search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் 8 இடங்களில் மறியல்- தி.மு.க.-காங். எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்கு
    X

    குமரியில் 8 இடங்களில் மறியல்- தி.மு.க.-காங். எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்கு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து குமரியில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 247 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 81 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி கொட்டாரம் சந்திப்பில் நடந்த தி.மு.க. மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ., தாமரை பாரதி உள்பட 41 பேர் மீதும், சுசீந்திரம், பறக்கை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் 20 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ராஜாக்கமங்கலத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 12 பேர் மீதும், தக்கலை அழகிய மண்டபத்தில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 20 பேர் மீதும், ஆரல்வாய்மொழியில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 26 பேர் மீதும், மணவாளக்குறிச்சி சந்திப்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக 12 பேர் மீதும். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூடு கண்டித்து களியக்காவிளையில் காங்கிரஸ் சார்பில் சவபெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த தொடர் போராட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 247 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#SterliteProtest
    Next Story
    ×