search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி மீது மோதிய விபத்தில் பஸ் தீப்பிடித்தது.
    • இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.

    பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.

    தீ மளமளவென பரவியதால் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், வாக்களித்து விட்டு திரும்புகையில் விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

    • வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வைசிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுங்கம்மா (வயது 52). இவருடைய மகன் வெங்கடேசலு.

    நேற்று முன்தினம் ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என வெங்கடேசலு அவரது தாயாரிடம் கூறினார்.

    ஆனால் சுங்கம்மா இதனை கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அன்று சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏறி வாக்களிக்க சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனால் தாயின் மீது வெங்கடேசலு கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த வெங்கடேசலு அவரது தாயிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்களை நன்றாக செய்துள்ளது. இதனால் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டேன் என்றார்.

    இதனால் ஆத்திரம் உச்சத்திற்கு ஏறிய வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுங்கம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் வெங்கடேசலு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் தூண்டுதலின் பேரில் வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல ஏலூர் மாவட்டம் விஜயாரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி. தெலுங்கு தேசம் கட்சி தொண்டரான இவர் தேர்தலில் அந்தக் கட்சிக்காக கடுமையாக வேலை பார்த்தார். தேர்தல் முடிந்த நிலையில் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவருடைய தந்தை பென்டையா மற்றும் தாய், சகோதரி ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களித்தோம் என பதில் அளித்தனர். இதனால் வெறிபிடித்த வம்சி இரும்பு கம்பியால் தந்தை தாய் மற்றும் தங்கையை தாக்கினார்.

    அப்போது அவருடைய தந்தை நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அதனால் அந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    ஆனாலும் தந்தை என்று கூட பார்க்காமல் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கினார். அக்கம் பக்கத்தினர் சென்று இதனை தடுத்து நிறுத்தினர். காயம் அடைந்த பென்டையா மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
    • திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த 'புழு'என்ற திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியது. ரதீனா என்பவர் இயக்கிய இந்த மலையாள திரைப்படத்திற்கு மம்முட்டியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரவித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சின்குட்டி. அவர் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டு, மூத்த நடிகர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

    அதேபோன்று மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும்.
    • நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர்.

    கல்யாணி:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்காளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

    தற்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

    நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் சிக்கிக் கொண்டனர்.
    • அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. நேற்று இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் சிக்கிக் கொண்டனர்.

    கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவை ஏற்றிச்சென்ற லிப்ட் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பியபோது லிப்டின் கம்பி அறுந்து விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக உள்ளூர் எம்.எல்.ஏ. தரம்பால் குர்ஜார் கூறுகையில், மீட்பு பணிகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. முழு நிர்வாகமும் விழிப்புடன் உள்ளது. உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.

    • ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
    • கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும்.

    பெங்களூரு:

    ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

    பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார்
    • இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து அவரின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக நேற்று (மே 13) ஸ்வாதியிடம் இருந்து வந்த போன் அழைப்புகளை அடுத்து சம்பவ கெஜ்ரிவால் இல்லத்துக்கு விரைந்த டெல்லி காவல்துறை 2 வது நாளாக இன்று (மே 14) விசாரணை நடத்தி வருகிறது.

    2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறையை மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள டெல்லி பாஜக, ஆம் ஆதமியினரை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் ராவத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மலிவால் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை தான் என்றும் இது மிகுந்த கண்டனத்துக்குரிய சம்பவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்துளார். பிபவ் குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
    • ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. 150 மில்லி கிராம் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. டீயில் 30-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது.

    ஆகவே ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர், காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்படக்கூடும் எனவும் இதனால் அனீமியா, ரத்த சோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் அதிகளவில் காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    அதே சமயம் பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது.
    • இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) நிறுவனத்தின் இயக்குநர் தீரஜ் வதாவன், ₹34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக தீரஜ் வதாவன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

    17 வங்கிகள் இணைந்து 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் டி.எச்.எப்.எல். வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாகும்.

    ஏற்கனவே யெஸ் வங்கியின் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே இருந்த தீரஜ் வதாவனை மீண்டும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தீரஜ் வதாவனை நேற்று கைது செய்த சி.பி.ஐ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவருக்கு மே 30 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடுமயான மோதல் வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு சில இடங்களில் பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகும் இன்று (மே 15) மதியம் திருப்பதி மாவட்டத்தில், சந்திரகிரி தோகுதி தெலுங்கு தேச கூட்டணி வேட்பாளர் புலிவர்த்தி நாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பத்மாவதி பலக்லைக்கழகத்தில் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு திரும்பும்போது நாணி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் நாணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகையில், சுமார் 150 பேர் கத்தி, மற்றும் தடிகளுடன் வந்து தங்களை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் ஓஎஸ் ஆர் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஓஎஸ்ஆர் கொடிகளுடன் காணப்பட்ட வாகனங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

    பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

    பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

    பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

    பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

    கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
    • கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்மனுவை இன்று பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இத்தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    அப்போது பேசிய மோடி, "கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.

    இந்நிலையில், கங்கை நதி குறித்து மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    • கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ.20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?

    • மோடி, தான் தத்தெடுத்த வாரணாசி கிராமங்களை கைவிட்டது எதற்கு?

    • வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?

    என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    ×