என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
- தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- செங்கோட்டையன் தலைமையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு.
- அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாகன பிரசாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் வருகிற 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முழு ஏற்பாட்டில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜயின் வாகன பிரசாரம் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தற்போது வரை வாகன பிரசாரத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் த.வெ.க.வினர் பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
இன்று காலை செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் பெருந்துறை அடுத்த சரளையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செங்கோட்டையன் முன்னி லையில், பெருந்துறையில் மறைந்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி பெரியசாமியார் அண்ணன் அருணா ச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு செங்கோட்டையன் த.வெ.க துண்டை போட்டு வரவேற்றார். பின்னர் அவர்களுடன் புகை ப்படங்கள் எடுத்துக்கொ ண்டார்.
இதை அடுத்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்துறை தொகுதியில் அணி அணியாக த.வெ.க.வில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு த.வெ.க தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி பெருந்துறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவரது உரை இருக்கும்.
பெருந்துறையில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கான பணி இன்று தொடங்கப்பட்டு விட்டது.த.வெ.க.வில் விருப்ப மனு பெரும் தேதி குறித்து தலைவர் விஜய் அறிவிப்பார். விருப்ப மனு பெறப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் அறிவிப்பார்.த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் நடத்த காவல்துறையினர் தரப்பில் கேட்கப்பட்ட 84 கேள்விகள் தற்போது மாறிவிட்டது. அனைவரும் பாராட்டும் வகையில் எங்களது பணி இருக்கும்.
சீனாபுரத்தை சேர்ந்த தி.மு.க.வினர் தற்போது த.வெ.க.வில் இணைய உள்ளனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைப்பதற்கான நடை பெறும் பேச்சுவார்த்தை குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
த.வெ.க-அதிமுக கூட்டணி அமையுமா ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். த.வெ.க.விற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை.தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்ல முடியாது. த.வெ.க.விற்கு மக்கள் சக்தி உள்ளது.மக்கள் சக்தியால் த.வெ.க தலைவர் விஜய் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதின் நபின் தற்போது பீகார் சட்டசபையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
- மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின்
பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தல் போன்ற முக்கிய காரணங்களால் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் உத்தரவின்பேரில், இந்த நியமனத்தை கட்சியின் நாடாளுமன்ற வாரியம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இன்றுமுதல் அவர் தேசிய செயல் தலைவராக செயல்படுவார்.
மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நிதின் நபின் தீவிர தேர்தல் அரசியலில் நுழைந்தார். தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசில், சாலை கட்டுமானத் துறை அமைச்சராக பதவியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை - 2010, 2015, 2020 மற்றும் 2025 பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிதின் நபினின் நியமனம் பீகாரிலும், தேசிய அரசியலிலும் பாஜகவிற்கு ஒரு மூலோபாய ஊக்கமாக பார்க்கப்படுகிறது. அவரது நிர்வாக திறன், அனுபவம் போன்றவற்றை காரணம் காட்டி கட்சித் தலைமை இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநில பாஜக இணைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது.
- பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தார்.
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். பதவி விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திரா, பங்கஜ் சவுத்ரியிடம் பாஜக கொடியை முறையாக ஒப்படைத்தார்.
மாநிலத் தலைவரின் நியமனத்துடன், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங், சூர்யபிரதாப் ஷாஹி, சுரேஷ் கன்னா, முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா ஆகியோர் ஆதரித்தனர்.
மத்திய நிதித்துறை இணையமைச்சரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த குர்மி தலைவருமான பங்கஜ் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார்.
- டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
- பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.
லக்னோ:
அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.
திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.
வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.
கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.
ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.
ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.
அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.
உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:
இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.
இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.

உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.
காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.
பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.
வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.
ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.
- நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.
கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் புதுமுக நடிகை சங்கீதா நடிப்பில் உருவாகி உள்ள படம் வடம். இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார். மண், மக்கள், மரியாதை, வீரம் நான்கும் பேசும் படம் வடம் என சசிகுமார் குறிப்பிட்டுள்ளார். டீசர், படம் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.
- யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.
மற்றொருவன் சுடப்பட்டு காவல்துறையினரின் பிடியில் உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவனை நோக்கி சென்று அவனது துப்பாக்கியைப் பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது.
அதே சமயம், இரண்டாமவன் பாலத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியயவர்கள் வெடிபொருள்களை கொண்ட பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
- விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
- விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி எனு தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும்
- நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தேவனூர்புதூரில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று பேசியதாவது:-
"மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 17 லட்சம் மகளிருக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. சிப்பாய்கள் களப்பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் நமக்கு எதிராக போட்டியிடுபவர்கள் வல்லவர்களா, என்றால் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சிக்காரர்கள். மரபுகளை மீறி வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.
வரும் தேர்தலில் தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம். உற்பத்தியை பெருக்குகிறோம். வேலைவாய்ப்பை பெருக்குகிறோம். மத்திய அரசு இதை செய்தால்தான் உங்களுக்கு காசு தருவேன் என்றால் அதனை நீங்களே வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு தேவையில்லை. கல்விக்கு தர வேண்டிய பணத்தை தருவதில்லை.
100 நாள் வேலை திட்டத்துக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. கேட்டால் இந்தி படி என்கிறார்கள். நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல. ஆனால் அதை படி என நிர்பந்தித்தால் முடியாது என்போம். வட நாட்டு தலைவர்களை தமிழ்நாட்டில் மதிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு தலைவர்களை வடநாட்டில் கண்டுகொள்வதில்லை. இதை நாடாளுமன்றத்தில் பேசினேன். நாங்கள் தோற்க மாட்டோம். எதிரிகளையும் வெற்றிபெற விடமாட்டோம்." இவ்வாறு அவர் பேசினார்.
- டெல்லியில் பாஜகவின் வாக்கு திருட்டுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தார்.
- இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான அஞ்சலி நிம்பல்கர் விமானப் பயணத்தின் போது சக பயணியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டை குவித்து வருகிறது.
கோவாவின் பொறுப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருக்கும் நிம்பல்கர்,
டெல்லியில் பாஜகவின் வாக்கு மோசடியை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில், அதே விமானத்தில் பயணித்த அமெரிக்க பெண் உடல்நிலை சரியில்லாமல் போனார்.
சோர்வு மற்றும் நடுக்கம் எடுத்து அவரின் பல்ஸ் இறங்கியது. உடனே அவருக்கு அஞ்சலி CPR சிகிச்சை கொடுத்தார். பின்னர், சற்று சுயநினைவு அடைந்த அவரை பயணம் முழுவதும் கவனித்துக்கொண்டார்.
டெல்லியில் தரையிறங்கிய உடனேயே அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஞ்சலி அளித்த சிபிஆர் சிகிச்சையால் அப்பெண்ணின் உயிர் காட்டப்பற்றது.

இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.






