என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
    • திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.

    மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.

    கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
    • வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.

    ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.


    நிகழ்ச்சியில்

     பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.

    இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

    அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார். 

    • தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
    • நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சக்திகளை எதிர்த்து திமுக வெற்றி பெற்றது. எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையும் செய்யவில்லை.

    சோதனைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் திமுக ஒளிவிட்டுக் கொண்டிருக்க அதன் அடித்தளம் தான் காரணம்.

    மக்களை சந்தித்து திமுகவை வளர்த்தோம். உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர்புல்லாக செயல்படுகிறார், இறங்கி அடிக்கிறார்.

    கொள்கை ரீதியாக திமுகவை வலுவாக இயக்க உதயநிதி ஸ்டாலின் பாசறை கூட்டங்களை நடத்தினார்.

    உதயநிதி Most Dangerous என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார்.

    திமுகவிற்கு புதுப்பேச்சாளர்களை உருவாக்கி, அறிவுத்திருவிழாவை உதயநிதி ஸ்டாலின் நடத்தியுள்ளார்.

    நம் தோளில் தமிழ்நாட்டை காக்கும் கடமை மட்டுமல்ல இந்தியாவையே காக்க வேண்டிய கடமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிஎஸ்கே அணி பந்து மாற்றியதாக நடந்த சம்பவம் சர்ச்சையானது.
    • நடுவர் அவுட் கொடுக்காமலே இஷான் கிஷன் வெளியேறியது சர்ச்சையானது.

    2025-ம் ஆண்டு ஐபிஎல் (IPL 18) தொடரில் பல சர்ச்சைகள் நடந்தன. இந்தத் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

    இந்த தொடரில் முக்கிய சர்ச்சைகளில் முதலாவதாக சிஎஸ்கே அணியின் பந்து மாற்றம் (Ball-Tampering)குற்றச்சாட்டு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்து மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி, பந்தை மாற்றியதாக சந்தேகம் எழுந்தது. இது தொடரின் தொடக்க வாரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அம்பயர் முடிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய அவுட்டுகள்:

    பல போட்டிகளில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. உதாரணமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறியது. அதுவரை அவுட் கொடுக்காமல் இருந்த அம்பயர் அவர் வெளியேறுவதை பார்த்ததும் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது போல அவுட் கொடுத்தார். இது மற்ற அணி ரசிகர்கள் அம்பானி காசு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    பிட்ச் மற்றும் ஹோம் அட்வான்டேஜ் சர்ச்சை:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாக புகார் கூறினார். இது ஹோம் அட்வான்டேஜ் குறித்த விவாதத்தை தூண்டியது.

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தொடர் இடைநிறுத்தம்:

    மே 9-ஆம் தேதி, எல்லைப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் ஒரு போட்டி நடுவில் கைவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஒப்பந்தம்:

    பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை ரிப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்ததற்கு சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி, அரசியல் பதற்றம் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.

    கொண்டாட்ட சோகம்:

    RCB வெற்றிக்குப் பிறகு பெங்களூரு ஸ்டேடியம் வெளியே கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நடந்தது – இது ஆண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது.

    இவை தவிர, வீரர்கள் இடையே சண்டைகள், அம்பயர் கொண்டாட்டங்கள் போன்றவையும் சர்ச்சைகளை அதிகரித்தன. இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சர்ச்சைகளையும் தந்தது.

    • தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
    • நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

    பின்னர் அவர் மேடையில் உரையாற்றியதாவது:-

    மாஸா, கெத்தா இணைஞரணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக் அனைவருக்கும் நன்றி.

    நிகழ்ச்சிக்கு வந்துள்ள இஞைர்களை பார்த்ததும் 50 ஆண்டுகள் பின்னால் சென்றதபோல் உணர்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள திமுக இளைஞர்களின் எனர்ஜி எனக்கு டிரான்பராகிவிட்டது.

    50 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்தபோது திமுக இளைஞரணியை வளர்க்க தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன்.

    கிராமம் கிராமமாக திண்ணை பிரசாரம் பொதுக்கூட்டம் என மக்களை வரவழைத்து திமுகவை வளர்த்தெடுத்தேன்.

    திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது அவருக்கு வயது 40. உழைத்து, வளர்க்கப்பட்ட இயக்கத்திற்கு புது ரத்தம்போல இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாதனை.
    • ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

    சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

    ஸ்குவாஷ் உலகக்கோப்பையில முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    • இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை.
    • திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது

    திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 

    "இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நம் எதிரிகளை சுக்குநூறாக்க கூட்டப்பட்ட கூட்டம், நம் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி.

    கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற இந்த கொள்கை கூட்டம் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரு பலம் என என்னால் உறுதியாக கூறமுடியும். மற்ற கட்சிகளில் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் இருப்பர். ஆனால் திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது." என தெரிவித்தார். 

    • கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    • இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது.
    • பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, ஃபர்ஹான் யூசப் 23 ரன்களிலும், உஸ்மான் கான் 16 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடர்ந்து, அலி ராசா, சமீர் மின்ஹாஸ், அகமது ஹூசைன், ஹம்சா சாஹூர், அப்துல் சுபன், முகமது சய்யம், நிக்கப் சாஃபிக் உள்ளிட்டோர ஒற்றை இலக்கில் ஆவுட் ஆகினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    • 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 

    குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

    இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.

    செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.

    கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.

    2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்

    1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.

    5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.

    7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

    8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.

    9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.

    10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.

    இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

    ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது. 

    • நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
    • முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

    நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
    • தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×