என் மலர்
இந்தியா
- LIC இன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதி முதலீடு.
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது" மற்றும் "மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.
நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?
2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.
இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.
விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.
- விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
- பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
பயணிகள் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் இதமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் அந்த நேரத்தில் அது அவர்களின் கடைசி தூக்கம் என்று தெரியாது.
பஸ்சில் பலியான 19 பேரின் முழு வாழ்க்கையும், கொளுந்துவிட்டு எரிந்த தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.
இந்த விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப்கள் வெடித்து சிதறியது.
விபத்து குறித்து உயிர் தப்பிய பயணிகள் கூறியதாவது:-
விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
எங்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் கை, கால்களை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பித்தோம்.
பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து முன்பக்க கதவை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு டிரைவர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் முன் பக்க கதவை திறந்து விடவில்லை. பயணிகளை எச்சரிக்காமல் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிர் தப்பிய அஷ்வின் என்பவர் கூறுகையில்:-
நான் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்தேன். டிரைவர் ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். மேலும் கீழே குதித்து மணலை அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றதை கண்டேன்.
ஆனால் அவர்கள் முழுமையாக முயற்சி செய்யாமல் ஓடிவிட்டனர். நான் பஸ் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன் என்றார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டம் ஒப்பி செர்லாவை சேர்ந்த டிரைவர் லட்சுமய்யா என தெரியவந்தது.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் லட்சுமய்யா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 10-ம் வகுப்பு தோல்வி அடைந்ததாக போலி சான்றிதழ் கொடுத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றது தெரியவந்துள்ளது.
பஸ்சில் தீ அணைக்கும் கருவி, ஜன்னல்களை உடைக்கும் சிறிய சுத்தியல் போன்றவை இல்லை. இதனால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. விதிமீறியதாக ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பஸ்சில் இருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் ஒரு பயணி இறந்து கிடந்தார். அவர் எப்படி லக்கேஜ் கேரியருக்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பயணி ஒருவரின் உடல் ஜன்னலுக்கு வெளியே பாதியும் உள்ளே பாதியும் கருகிய படி கிடந்தார். இது விபத்தின் தீவிரத்தை காட்டியது.
இறந்தவர்களில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்பதிவு செய்யாமல் பயணித்த ஒரு பயணியின் அடையாளம் தெரியாமல் உள்ளது.
மேலும் பஸ் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மதகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 32) இவர் சங்கா ரெட்டி பகுதியில் சிப்ஸ் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
மேலும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22 )என்பது தெரிய வந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- பீகாரின் சிவன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார்.
- ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
பாட்னா:
பீகாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் ரவுடியான சகாபுதீனின் மகனை ராஷ்ட்ரீய ஜனதா தளம் களமிறக்கி உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:
சகாபுதீனின் மகன் படுதோல்வி அடைவதை இங்குள்ள மக்கள் உறுதிசெய்ய வேண்டும்.
லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவியின் காட்டாட்சியை மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து உள்ளனர்.
பீகார் மக்கள் தேர்தல் முடிவு வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிதான் உண்மையான தீபாவளியை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
ராஷ்டிரீய ஜனதா தளமும், அதன் கூட்டணி கட்சிகளும் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும்.
ஊடுருவல்காரர்கள் இங்கேதான் இருக்கவேண்டும் என்கிறார் ராகுல் காந்தி.
ஆனால் ஊடுருவல்காரர் ஒருவர் கூட பீகாரில் அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவித்தார்.
- ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தரும்படி சம்பா பகத் கேட்டார்.
- மகளின் கனவை நிறைவேற்ற அவர் தினமும் சில நாணயங்களை சேர்த்து வந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத். விவசாயியான தனது தந்தையிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி சம்பா பகத் கேட்டார்.
தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர், தினமும் சில நாணயங்கள் மற்றும் ரூபாயை ஒரு சேர்த்து வந்தார். சில மாதங்கள் கழிந்த நிலையில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது.
இந்நிலையில், நாணயங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் தனது மகளுடன் சென்றார்.
ஷோரூம் மேலாளர் விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து, நாணயங்களை வேண்டாம் என சொல்லாமல் அவற்றை வாங்கி ஊழியர்களிடம் எண்ணும்படி கூறினார்.
நாணயங்களை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.40 ஆயிரம் இருந்தது. மீதி பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார்.
அதன்படி, அவரிடம் புதிய ஸ்கூட்டர் சாவி கொடுக்கப்பட்டது. அந்த சாவியை தனது மகளிடம் வழங்கி மகிழ்ந்தார். தந்தையும், மகளும் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- SIR-க்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
- ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பீகார் மாநில வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பீகார் நடத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அது நடக்க அனுமதிக்காது. அவர்களின் நிலை முற்றிலும் வெளிப்பட்டுள்ளது. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு, அவர்களிடம் ஆதாரம் இல்லை.
பணம் பறித்தல், காட்டு ராஜ்ஜியம், மிரட்டல்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு. கடந்த 20 ஆண்டுகளில் நிதிஷ் குமார் காட்டு ராஜ்ஜியம் இல்லாத பீகாரை உருவாக்கியுள்ளார்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
- வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
- அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.
பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.
வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.
- வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மெடா அடுத்த கோஹோடாவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் ராகேஷ் ( 21) மற்றும் ஸ்ரீஜா (18).
3 பேரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தனர். நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் வைஷ்ணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது வைஷ்ணவி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வைஷ்ணவி இறந்த தகவல் ராகேஷுக்கு தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அவர் அந்த அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் ஸ்ரீஜாவுக்கு தெரியவந்தது. நெருங்கிய நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அதிகாலை ஸ்ரீஜாவின் தந்தை வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். படுக்கை அறைக்குச் சென்ற ஸ்ரீஜா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
- தனது தந்தைபோன்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்- யதீந்திரா.
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, அடுத்த மாதம் நவம்பரில் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், "சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். அத்துடன் "தனது தந்தைபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி முன்னோக்கு சிந்தனை கொண்டவர்" எனக் கூறியிருந்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், சதீஷ் ஜர்கிஹோலி பெயரை பயன்படுத்தியது டி.கே. சிவக்குமார் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.கே. சிவக்குமார்தான் முதலமைச்சராக வேண்டும் என்று கூறிய இரண்டு பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சித்தராமையாவின் மகனுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு டி.கே. சிவக்குமார் "இதற்கு நான் இப்போது பதில் கூற போவதில்லை. யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என சித்தராமையா கூறி வருகிறார்.
- நல்ல சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா சென்றுள்ளார்.
- உரிமையாளர் கொன்று விடுவதாக மிரட்டுவதாக வீடியோவில் பதிவு.
இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கடுமையான வேலை வழங்கப்படுகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. கபீல் என அழைக்கப்படும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் டிராவல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவது உண்டு.
இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. இந்திய தூதரகம் மூலம் அவர் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டகம் மேய்த்தவாறு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள், உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில், என்னுடைய கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். என்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது. என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-
தூதரகம் இந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டது. அவர் இருக்கும் மாகாணம் அல்லது இடம் அல்லது உரிமையாளர் விரம், தொடர்பு கொள்ளும் எண் குறித்து அதில் தெரிவிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்க எடுக்க முடியவில்லை.
இந்த இளைஞகன் போஜ்பூரி மொழியில் பேசுகிறார். பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிறார். நம்பத்தகுந்த வகையிலான அந்த இளைஞனின் குடும்பத்தின் விவரம் தெரியவந்தால், தொடர்பு கொள்ளும் வகையில் தங்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.
- மனைவி பிரிந்த நிலையில் ஆண் நண்பரின் தனியாக வசித்து வந்துள்ளார்.
- தந்தையை பார்க்க வந்த சிறுமியை, நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மகளை சீரழித்த, ஓரினச்சேரிக்கை பார்ட்னரின் ஆணுறுப்பை துண்டித்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் 32 வயது நபர். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்ததால், ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அவருடன், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பரை அந்த அறையில் சேர்த்துக் கொண்டார்.
இவருக்கும் இடையிலான நட்பு, பின்னர் ஓரினசேர்க்கையாளராக இணைந்து வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் சிறிய அறையில் வாழ்ந்து வந்த நிலையில், ஒருநாள் அந்த நபரின் 6 வயது மகள் தந்தையை பார்ப்பதற்காக, அந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது ராம்பாபு யாதவ், தனது பார்ட்னரின் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த விசயம் அந்த சிறுமியின் நண்பருக்கு ஒரு சில தினங்கள் கழித்து தெரியவந்துள்ளது. அடைக்கலம் கொடுத்து பார்ட்னராக்கிய நிலையில், தனது மகளையே சூறையாடிவிட்டானே என அந்த சிறுமியின் தந்தை கடுங்கோபம் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அத்துடன் ராம்பாபு யாதவுடன் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிறுமியின் தந்தை, கத்தியை எடுத்து நண்பரின் ஆணுறுப்பை அறுத்து துண்டாக்கினார். இதனால் ராம்பாபு யாதவ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
ராம்பாபு யாதவ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மெடிக்கல் உதவி மற்றும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தாய்வழி பாட்டி வீட்டிற்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்.
- முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து தேஜஸ்வி பேசினார்.
- நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மகாபந்தன்(இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
ஏற்கனவே பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பெண் வாக்காளர்களை குறிவைத்து, தான் ஆட்சிக்கு வந்தால், வெறும் ரூ.500க்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மாநில மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று அவர் உறுதியளித்தார்.
முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று அவர் வினவினார்.
மேலும், "நான் செய்வதைத்தான் சொல்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருப்பேன். பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை நான் வழங்குவேன்" என்று தேஜஸ்வி தெரிவித்தார்.






