என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும்.
    • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.

    டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

    ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.

    மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்தகட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.

    இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்தபோது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும். சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. சமூக நீதி கடமைகளை திராவிட மாடல் அரசு குழிதோண்டி புதைக்கிறது.

    5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை.

    மது, கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அவை கட்டுப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

    கல்வி, தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. மொத்தத்தில் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த அவலங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. ஜூலை 25-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது. இந்த பயணம் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

    நல்லூர்:

    இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-

    கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.

    ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.

    சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.

    ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடக்கு கர்நாடகா -தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை மற்றும் 15-ந்தேதிகளில்: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
    • எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். 241 பேர் பலியான சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணிஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சியா? என்பது குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பேசியதும், தேர்தல் கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார்.

    ஒரு முன்னாள் முதலமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

    தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும், செல்வாக்கும் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அ.தி.மு.க. ஆட்சியின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் தான் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.

    அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகள் செய்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் தி.மு.க. அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
    • மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.

    டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

    ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.

    மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்த கட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.

    இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்த போது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.

    • கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
    • அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் 15, 16 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கருணாநிதி சிலை திறப்பு, மாவட்ட செயலாளர் இல்லத் திருமண விழா, அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமையும் இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சிலை அமையும் இடத்திற்கான மாதிரி வரைபடத்தை பார்த்தனர். சிலையை சுற்றிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தஞ்சைக்கு வருகிற 15, 16 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் 15-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கல்லணை வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் மேட்டூர் அணையை தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் 16-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
    • பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன்.

    தைலாபுரம்:

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்.

    * பா.ம.க. தொண்டர்களில் 100-ல் 90 சதவீம் பேர் எனக்கு ஆதரவு தருகின்றனர்.

    * நான் பிரசாரத்திற்கு போகும்போது 200 பேர் தான் கூட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

    * குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.

    * பிள்ளைகள் தங்களது தாய்- தந்தையை மதிக்க வேண்டும் என சொன்னால் கோபம் வருகிறது.

    * நான் 100 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன்.

    * நான் தலைவராக இருப்பதில் அன்புமணிக்கு என்ன பிரச்சனை?

    * என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.

    * பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன் என்றார். 

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.

    திரு.வி.க.நகர் பஸ் நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.

    குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.

    தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறுவது, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம், குறை சொல்லக்கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள்.

    முடிச்சூர் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பஸ் நிலையத்தை ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.

    உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

    • சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் .

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அஸ்தினாபுரம்: ஆர்.பி. சாலை பகுதி, வேல்முருகன் தெரு, வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது. 

    • மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
    • படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் தலைமையில் 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர்.

    இவர்களது கார் தூத்துக்குடி-மதுரை சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த சாலையில் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பலியானவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த வக்கீல் தனஞ்செயன் ராமமூர்த்தி, கார் டிரைவர் வாசுராமநாதன் என்பதும், மற்றொருவர் நீதிபதியின் பாதுகாவலராக வந்த போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது.

    இந்நிலையில் படுகாயத்துடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×