என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையை மொட்டையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அவுராய் பகுதியில் உள்ள சியூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணவன் திட்டியதற்கு பபிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
மனைவி தன்னை எதிர்த்தால் ஆத்திரமடைந்த கணவன், பபிதாவை கொலை செய்வதாக மிரட்டி, அவரை தாக்கி, பின்னர் கூர்மையான பொருளைப் பயன்படுத்தி அவரின் தலையை மொட்டையடித்தார்.
மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று முன் தினம் இரவு, பபிதாவும் அவரது தாயாரும் அவுராய் காவல் நிலையம் சென்று, ராம் சாகர் மீது புகார் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் போலீசார் இன்று தெரிவித்தனர்.
- பாஜக என்பது நாடு அல்ல. பிரதமர் கடவுள் அல்ல.
- நீங்கள் கேள்வி கேட்டால், உங்களை தேசத்துரோகி என்றும் முத்திரை குத்துவார்கள்.
போஜ்புரி நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கவிஞர் அபய் பிரதாப் சிங்கின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவுகள் நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று புகாரில் கூறப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் குறித்து நேஹா கேள்வி எழுப்பியதாகவும், தேச விரோத அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இது அமைதி மற்றும் பொது ஒழுங்கை மீறும் வாய்ப்பை உருவாக்கியதாகவும் அபய் பிரதாப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
நேஹா சிங் கூற்றுகள் பாகிஸ்தானில் வைரலாகிவிட்டன, அங்கு ஊடகங்கள் அவற்றை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றன என்றும் அபய் பிரதாப் தெரிவித்தார்.
இந்நிலையில் தன் மீதான எஃப்.ஐ.ஆர் குறித்து புதிய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அரசு மீது நேஹா கடுமையான விமரசனங்களை முன்வைத்துள்ளார்.
நேஹா கூறியதாவது, பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது? எனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் விரும்புகிறது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வாருங்கள். உங்கள் தோல்விகளுக்கு என்னைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய கேள்விகளில் அரசாங்கத்திற்கு பிரச்சனைகள் உள்ளன. அதனால்தான் அவர்கள் நான் கேள்விகள் கேட்பதைத் தடுக்க விரும்புகிறார்கள்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் உண்மையான கேள்வி. எத்தனை பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வந்தீர்கள்? பாகிஸ்தானுக்குப் போய் பிரியாணி சாப்பிடவா நாடு உங்களைத் தேர்ந்தெடுத்தது? இதற்கு ஏதாவது பதில் இருக்கிறதா?
இந்த நாட்டு மக்களிடம் நீங்கள் இதற்குத்தானே வாக்களித்தீர்கள் என்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் கேள்வி கேட்டால், உங்களை தேசத்துரோகி என்றும் முத்திரை குத்துவார்கள்.
பாஜக என்பது நாடு அல்ல. பிரதமர் கடவுள் அல்ல.ஜனநாயகத்தில் விமர்சனங்கள் இருக்கும். கேள்விகள் நிச்சயமாகக் கேட்கப்படும். என்னுடைய கேள்விகளில் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தால், அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாருங்கள். அப்புறம் நான் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்' என்று தெரிவித்தார்.
- கராச்சியில் இருந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.
- சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் விசா சேவைகளையும் ரத்து செய்தது. விசிட்டிங் விசாவில் வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் திரும்பவும், சிகிச்சைக்காக வந்தவர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் திரும்வும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாஸ்கிதானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் 2023 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமில் சந்தித்த தனது காதலனுடன் வாழ பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்.
சிந்து மாகாணம், கராச்சியில் இருந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்த சீமா ஹைதர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் தனது காதலன் சச்சின் மீனாவுடன் வசித்து வருகிறார். பல்வேறு விசாரணைகளுக்குப் பின் அவர் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டார். சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். இப்போது நான் இந்தியாவின் மருமகள்.
நான் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்பவில்லை. எனவே, தயவுசெய்து என்னை இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சீமா சச்சினை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றும் எனவே அவர் கணவருடன் இந்தியாவில் இருக்க உரிமை உள்ளது என்று அவர்களின் வக்கீல் தெரிவித்தார்.
- உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள அரிசி ஆலையில், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இன்று காலை ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் சிலர், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதை ஆய்வு செய்ய சென்றனர்.
புகை மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஐந்து தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று தொழிலாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது.
- எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார்.
நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றிக்கு கேரண்டி அளிப்பதால் ஆப்பிள் ஐபோன் அதிகம் வாங்கப்படும் போன் பிராண்ட் ஆக உள்ளது.
ஆனால் உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் ஒரு நபரின் பாக்கெட்டிற்குள் ஆப்பிள் ஐபோன் 13 வெடித்துச் சிதறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, வெடிப்புக்கு பிறகு செல்போன் கடுமையாக எரிந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது. சாதனம் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது ஏற்பட்ட வெடிப்பில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, அந்த நபர் சில நாட்களுக்கு முன்புதான் ஐபோன் 13 ஐ வாங்கியிருந்தார். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாக்கெட்டில் வைத்திருந்தபோது திடீரென போன் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அந்த நபர் வலியால் அலறி, எரியும் தொலைபேசியை தனது பாக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே எடுத்து வீசினார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மீரட்டில் கடந்த மாதம் கணவனை கொலை செய்து டிரம்மில் அடைத்த சம்பவம் நடைபெற்றது.
- அதேபோல் துபாயில் இருந்து வந்த கணவனை கொலை செய்த மனைவி உடலை சூட்கேசில் அடைத்து வீசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்து டிரம்மில் உடலை போட்டு சிமெண்ட் வைத்து அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் இந்தியாவை பயத்தில் நடுநடுங்க வைத்தது.
இந்த நிலையில் உத்தர பிரதேசம் கோரக்பூரில் அதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பதௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவுஷாத் அகமது (வயது 38). இவரது மனைவி ரஜியா. நவுஷாத் அகமது துபாயில் வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக சொந்த கிராமம் வந்துள்ளார்.
நவுஷாத் அகமது துபாயில் வேலை பார்த்தபோது ரஜியாவுக்கும், ரூமான் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் இது கள்ளக் காதலாக மாறியுள்ளது. கணவர் சொந்த கிராமம் திரும்பியதால் அவர்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்துள்ளனர்.
இதனால் கணவனை தீர்த்துக்கட்ட கள்ளக் காதலனுடன் ரஜியா திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூமான் நண்பர் ஹிமான்ஷு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நவுஷாத் அகமது கொலை செய்துள்ளனர். கொலை செய்ததுடன் உடலை இரண்டு துண்டாக வெட்டியுள்ளனர். வெட்டிய உடலை சூட்கேசில் வைத்து திணித்து 55 கி.மீ. தூக்கிச் சென்று பட்கவுலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வீசிவிட்டு வந்துள்ளனர்.
விவசாயி காலையில் விவசாய நிலத்திற்கு செல்லும்போது, அங்கே ஒரு சூட்கேஸ் கிடப்பதை கண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சூட்கேஸை திறந்து பார்க்கும்போது இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வரும்போது சூட்கேஸில் விமானம் பயணம் தொடர்பான டேக் ஒட்டப்பட்டிருக்கும். அந்த டேக் அகற்றப்படாமல் அப்டியே இருந்துள்ளது. அந்த டேக்கை வைத்து நவுஷாத் அகமது வீட்டை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
நவுஷாத் அகமது மனைவி முதலில் தனது கணவரை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை எனக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையின்போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனதளவில் பாதிப்பு அடைந்து ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
- வீடியோ ஒன்றை பதிவு செய்து நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.
லக்னோ:
உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் மோகித் யாதவ். இவரது மனைவி பிரியா. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
மோகித் யாதவ் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி எழுத வேண்டும் என அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியின் குடும்பத்தினரும் சேர்ந்து சித்ரவதை செய்தனர்.
சொத்துக்களை மனைவியின் பெயரில் எழுதித் தராததால் மோகித் யாதவ் மீது போலீசில் வரதட்சணை கொடுமை புகார் செய்தனர்.
மனதளவில் பாதிப்பு அடைந்த மோகித் யாதவ் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்தின் போது மனைவியின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்துக்களை மனைவி பெயருக்கு மாற்றித் தராததால் போலீசில் பொய் வழக்கு கொடுத்தனர்.
மனைவியுடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் என்னை சித்திரவதை செய்தனர். மனைவி அடிக்கடி என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மனைவிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் எனது மாமியார் கர்ப்பமாக இருந்த எனது மனைவியின் கருவை கலைத்து விட்டார். மேலும் எனது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு கொடுப்பதாக மிரட்டல் விடுத்தனர்.
தொல்லை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என வீடியோவில் கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகித் யாதவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
- டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர், மகளின் பிறந்தநாள் விழாவுக்காக லண்டனில் இருந்து வந்தார். அப்போது அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்தார். தொடர்ந்து உடலை துண்டுதுண்டாக வெட்டி வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்டு கலவையுடன் கலந்தார்.
போலீசார் விசாரணையில், மனைவியே கணவனைக் கொன்று டிரம்மில் அடைத்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் டிரம் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் கார்டுகளை கடைக்காரர்கள் கேட்டனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அமீர்பூரில் ஒரு புதுமண ஜோடிக்கு திருமணம் ஆனது. வரவேற்பு விழாவில் புது மாப்பிள்ளையின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பிளாஸ்டிக் டிரம் ஒன்றை திருமணப் பரிசாக அளித்தனர். இதனால் புதுப்பெண் உள்பட திருமண ஜோடியின் முகத்தில் அசடு வழிந்தது. அதனை சிரித்தபடி சமாளித்து நண்பர்களின் விஷமத்தனமான குறும்பு செயலை ஏற்றுக்கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.
- 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார்.
- வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தில் இருந்த தங்க காதணிகளை வார்டு பாய் ஒருவர் திருடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தகவலின்படி, ஷாம்லி மாவட்டத்தில் பாப்ரி பகுதியின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த சச்சின் குமாரின் 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பாப்ரி காவல் நிலையப் பெண் போலீசார், பிரேத பரிசோதனைக்கு முன் உடலைப் பரிசோதிக்கத் தொடங்கியபோது, அந்தப் பெண்ணின் காதணிகள் காணாமல் போனதைக் கவனித்தனர்.
விசாரணையின் போது, வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார். அவரது வாக்குமூலங்களில் சந்தேகம் இருந்ததால், சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளில், வார்டு பாய் விஜய் அந்தப் பெண்ணின் உடலில் இருந்து காதணிகளைக் கழற்றியது பதிவாகியிருந்தது.
போலீசார் அவரை விசாரிக்க தேடியபோது, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பெண்ணின் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.
- இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பிரம்புரியில் வசித்து வருபவர் முகமது ஆசிம் (வயது 21). இவருக்கும் பசால்பூரை சேர்ந்த மந்தாஷா (21) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
கடந்த வாரம் இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண வீடு உறவினர்களால் நிரம்பி களை கட்டி இருந்தது. திருமணத்துக்கு முன்பு மணமகளின் பெயர் தஹிரா என அறிவிக்கப்பட்டது.இந்த பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் முகமது ஆசிம் மணமகளின் முக்காடை விலக்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார். இவர் விதவை ஆவார். முகமது ஆசிமின் மூத்த சசோதரர் மற்றும் அண்ணி ஆகியோர் ஏமாற்றி இந்த திருமணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இது பற்றி கேள்வி கேட்ட முகமது ஆசிமை அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் போலியாக பாலியல் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர் மீரட் போலீஸ் சூப்பிரெண்டிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- நாயின் உரிமையாளர் ஷோபா ராணி புகார் அளித்தார்.
- நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது
உத்தரப் பிரதேசத்தில் தனது மகனை பார்த்து குரைத்ததற்காக நாயை காரில் 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்
நாயின் உரிமையாளர் ஷோபா ராணி அளித்த புகாரின்படி, இந்த சம்பவம் புதன்கிழமை கிரேட்டர் நொய்டாவில் உள்ள நை பஸ்தி பகுதியில் நடந்தது. அமித் என்பவரின் 10 வயது மகன், அந்த வழியாகச் செல்லும்போது தனது செல்லப்பிராணி மீது கல்லை எறிந்தார்.
சிறுவனை நோக்கி நாய் குரைத்ததால் அவன் விழுந்தான். இதைத் தொடர்ந்து, அமித் 4 வயது நாயை குச்சிகளால் அடித்து, தனது காரில் கட்டி 3 கி.மீ தூரம் இழுத்துச் சென்றதாக ராணி குற்றம் சாட்டினார்.
நாய் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என்று ராணியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், அமித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், நாய் தனது மகனைக் கடித்ததாகக் கூறி அமித் கூறியதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
- குடிபோதையில் தள்ளாடி விழுந்த போலீசாரின் கையில் துப்பாக்கி இருந்துள்ளது.
- இது குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் பரபரப்பான சாலையில் குடிபோதையில் போலீஸ் ஒருவர் தடுமாறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடிபோதையில் தள்ளாடி விழுந்த போலீசாரின் கையில் துப்பாக்கி இருந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த இது குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.






