என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
- அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.
சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்பு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
மாநிலத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.
திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறந்த உயர்கல்வி வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்படுகிறார். அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது.
திமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களும் தாக்கப்படுகிறார்கள்.
முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பதற்கு 2.0, 3.0 என பெயர் வைத்துவிட்டு கடைசியில் ஓ போட்டு சென்றுவிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும்.
திமுக ஆட்சி அமைந்த உடன் முறையாக விசாரித்து டாஸ்மாக் ஊழல் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என செய்திகள் வந்துள்ளது. ஆனால், ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டார்கள். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா உணவு போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் ரூ.60,000 கோடி முதலீடுகளை ஈர்த்தோம். மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா? அல்லது தொழில் தொடங்க சென்றாரா? என வரும் காலங்களில் தெரியும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.
கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?
அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டில் தான் நிற்பார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
- தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.
நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் போதிய அளவில் கூட்டம் இல்லாததால் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுகடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும் என பிரேமலதா விஜயகாந்த் ஆத்திரமடைந்து கூறியதாக கூறப்படுகிறது.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் கீர்த்தி மீனா (வயது 21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு பின்னால் செல்வது என்பது தான், இன்று நம் சமூகத்திற்கு முன் இருக்கும் மாபெரும் சவால். சட்டங்கள் மற்றும் காவல்துறை மூலம் போதை வஸ்துக்களின் புழக்கத்தை வேண்டுமானால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. இளைஞர்கள் அதனை நாடாமல் இருக்க செய்வதே, சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில், போதை வஸ்துக்களை இளைஞர்கள் நாடாமல் இருக்க, விளையாட்டை ஒரு தீர்வாக ஈஷாவின் கிராமோத்சவம் முன்னெடுப்பு முன் வைக்கிறது. போதையில் இருந்து விடுபட, ஈடுபடாமல் இருக்க விளையாட்டு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்கும் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால், ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒருசேரிபுதூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் பூபதி என்ற இளைஞரிடம் பேசினோம். "எங்கள் ஊரில் இரண்டு வாலிபால் அணி உருவாக்கினோம். அதில் ஒரு அணிக்கு நான் கேப்டனாக உள்ளேன்.
15 வருஷமாக வாலிபால் விளையாடுகிறேன். நான் சிவில் சைட் இன்ஜினியராக வேலை செய்கிறேன். எங்க அப்பா வாலிபால் விளையாண்டு வந்தாங்க. அதை நானும் பின்பற்றி விளையாடி வருகிறேன். விளையாடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகளுக்கு முன்பு எங்க ஊர்ல ரொம்ப காலமாக விளையாட்டில் ஆர்வமில்லாம இருந்தோம். அந்த சமயத்துல எங்க பசங்க சிலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. ஈஷா கிராமோத்சவம் போட்டி அறிவிப்புக்கு பிறகு, எங்க ஊர் இளைஞர்களைத் திரட்டி 2 வாலிபால் டீம் அமைத்தோம். அதுல ஒரு டீமுக்கு நான் கேப்டனானேன்.
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்க ஊர் இளைஞர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதால், நிறைய பசங்க குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துட்டாங்க. ஈஷா விளையாட்டுப் போட்டி இளைஞர்களின் வாழ்க்கையை மாத்திடுச்சு. இதற்கு ஈஷாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
இந்த வருஷம் அந்தியூரில் நடைபெற்ற கிளஸ்டரில் ஜெயித்து விட்டோம். அதன் பிறகு, கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தோற்று விட்டோம். போன வருஷம் மண்டல அளவில் ரன்னர் வந்த நாங்க, இந்த வருஷம் காலிறுதியில் தோற்றது வருத்தமா இருக்கு.
ஆனாலும், என்ட்ரன்ஸ் பீஸ் இல்ல. போக்குவரத்து செலவுக்கு ஈஷா பணமும் தர்றாங்க. ஈஷாவோட இதுபோன்ற சேவைகள் தான், மக்கள் கிட்ட ஈஷாவை கொண்டு போய் சேர்க்குதுன்னு நினைக்கிறேன்.
தொடர்ந்து கிளஸ்டர் போட்டிகளில் ஜெயிக்கும் எங்கள் ஊரில் கிளஸ்டர் போட்டிகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, எங்க ஊர்ல இருக்கும் விளையாட்டு ஆர்வமுள்ள பெண்களும் த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பாங்க. அதேபோல், ஆண்டுதோறும், ஒவ்வொரு கிராமத்தில் கிளஸ்டர் போட்டிகள் நடத்துனா, கிராமப்புற மக்களிடையே ஈஷா கிராமோத்சவம் பல மாற்றங்களை கொண்டு வரும். என் அனுபவத்தில் மற்ற போட்டிகளுக்கு போனால் வீட்டில் அனுமதிப்பதில்லை.
ஈஷா போட்டிகளுக்கு வீட்டில் மட்டுமில்ல. சமுதாயத்திலும் நல்ல பெயர் உள்ளது. அதனால, ஈஷா கிரோமத்சவம் போட்டிகளில் விளையாட எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது." என்றார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர்,
வேலூர்:
வேலூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், நாளை (16-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகர்,ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர், வசந்தம் நகர் விரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம் டெல்லி பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
- டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கவும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்கவும் அ.தி.மு.க.வுடன் அமித்ஷா கூட்டணியை உருவாக்கினார்.
கூட்டணியை பலப்படுத்த அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை உருவாக்கிய அமித்ஷா இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைத்து பலப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இந்த கூட்டணி பலவீனமாகும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றி ருந்த டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறினார்கள்.
இதற்கிடையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.
தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
அதற்காக கெடுவும் விதித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரனும் அறிவித்தார்.
இந்தநிலையில் கட்சி தலைமைக்கு கெடுவிதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஏற்கனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதற்கு டி.டி.வி.தினகரன் கட்சி பிரித்த வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தென்மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு இல்லாததாலும் கணிசமான வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது.
நாளை டெல்லி பயணம் எனவே சசிகலாவை இணைக்காவிட்டாலும் பரவாயில்லை. டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைவதே பலமாகும் என்று தமிழக பா.ஜனதா நிர்வாகிகளும் டெல்லி மேலிடத்துக்கு தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணியில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி ஏற்பாரா?
இணைப்பு முயற்சியை மேற்கொண்டாலும் டி.டி.வி.தினகரன் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுப்பது அந்த முயற் சிக்கு கூடுதல் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
எனவே ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில ஆலோ சனைகளை அமித்ஷா வழங்குவார் என்று கூறப் படுகிறது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி ஏற்பது சந்தேகமே என்கி றார்கள் கட்சியினர்.
துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறுகிறார்.
அதன் பிறகு டெல்லியில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி மாலையில் சென்னை திரும்பும் வகை யில் பயண திட்டம் வகுக் கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை அவர் சந்திக்கிறார்.
கூட்டணியை உடைக்க முயற்சி.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்த லில் எங்களிடம் 5 ஓட்டுகள் இருந்தன. அதற்காக ஆதரவு திரட்ட சி.பி.ராதாகிருஷ் ணன் சென்னை வர இயல வில்லை. எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மரி யாதை நிமித்தமாக அவரை சந்தித்து வாழ்த்து தெரி விப்பதே இந்த பயணத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
ஆனால் டெல்லியில் இருக்கும் போது கூட்டணி தலைவர் என்ற ரீதியில் அமித்ஷாவையும் சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வழிகளில் முயல்கி றார்கள். அதில் ஒரு முயற்சி தான் செங்கோட்டையன் விவகாரமும்.
டி.டி.வி.தினகரன் எடப் பாடி பழனிசாமி தலை மையை ஏற்க போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அப்படி இருக்கும்போது அமித்ஷா எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இணைப்பு பற்றி பேச முடியும்?.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.
- எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது.
விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.
விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
- தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது.
பாஜக-வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: ஓ. பன்னீர்செல்வத்திடம் நீங்கள் 2 நாட்களுக்கு முன்பாக பேசியதாக கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா?
பதில்: அதையெல்லாம் இப்போது கூற முடியாது.
கேள்வி: டி.டி.வி. தினகரன், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என்று கூறி 4 முனை போட்டி என்று கூறுகிறாரே? நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: 4 முனை போட்டியும் நடக்கலாம். 5 முனை போட்டியும் நடக்கலாம். தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
கேள்வி: மதுரையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடனும் நான் பேசி இருக்கிறேன். அவர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்.
கேள்வி: செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர் கூட்டணி கட்சியில் இருக்கிறார். அதனால் சென்று பார்க்க இருக்கிறார்.
கேள்வி: அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்க்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அ.தி.மு.க.வில் குழப்பமே இல்லையே.
கேள்வி: செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அல்லவா?
பதில்: அது குழப்பம் என்று சொல்ல முடியாது.
கேள்வி: நடிகர் விஜய் பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ளார். பெரம்பலூரில் மக்களை சந்திக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அடுத்தவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவர்களின் நிர்வாகத்தை பொருத்தது. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியுமா?
ஓட்டு வாங்கினால் தான் ஜெயிக்க முடியும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது. பாரதீய ஜனதா யாரையும் எதிரி கட்சியாக கருதாமல் எதிர்கட்சியாக தான் பா.ஜ.க. கருதுகிறது. தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.
- சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
- சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.
வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,
தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை
2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
3) 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது.
- உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
சென்னை:
அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கும் விசயம்தான்.
அண்ணா படத்தையோ எம்.ஜி.ஆர். படத்தையோ பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் அவருக்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றார்... சி.எம். சார் என்றார்... என்னை கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன். சி.எம். ஸ்டாலின் சார் என்று சொல்லாமல்.. சி.எம். சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
அமைச்சர் நேரு மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து தான் நடக்கிறது.
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால் எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.






