என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து நகை, கேமரா, லேப்டாப் திருட்டு
Byமாலை மலர்21 May 2022 9:43 AM GMT (Updated: 21 May 2022 9:43 AM GMT)
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கேமரா, லேப்டாப் திருட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது52), விவசாயி. இவர் கடந்த 12-ந் தேதி ராசிபுரம் பெரியமணலியில் உள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றி–ருந்தார், இந்த நிலையில் நரசோதிப்பட்டியிலுள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சந்திரகுமார் விரைந்து சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் லேப்டாப், கேமரா, வாட்ச் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X