என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.
    • பிருந்தாவனத்தின் கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தை பிரசாதமாக பெற்றார்.

    லக்னோ:

    அது ஒரு தனியார் அலுவலகம். அங்கு பணிபுரியும் சுப்ரமணிக்கு மறுநாள் திருமணம். அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கு பத்திரிகை வைத்து, கண்டிப்பாக திருமணம், வரவேற்பு ஆகியவற்றுக்கு வரும்படி அழைப்ப்பு விடுத்திருந்தான்.

    திருமணத்துக்கு முந்தைய தினம். அலுவலகத்தில் மாலை நேரம் இடைவேளை. டீக்கடையில் நின்று சூடாக வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மகேஷ். அப்போது எதிரில் கந்தன் வருவதைக் கண்டான்.

    வாடா கந்தா, சாயந்தரம் சுப்ரமணி ரிசப்ஷன் எப்படி போறே? என கேட்டான். அனைவருடன் தான் செல்ல வேண்டும் என பதிலளித்தான் கந்தன்.

    கல்யாணத்தை பண்ணி பார், வீட்டை கட்டிப் பார்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்கன்னு பேச்சை தொடர்ந்தான் மகேஷ்.

    ஆமாண்டா, எவ்வளவு செலவு? எதையும் சுருக்க முடியாதுடா. கண்டிப்பா செய்தே ஆகணும். இல்லைன்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குறை சொல்ல ஆரம்பிச்சுடறாங்க என்றான் கந்தன்.

    ஆமாடா, இப்படியும் திருமணங்கள் நடக்குற வேளையில், சில விநோதமான திருமணங்களும் நடக்குது பார் அதுதான் ஆச்சரியம். போன வாரம் கூட உத்தர பிரதேசத்தில் அப்படி ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துச்சு என்றான் மகேஷ்.

    அப்படி என்னடா விநோதம் என கேட்டான் கந்தன்.

    உ.பி.யில் நடந்த விநோதமான திருமணம் குறித்து மகேஷ் கூறியதன் சுருக்கம் இதுதான்:

    இந்தியா என்பது பல்வேறு கலாசாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடு. அதனால்தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுபாடு இருக்கிறது.

    இந்திய கலாசாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கிய விஷயமாக உள்ளது. திருமணத்தில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் குறித்த முக்கியத்துவம் மாறுவதில்லை. வடமாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் விநோத திருமணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர்மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார் பிங்கி என்ற இளம்பெண்.


    உ.பி.யின் படோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி சர்மா (28). இவருக்கு திருமணம் செய்துவைக்க பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர் அவரது பெற்றோர். பிங்கி சர்மா கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தை ஆவார்.

    பட்டப்படிப்பை முடித்துள்ள பிங்கி சர்மா 3 மாதத்துக்கு முன் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றார். அப்போது கிருஷ்ணர் சிலையிடமிருந்து தங்க மோதிரத்தைப் பிரசாதமாக பெற்றார்.

    காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்தேன். காய்ச்சல் குணமானது எனக்கூறிய அவர், இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என உறுதியாக தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய பிங்கி, இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்ததார்.

    பிங்கியின் இந்த முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்தனர். ஆனால் பிங்கி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் பிங்கிக்கும் திருமணம் நடைபெற்றது.

    வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், பிங்கி சர்மாவுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

    திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

    இந்தியாவில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில கிராமங்களில் இதுபோன்ற விநோத திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது எனக்கூறி முடித்தான் மகேஷ்.

    ஆமாண்டா, கேட்ட எனக்கே இவ்வளவு ஆச்சரியமா இருக்குது என்றால் அதில் கலந்து கொண்டவர்கள் எப்படி இருந்திருப்பாங்க என சொன்ன கந்தன், சரி, வா சுப்ரமணி ரிசப்ஷனுக்கு போய்ட்டு வரலாம் என கிளம்பினான்.

    • நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

    கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் புதுமுக நடிகை சங்கீதா நடிப்பில் உருவாகி உள்ள படம் வடம். இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார். மண், மக்கள், மரியாதை, வீரம் நான்கும் பேசும் படம் வடம் என சசிகுமார் குறிப்பிட்டுள்ளார். டீசர், படம் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


    • தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.
    • யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    தாக்குதல் நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.

    மற்றொருவன் சுடப்பட்டு காவல்துறையினரின் பிடியில் உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவனை நோக்கி சென்று அவனது துப்பாக்கியைப் பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது.

    அதே சமயம், இரண்டாமவன் பாலத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.

    தாக்குதல் நடத்தியயவர்கள் வெடிபொருள்களை கொண்ட பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். 

    • விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.
    • விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.

    ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கண்காணிப்பார் அனுமதி வழங்கியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கினார்.

    விஜய் மக்கள் சந்திப்புக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதியை வழங்கினார்.

    இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ரூ.50 ஆயிரம் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி எனு தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும்
    • நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தேவனூர்புதூரில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று பேசியதாவது:-

    "மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது மேலும் 17 லட்சம் மகளிருக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. சிப்பாய்கள் களப்பணியாற்றி வருகின்றனர். தேர்தலில் நமக்கு எதிராக போட்டியிடுபவர்கள் வல்லவர்களா, என்றால் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சிக்காரர்கள். மரபுகளை மீறி வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.

    வரும் தேர்தலில் தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம். உற்பத்தியை பெருக்குகிறோம். வேலைவாய்ப்பை பெருக்குகிறோம். மத்திய அரசு இதை செய்தால்தான் உங்களுக்கு காசு தருவேன் என்றால் அதனை நீங்களே வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு தேவையில்லை. கல்விக்கு தர வேண்டிய பணத்தை தருவதில்லை.

    100 நாள் வேலை திட்டத்துக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. கேட்டால் இந்தி படி என்கிறார்கள். நாங்கள் இந்தியை வெறுக்கிறவர்கள் அல்ல. ஆனால் அதை படி என நிர்பந்தித்தால் முடியாது என்போம். வட நாட்டு தலைவர்களை தமிழ்நாட்டில் மதிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு தலைவர்களை வடநாட்டில் கண்டுகொள்வதில்லை. இதை நாடாளுமன்றத்தில் பேசினேன். நாங்கள் தோற்க மாட்டோம். எதிரிகளையும் வெற்றிபெற விடமாட்டோம்." இவ்வாறு அவர் பேசினார். 

    • டெல்லியில் பாஜகவின் வாக்கு திருட்டுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்தார்.
    • இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான அஞ்சலி நிம்பல்கர் விமானப் பயணத்தின் போது சக பயணியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டை குவித்து வருகிறது.

    கோவாவின் பொறுப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருக்கும் நிம்பல்கர்,

    டெல்லியில் பாஜகவின் வாக்கு மோசடியை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் கோவாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையில், அதே விமானத்தில் பயணித்த அமெரிக்க பெண் உடல்நிலை சரியில்லாமல் போனார்.

    சோர்வு மற்றும் நடுக்கம் எடுத்து அவரின் பல்ஸ் இறங்கியது. உடனே அவருக்கு அஞ்சலி CPR சிகிச்சை கொடுத்தார். பின்னர், சற்று சுயநினைவு அடைந்த அவரை பயணம் முழுவதும் கவனித்துக்கொண்டார்.

    டெல்லியில் தரையிறங்கிய உடனேயே அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஞ்சலி அளித்த சிபிஆர் சிகிச்சையால் அப்பெண்ணின் உயிர் காட்டப்பற்றது.

    இந்த சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பதிவில் அஞ்சலிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  

    • மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • முதலமைச்சர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20, 21-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகிற 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    தொடர்ந்து பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் மாலை 5 மணிக்கு தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து டக்கரம்மாள்புரம் தரிசன பூமிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர், அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு விழா முடிந்ததும் வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

    தொடர்ந்து மறுநாள் (21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.56½ கோடியில் கட்டப்படட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

    அங்கு சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும் அவர், ரூ.110 கோடியில் அமைக்கப்படும் காயிதே மில்லத் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.

    இந்த விழாவில் கனிமொழி எம்.பி., மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் அரசு விழாவிற்காக பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது மழைநீர் ஒழுகாத வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல் கிரேன் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

    முதலமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாவட்ட தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்நோக்கு மருத்துவமனை செல்லும் சாலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    முதலமைச்சர் வருகையால் மாநகர பகுதி சாலைகள் புதுப்பொலிவு அடைகிறது. கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளால் சேதம் அடைந்திருந்த சாலைகளை பழுது பார்க்கும் பணிகளும் இரவு பகலாக முழு வீச்சில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகள் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் பிரமாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • துப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.
    • மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாளையங்கோட்டை பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது.

    மது அருந்திய மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிகள் மீதான இந்த நடவடிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது மாணவிகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதித்துவிடும்.

    இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதிலாக மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

    மது அருந்தியதற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி மாணவிகளுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ அல்லது அவர்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து இத்தகைய நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக திகழும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

    ஒரு மாணவர் அவரது வீட்டில் இருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் இடையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மதுக்கடைகளை கடந்து தான் செல்ல வேண்டிய நிலையை தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

    மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள்களுமே மக்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கைக்கெட்டும் தொலைவில் மது கிடைக்கும் போது, பதின் வயதினருக்கே உரிய சாகச மனநிலை மதுவை சுவைத்துப் பார்க்கத் தூண்டும்.

    இதுதான் மாணவச் செல்வங்கள் பதின் வயதில் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை தி.மு.க. அரசு செய்தாக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம் ஆகும். அதை உடனடியாகச் செய்து இளம் தலைமுறையினரை அரசு காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
    • வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை பேனரில் பயன்படுத்திய வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    தவெக தொடங்கப்பட்ட நாள் முதலே பதவிகளுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது.

    இந்நிலையில் பணத்திற்காக பதவிகள் விற்கப்படுவதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் உள்ளேயே தவெகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாக அவர்கள் கோஷம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை.
    • பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

    4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

    மாவட்ட பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றது 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

    இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை. பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தருகிற வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றது
    • தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது.

    பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    சென்னையில் ஏ.கே.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் நேருக்கு நேர் சந்தித்த அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வணக்கம் வைத்து கொண்டனர்.

    தற்போது பாமக கட்சி ராமதாஸ் தரப்பு அன்புமணி தரப்பு என்று 2 கோஷ்டிகளாக உள்ளது. என்னையும், ராமதாசையும் பிரித்தது ஜி.கே.மணிதான் தான் என்று அன்புமணி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×