என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்
    • இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 1,00,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள், வித்தியாசமான தந்தை பெயர்கள், வீட்டு எண்களுடன் உள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    வாக்குத் திருட்டு நடப்பதும், அதை யார் நடத்துவது, எங்கிருந்து நடத்துகிறார்கள் என அனைத்து தகவல்களும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும். பா.ஜ.க.-வை வெற்றிபெற வைக்க அவர் அதை அனுமதித்தார் என்றும், தகவல்கள் வெளிவந்த பிறகும் அதை மறைக்கிறார்

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார்

    இந்த முறைகேடுகள் கர்நாடகாவில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களிலும் இதே போன்ற முறைகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டது" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் மோடிக்கு ஏழை தாயின் மகன் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் "இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,

    140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    • முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.
    • ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    ஓமலூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க. உள் விவகாரத்தில் தலையிட மாட்டேம் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

    * அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடவில்லை.

    * என்னுடைய எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார்.

    * கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அ.தி.மு.க.வில் வழக்கம்.

    * முகமூடி அணிந்து சென்றார் என என்னை பற்றி டி.டி.வி. விமர்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்.

    * ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டி.டி.வி. தினகரன்.

    * ஜெயலலிதா இருக்கும் வரை சென்னைக்கு வராதவர் டி.டி.வி. தினகரன்.

    * அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்து சென்றவர் டி.டி.வி. தினகரன்.

    * பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.

    * அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்பதை கேட்க கூடாது.

    * கார் இல்லாததால் தான் கிடைத்த காரில் ஏறி சென்றேன்.

    * அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது தான்.

    * டி.டி.வி.தினகரன் கூட்டணியில் இணைவது என்பது உட்கட்சி விவகாரம்.

    * செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றார். 

    • கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர்.
    • 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார்

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை

    கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.

    தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது . இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இன்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்திருந்தார். பின்னர் கொடுமுடி பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் திடீரென கொடுமுடி அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே பிரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா என சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து, உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.
    • வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    * யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ரத்தின கம்பளம் விரித்தனர்.

    * தி.மு.க.விற்கு ஆளுங்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு.

    * எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் வருகைக்கு ஸ்டாலின் கருப்பு கொடி காட்டினார்.

    * நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்பது அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்.

    * நேரம் அதிகம் இருந்ததால் என்னுடன் இருந்தவர்களை அனுப்பி விட்டேன்.

    * நான் மட்டும் அமித்ஷாவுடன் 10 நிமிடம் தனியாக சந்தித்து பேசினேன்.

    * அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றேன்.

    * அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியில் வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன்.

    * முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது.

    * ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.

    * முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

    * வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

    * பொதுவெளியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.

    * அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு எந்த தகுதியுமில்லை, அருகதையுமில்லை.

    * முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடிதம் அளித்தேன்.

    * நன்றியை மறந்து அமைச்சர் ரகுபதி செயல்படுகிறார்.

    * கிட்னி முறைகேடு நடந்ததை அரசே ஒத்து கொண்டுள்ளது.

    * தி.மு.க. சட்டமனற் உறுப்பினரின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

    * கிட்னி திருட்டு போன்றவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

    இதனிடையே செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை எடப்பாடி பழனிசாமி காட்டினார். இதன்பின், ஊழல்வாதி என கூறிய செந்தில்பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.  

    • 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது.

    இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை டாக்டர் மற்றும் மகப்பேறு டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த டாக்டர்கள் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடல்நிலை சீரானது. இவர்களில் 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அருண்ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 16 கர்ப்பிணிகள், 11 குழந்தை பெற்ற தாய்ய்மார்களுக்கு ஆண்டிபயாடிக் ஊசி வழக்கம் போல் போடப்பட்டது.

    அப்போது திடீரென அவர்களுக்கு நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சீரான இயல்பு நிலைக்கு திரும்பினர். எனவே அவர்களுக்கு போடப்பட்ட மருந்து மற்றும் ஊசி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பிறகு சரியான காரணம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தை யார் இயக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஒரு சிலர் இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

    • முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர்.
    • புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் இரங்கல் குறிப்பை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வாசித்தார்.

    தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர். தொடர்ந்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டமுன்வரைவு, சரக்கு சேவை வரி சட்டதிருத்த மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிகுறைப்புக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு புதுவை சட்டசபையை கால வரையின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஒத்திவைத்தார். ஒட்டுமொத்தமாக 45 நிமிடத்தில் புதுச்சேரி சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

    மார்கோ திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்தது.

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொண்டார். இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்தது. இந்நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்கோ படத்தின் அடுத்த பாகம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகம் 2-க்கு லார்ட் மார்கோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கவில்லை. இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்குகிறார். திரைப்படத்தை க்யூப்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகனாக யாஷ் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

    • உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார்
    • இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.

    டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தரகாண்டில் சேதமடைந்த இடங்களை பாஜக எம்.பி. அனில் பலுனி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு பாஜக எம்.பி. மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் , "இந்த ஆண்டு உத்தரகண்டில் ஏற்பட்ட கடுமையான மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மிகவும் மோசமானம காயங்களை ஏற்படுத்தியுள்ளன, அவை குணமடைய நீண்ட காலம் எடுக்கும். நேற்று மாலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பயங்கரமான காட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

    இந்த பேரிடர் நேரத்தில், சவாலான சூழ்நிலைகளிலும் கூட சாலைகளில் இருந்து குப்பைகளை அகற்றும் அனைத்து அதிகாரிகள், NDRF-SDRF பணியாளர்களின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். பேரவை முன்பு முதல்-அமைச்சர் தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார்.

    அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முதல்-அமைச்சருடன் கலந்து பேசி சபையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    புதுச்சேரியின் மக்கள் நல பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் காரணம் என கூறவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது.

    இதுதொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 நாட்களாவது சபையை நடத்துங்கள் என பேசினார். அப்போதும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சபையை தொடர்ந்து நடத்த அமருங்கள். முதல்-அமைச்சருடன் பேசி சபையை நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்றார்.

    இந்த நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தனது இருக்கையிலிருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

    இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையை நடத்த இடையூறாக இருந்தது. இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.



    இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியகராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார்.

    தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது.

    ×