என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்
Byமாலை மலர்14 Nov 2019 10:16 AM GMT (Updated: 14 Nov 2019 10:16 AM GMT)
ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய கோர்ட், முந்தைய தீர்ப்பை உறுதிசெய்தது. மேலும், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வந்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் அதிபர் மேக்ரான்கூட நிராகரித்துள்ளார். அரசின் வெளிப்படை தன்மையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்தினார். ஒவ்வொரு கூட்டத்திலும் விமானங்கள் குறித்து பொய் சொல்லி வந்தார். பொய் சொன்னதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X