என் மலர்
இந்தியா
- மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று காணப்பட்டார்.
இதையடுத்து மாணவியை அவரது தந்தை, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு மனநல பாதிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிகிச்சை அளித்த டாக்டர், பள்ளி மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.
அப்போது தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை டாக்டர் மற்றும் தனது தந்தையிடம் மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தனது மகள் படித்த பள்ளி ஆலோசகருக்கு தகவல் கொடுத்தார்.
அவர் அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் தன்னை உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக தெரிவித்தார்.
அதில் உறவினர் ஒரு முறையும், பக்கத்து வீட்டுக்காரர் பல முறையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் 2024-2025 காலக்கட்டத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, கடந்த இரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் மாணவியின் சாவுக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மாணவி மரணம் தொடர்பாக "இயற்கைக்கு மாறான மரணம்" என்று போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.
கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.
வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டும் வகையிலான இந்த கண்டித்து வருகின்றனர்.
ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது.
- ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன?
மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் கேள்விகளை அடுக்கிய நீதிபதி காந்த்,
"இவை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு உகந்ததா? இலவசங்களால் ஒட்டுமொத்த நாடும் ஏற்கனவே... நாங்கள் குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் பேசுகிறோம். நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?
ஒரு நல்ல அரசு என்ற முறையில், விளிம்புநிலை மக்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வசதியுள்ளவர்கள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் நீங்கள் (இலவசங்களை) வழங்கத் தொடங்கினால், அது ஒரு வகையான 'திருப்திப்படுத்தும் அரசியல்' ஆகாதா?"
நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையை சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்துவது போன்ற ஒட்டுமொத்த பொதுமக்களின் வளர்ச்சிக்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, நீங்கள் தொடர்ந்து உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மக்களும் தேர்தல் நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. கல்வி கற்க வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அதை வழங்க வேண்டும். அது அரசின் கடமை. திறமையான ஆனால் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வசதியற்ற குழந்தைகள் இருந்தால், அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், வசதிகளை அனுபவிக்கக்கூடிய நிலையில் இருக்கும், அனைத்து வாழ்வாதாரங்களும் கொண்ட வசதி படைத்தவர்களுக்கே எந்த வகையான இலவசமும் முதலில் போய்ச் சேருகிறது. மாநில அரசுகள் தங்களது இதுபோன்ற கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது? என்று நினைக்கிறோம்.
சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களை நாம் பார்த்தோம். ஏன் தேர்தல் நெருங்கும் வேலையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் ஆளுமைகள், தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இப்படி இலவசங்களை தொடர்ந்து கொடுத்துவந்தால் அது நாட்டின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்த இலவசங்கள் எவ்வளவு நாள் நீடிக்கும்?
மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்களுக்கு இத்தகைய பண விநியோகங்களைச் செய்து வருவதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணிக்கக்கூடாது? சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம் என நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்கான நீண்டகால வளர்ச்சி திட்டத்தை உருவாக்கலாம்.
மக்கள் சுயமாக சம்பாதித்து, கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகளை அரசு உருவாக்க வேண்டும். இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என அனைத்தையும் கொடுக்கத் தொடங்கி... நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே பணத்தையும் செலுத்தினால், பிறகு மக்கள் ஏன் வேலை செய்யப் போகிறார்கள்? தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும் என்று தெரிந்த பிறகு, அவர்கள் எங்கிருந்து வேலையைக் கற்றுக்கொள்வார்கள்? நாம் இப்படித்தான் தேசத்தைக் கட்டமைக்கிறோமா?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
- பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.
குழு புகைப்படத்தின் போது, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic சிஇஓ டேரியோ அமோடி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். ஆனால், பக்கத்து பக்கத்தில் நின்ற சாம் ஆல்ட்மேனும் டேரியோ அமோடியும் மட்டும் கைகளைக் கோர்க்கவோ, கைகுலுக்கவோ செய்யாமல் தவிர்த்தனர்.
இந்த இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கடுமையான தொழில் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் முன்பு 'OpenAI' நிறுவனத்திலேயே துணைத் தலைவர்களாக பணியாற்றினர். அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
சாம் ஆல்ட்மேன் AI பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டி, டேரியோ மற்றும் டேனியலா, 2021ல் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.
வெளியேறிய பிறகு, அவர்கள் 'Anthropic' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இது தற்போது OpenAI-க்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
இந்தத் தொழில்முறைப் பகைதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் உலகமே கவனிக்கும் மாநாட்டின் மேடையிலும் வெளிப்பட்டது.
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-
பிரதமர் மோடி நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புதமான நாட்டில், இந்த அற்புதமான நகரத்திற்கு எங்களை வரவேற்றதற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு தெரு வியாபாரி வங்கிக்கணக்கை திறக்க முடியவில்லை. முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை. இன்று அதே விற்பனையாளர் தனது தொலைபேசியில் பணம் செலுத்துகிறார்.
உலகில் வேறு எந்த நாடும் உருவாக்காத ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. 140 கோடி மக்களுக்கான டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் ஒரு கட்டண முறை செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முடியாது என்று உலகம் இந்தியாவிடம் கூறியது. ஆனால் அது தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது.
விரைவாக புதுமைகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு நமது மனித குலத்திற்கு உதவும் என்று நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் இருவரும் இந்தப் புரட்சியை நம்புகிறோம்.
செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய துறையாக மாறியுள்ளது. இந்த பெரிய தொழில்நுட்பம் இன்னும் பெரியதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் புதுமை மற்றும் பொறுப்புணர்வு, தொழில் நுட்பத்தை மனிதநேயத்துடன் இணைப்பவர்களால் கட்டமைக்கப்படும். இந்தியாவும் பிரான்சும் இந்த எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைக்க உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் நான் வியப்படைகிறேன்.
- விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏ.ஐ மையத்தை நிறுவ உள்ளது.
ஏ.ஐ உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பேசியதாவது:-
இந்தியாவுக்கு மீண்டும் வருவது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை வருகை தரும் போதும், மாற்றத்தின் வேகத்தால் நான் வியப்படைகிறேன். நான் ஒரு மாணவனாக இருந்தபோது சென்னையில் இருந்து ஐ.ஐ.டி கரக்பூர் வரை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி சென்றேன். அந்த ரெயில் விசாகப்பட்டினம் வழியாக செல்லும். இப்போது விசாகப்பட்டினம் நகரத்தில் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் ஏ.ஐ மையத்தை நிறுவ உள்ளது.
இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி மற்றும் ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி கேபிள் நுழைவாயிலைக் கொண்டிருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் அதிநவீன ஏ.ஐ-யையும் கொண்டு வரும். ஏ.ஐ என்பது மறுக்க முடியாத வகையில் பணியாளர்களை மறுவடிவமைக்கும். முற்றிலும் புதிய தொழில்களை உருவாக்கும் என்றார்.
- 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.
- நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வினுகொண்டாவிலிருந்து வடமேற்கே 20 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.
நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக, நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
- செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் தேசிய நிறுவனமாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ.) உள்ளது.
யு.பி.ஐ. சேவையை அறிமுகப்படுத்தி நாட்டின் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திய என்.பி.சி.ஐ. நிறுவனம் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக என்விடியாவுடன் கைகோர்த்துள்ளது.
அதன்படி யு.பி.ஐ. செயலியை மேலும் மேம்படுத்தி செயற்கை நுண்ணறிவு வசதிகளை புகுத்த என்விடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
- தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது.
சபரிமலையில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான 2 வழக்குகளில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 41 நாட்களாக சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. 41 நாட்களில் 2 முறை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று தந்திரி கண்டரரு ராஜீவருவின் ஜாமின் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது தந்திரி தரப்பில், தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு தொடர்பு இல்லை. மேலும் சிறையில் உள்ள அவருக்கு அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி. தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை சிறப்பு விசாரணை குழு தரப்பில் ஆஜர்படுத்தவில்லை என்ற அடிப்படையில், தந்திரிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இதை விசாரித்த ஐகோர்ட், வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.
புதுடெல்லி:
அரியானா மாநில வீட்டுவசதி துறை சார்பில் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளில், அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு என 2 வீடுகள் ஒதுக்கப்பட்டது.
அரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு. வீடு ஒதுக்கீட்டு நடவடிக்கையில் தலையிட முடியாது என மறுத்து விட்டது.
இதைத்தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரிக்க நீதிபதிகள் சஞ்சய் குமார், வினோத் சந்திரன் அமர்வு, பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.
அத்துடன் 2 வீடுகளின் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
அத்துடன் வீடு வாங்கியவர்களுக்கும் அபராதம் விதித்ததுடன், வீட்டில் இருந்து ஒரு மாதத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டனர்.
முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் தன்னிச்சையானவை, பாரபட்சமானவை மற்றும் அமைப்பின் தகுதி அளவுகோல்களை மீறுவதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு சலுகை வழங்குதல் மற்றும் சுயநலம் பாராட்டுதல் ஆகியவை ஒரு ஜனநாயக அமைப்புக்கு விரோதமானவை எனக்கூறிய நீதிபதிகள். அரசு சேவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சமூகத்துக்குள் வெளிப்படையான ஒதுக்கீட்டின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
வீடுகளை ஒதுக்குவதில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் காட்டக்கூடாது என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் பாரபட்சம் மற்றும் சுயநலமே மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
- இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
புதுடெல்லி:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரலாம என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.






