search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale case"

    ரபேல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது என்று ரபேல் தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். #Rafale #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.

    இது பற்றி அவர் அமேதியில் கருத்து தெரிவிக்கையில், “ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. அனில் அம்பானிக்கு மோடி ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார்” என குறிப்பிட்டார்.

    அத்துடன், “சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கி உள்ளது. ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தன்னை குற்றமற்றவர் என கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட் இதில் தெளிவுபடுத்தி உள்ளது. விசாரணையை தொடங்கி இருக்கிறது” என கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றார்.



    இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், “ பிரதமர் மோடி, தான் விரும்பும் வரை ஓடிக்கொண்டிருக்கலாம். பொய் சொல்லலாம். ஆனால் உடனேயோ அல்லது பின்னரோ உண்மை வெளியே வரும். ரபேல் ஊழலின் எலும்புக்கூடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வருகின்றன. அதை மறைப்பதற்கு என்று அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் இல்லை” என்றார்.

    மேலும், “ இதில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விசாரணை நடக்கப்போகிறது” என கூறி உள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, “ ரபேல் பேரத்தில், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில், மிகப்பெரிய பிரச்சினைகளை, ஊழல்களை மறைக்க பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள், தோல்வி கண்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சி வெளிப்படுத்தப்பட்டு விட்டது” என டுவிட்டரில் கூறி உள்ளார்.

    மேலும், “பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பிரதமர் பொய்கள் பேசி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராணுவ மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் அதில் கூறி இருக்கிறார்.

    டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், “ரபேல் பேரத்தில் தான் குற்றமற்றவர் என சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறி வந்தார். சுப்ரீம் கோர்ட்டு இப்போது வழங்கி உள்ள தீர்ப்பு, ரபேல் பேரத்தில் மோடி திருடி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது” என கூறி உள்ளார்.

    மேலும், “ பிரதமர், நாட்டின் பாதுகாப்பு படையை ஏமாற்றி உள்ளார். குற்றத்தை மறைக்க சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழிநடத்தி உள்ளார்”எனவும் குறிப்பிட்டு உள்ளார்.  #Rafale #SupremeCourt #RahulGandhi 
    ‘ரபேல்’ போர் விமான பேரம் குறித்து கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. #RafaleCase #SupremeCourt #Judgment
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.



    பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்பது அப்போது தெரியவரும். #RafaleCase #SupremeCourt #Judgment 
    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #RafaleDeal #RafaleCase
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.



    ரபேல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நிதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று பிற்பகல் உச்சநீதின்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

    ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும், அது டசால்ட் நிறுவனத்தின் முடிவு  என்றும் மத்திய அரசு கூறியது.

    ஆனால், ரபேல் விலை தொடர்பான ரகசியங்களை அரசு மறைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இவ்வாறு தொடர்ந்து காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். #RafaleDeal #RafaleCaseVerdict
    ×