொட்டி இந்திய வீரர் திலக் வர்மா பேட்டி அளித்தார். அப்போது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-

    அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவரிசையிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்கள். நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி ஆட தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும் போது அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு முன்னதாக களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆட்டத்தில் அக்ஷர் படேல் 3-வது வீரராக ஆடியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்தே திலக் வர்மா இந்த விளக்கத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடகம் அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.
    • சிம்மம் அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.

    மேஷம்

    தடைகள் விலகி மாற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். உழைப் பிற்கு முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அக லும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.மாமியார் மருமகள் பிணக்கு,தாய் மகள் கருத்து வேறுபாடு மறையும்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வரவும் செலவும் சரியாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நிலை மேம்படும். சுப விரயங்கள் மிகுதியாகும். 17.12.2025 அன்று காலை 10.26 மணி முதல் 19.12.2025 அன்று இரவு 10.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் நிதா னத்தை கடைபிடிக்க வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு இன்னல்களில் இருந்து உங்களை காக்கும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார்.இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப் படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள்.பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்க ளால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதான மாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூல மாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றைய தினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    மிதுனம்

    விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக் கிறார். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு சூரியன் செவ்வாய் சுக்கிரன் பார்வை உள்ளது.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமா னம் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தை கள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்க ளாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்கு தாரர்க ளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும்.

    கடகம்

    அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம்.தன ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும்.எடுக்கப் பட்ட முயற்சியால் எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும் . தடைபட்ட பணிகள் விரைந்து செயல் வடிவம் பெறும். கடன், நோய் எதிரி தொல்லை நிவர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். பணவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பண பிரச்சினை நீங்கும். வானொலி தொலைக்காட்சி, ஊடக துறையினர் நல்ல மாறுதலும் மேன்மையும் பெறுவர். பெண்கள் குடும்பப் பணிகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். திருமணம் முயற்சி செயல் வடிவம் பெறும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசி யல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.

    சிம்மம்

    அரசு வகை அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். குலதெய்வ நல்லாசிகள் கிட்டும். ஆன்ம பலம் பெருகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் மிகுந்த ஆதா யத்தை ஏற்படுத்தித் தரும்.புத்திர பிரார்த்தம் உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிறரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் கவனமாகவும் இருப்பது நல்லது. சில ருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். குரு பகவான் வக்ர நிவர்த்தி பெறும் போது எதையும் சமாளிக்கும் தைரியத்தை யும் தெம்பையும் வழங்குவார். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

    கன்னி

    வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சி யும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். பாகப் பிரிவினை யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.சப்த மாதாக்களை வழிபட சங்கடங்கள் அகலும்.

    துலாம்

    நிம்மதியான வாரம்.வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.உங்கள் யோ சனை, சிந்தனை, அறிவு, திட்டம் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.முதலீட்டாளர்கள் பெரிய முதலீடுகளை பயன்படுத்தி புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும் .சகோதர உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் மாறும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வசிக்கும் வீட்டை விரி வாக்கம் செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். மருத்துவமனைச் செலவு கள் முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு கிணறு வெட்டக் கடன் கிடைத்து வாழ்வாதாரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். ஸ்ரீ வராகியை வழிபட நல்ல வாய்ப்பு கள் கிடைக்கப்பெற்று நிம்மதி கூடும்.

    விருச்சிகம்

    பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய்க்கு 2,5ம் அதிபதியான குருவின் சம சப்தம பார்வை உள்ளது.புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டு களைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக் கும். நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப் பும் கிடைக்கும். குரு வக்ர நிவர்த்தி பெற்றவுடன் திருமண முயற்சிகள் கைகூடும். முழுத் திறமை களையும் காட்டி மேலதிகாரிகளின் கவனத்தைக் ஈர்ப்பீர்கள்.நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சினை கள் தீரப் போவதற்கான வழி பிறக் கும். சக்கரத்தாழ் வாரை வழிபட நவகிரக தோஷம் விலகும்.

    தனுசு

    தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இதற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள்.குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடி கள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும்.வாக்கு வன்மை யால், பண பலத்தால் விரும்பி யதை சாதித்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்த கர்களுக்கு மிகச் சாதகமான காலம். தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.மாமனார், மாமி யாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும்.நோய்கள் நீங்கி ஆரோக்கி யம் அதிகரிக்கும். திருமணத்திற்கு வரன் தேடத் துவங்குவீர்கள்.சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். விவசாயிகள் உயர் ரக கறவை மாடு வாங்கி பயன் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

    மகரம்

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக் கும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.வியா பாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். கடன் தொல்லை ஒரு பக்கம் இருந்தாலும் மீளும் வகையான மார்க்கம் தென்படும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்க வும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். இறை வழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும்.உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். வீடு, வாகன யோகம் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    கும்பம்

    அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடை யின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப் பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும்.சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார் கள்.14.12.2025 அன்று இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தக வலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக் கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காவல் தெய்வ வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மீனம்

    பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும் வாரம். ஜென்ம சனியால் பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக் கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். 14.12.2025 அன்று இரவு 9.41 மணி முதல் 17.12.2025 அன்று காலை 10.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டா ரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
    • கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

    மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

    அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.  

    • திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
    • பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.

    இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    கன்னி ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.

    சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    துலாம் ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    • நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மலை நகரில் மாலை சந்திப்போம்!

    Young Dravidians! Prepare for Glory!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
    • இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க உரைபெயர்ப்பாளர் என 3 அமெரிக்கர்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை மற்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த நபர் நடத்தியதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்தது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிரியாவில் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு ஆபத்தான பகுதியில் ஐ.எஸ் நடத்திய தாக்குதல் இதுவாகும். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். இந்தச் சம்பவத்தால் சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார். சிரியா அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகிறது" என்றார்.

    • குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
    • தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    * போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை தடுக்க முதல்வர் முன்வரவில்லை.

    * குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குகிறது.

    * பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.

    * போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.

    * தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
    • ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.

    தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.

    இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.

    1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.

    மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.

    19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

     

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.

    அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.

    2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

     

    இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.

    இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

     

    2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.

    1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.

     

    • மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .
    • 'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் Red Sea சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 4 தொடங்கி நேற்று (டிசம்பர் 13) உடன் முடிவடைந்தது.

    இந்த விழாவில் பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், சல்மான் கான், ஆலியா பட், கிருத்தி சனோன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் முழுக்க ரோஹிங்கியா மொழியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான "லாஸ்ட் லேண்ட்" (Lost Land) படம் சிறந்த திரைப்படத்திற்கான 'கோல்டன் யுஸ்ர்' விருதை வென்றுள்ளது.

    ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் அக்கியோ புஜிமோட்டோ இந்த திரைப்பதை இயக்கி உள்ளார்.

    மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .

    9 வயது சோமிரா மற்றும் அவளது தம்பி ஷாஃபி ஆகியோர், மலேசியாவில் இருக்கும் தங்கள் மாமாவிடம் சென்று சேருவதற்காக, நிலத்திலும் கடலிலும் கடத்தல்காரர்கள் மற்றும் பல அச்சுறுத்தல்களை தாண்டி செல்லும் துயரமான பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.

    'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் திரையிடப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.

    ஆசியா பசிபிக் திரை விருதுகளிலும் நடுவர்களின் கிராண்ட் பரிசை இப்படம் பெற்றது.  

    ×