search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    • ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
    • அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.

    ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.
    • புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இப்போது மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் `கல்லூரி கனவு 2024' நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

    சென்னையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அப்போது முருகானந்தம் பேசியதாவது:-

    அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் காரணமாக மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்து உள்ளது. வறுமையின் காரணமாக பெண்கள் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. பஞ்சாலைகளில் பெண்கள் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலை இருந்தது.

    ஆனால் இப்போது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கபடுகிறது. அதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நாங்கள் படிக்கும்போது விழிப்புணர்வு தெரியாது. இப்போது அதிக விழிப்புணர்வு அரசால் ஏற்படுத்தபடுகிறது. உயர் கல்வியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது மாணவ-மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுமைப்பெண் திட்டம் போல, இந்த ஆண்டு முதல் உயர் கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ப்ளஸ் டூ முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது. இதே போல் ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நிகழ்ச்சி இன்று திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

    நாளை திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடு துறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 11-ந் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர் மாவட்டங்களில் 13-ந் தேதி ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    • எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • பிரீமியம் ஹேச்பேக் மாடல் i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஹூண்டாய் i20, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் மாடலுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகளை வழங்குகிறது.

    வெர்னா, கிரெட்டா, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலம், ஸ்டாக் இருப்பு மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுப்படும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எக்ஸ்டர் மாடல் 8 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தத்தில் 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 13 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் 83 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 69 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் சி.என்.ஜி. ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனினும், இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடலான i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12.52 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.
    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பார்த்தம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது,

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    • தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
    • நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன்- ஹிமாந்தா பிஸ்வா சர்மா

    காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "சாம் பாய், நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம். நாம் மாறுபட்டதாக தோன்றுகிறோம். ஆனால் எல்லோரும் ஒன்றுதான்" என பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
    • நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நொய்டாவில் உள்ள செக்டார் 107ல் உள்ள லோட்டஸ்-300 சொசைட்டியில் சிறுமியை நாய் கடித்துள்ளது. மே 3-ந்தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.

    சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.

    சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட்.
    • விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளனர்.

    லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (`THE GOAT') படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

     இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.

    சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

     இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

    இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.

    இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23'படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிக்சல் 8a ஸ்மார்ட்போன் டென்சார் G3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்- பிக்சல் 8a மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8a மாடலில் 6.1 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கூகுள் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் சப்போர்ட் அதாவது செக்யூரிட்டி அப்டேட்கள், ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

     


    கூகுள் பிக்சல் 8a அம்சங்கள்:

    6.1 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    கூகுள் டென்சார் G3 பிராசஸர்

    டைட்டன் M2 செக்யூரிட்டி சிப்

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஒ.ஐ.எஸ்.

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    4492 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    வயர்லெஸ் சார்ஜிங்

    இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 52 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை மே 14 ஆம் தேதி துவங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மந்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசம் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • வாக்குச்சாவடிக்கு சென்ற அவரிடம் நிருபர் கேள்வி கேட்ட நிலையில் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நேற்று 93 இடங்களுக்கு 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான வெப்ப அலை வீசிய போதிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

    நேற்று மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார். இவர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சவாடிக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர் அவரிடம், வெப்ப அலை குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா "உங்கள் பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக் கொண்டால் போதும்... வெயில் குறித்து கவலைப்படத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.

    பொதுவாக வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக உடலில் வெங்காயம் படும்படி வைத்திருந்தால் உடல்நிலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என நிரூபிக்கப்படவில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலையின்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் சோர்வை கட்டுப்படுத்த தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழ வகையில் சிறந்தது என கூறுகின்றனர்.

    சிவப்பு கலரில் உள்ள வெங்காயத்தில் க்வெர்செடின் (quercetin) என அழைக்கப்படும் வேதிப்பொருள் உள்ளது. அது ஹிஸ்டமைன் எதிர்ப்பு (anti-histamine) விளைவை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    ×