என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள்.
- மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.
அம்மமாபேட்டை:
திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சுப்புராயன்.
இவர் கடந்த முறை திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற ஆனந்தனை எதிர்த்து கதிர்அருவாள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
மீண்டும் தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில் அதே இடத்தில் சுப்புராயன் நிற்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்று அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிக்கு ஓரிரு வரை மட்டுமே வந்துள்ளதாகவும், மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தியூர், பவானி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், பூதப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் "கண்டா வர சொல்லுங்க" எங்கள் தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
- காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது.
- வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த வாரம் சென்னை வருகிறார்.
சென்னை வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது. கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதால் உடன்பாடு ஏற்படவில்லை.
டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
தொகுதி பிரச்சனையால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதிலும் அதே நேரம் தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதமாகவும் காங்கிரஸ் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கார்கே கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான இடத்தேர்வு நடக்கிறது.
வருகிற 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிக்குள் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் கார்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
அதற்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள். கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்குகிறார்.
- வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது.
- தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.
திருச்சி:
இந்திய ஜனநாயக கட்சியின் 'தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்' என்ற பெயரில் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார்.
கூட்டணி கட்சிகள் சார்பில் புதிய நீதிகட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக நிறுவனர் தேவநாதன், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மே மாதம் 3-வது வாரம் மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்பார். இந்தியாவில் உள்ள 543 எம்.பி.க்களையும் ஒரே மேடையில் உட்கார வைத்து அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை புத்தகமாக போட்டுக் காட்டக் கூறினால், அதில் அதிக பணிகளை செய்தவர்கள் பட்டியலில் பாரிவேந்தர் தான் முதலிடத்தில் இருப்பார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தவிர அவர் சம்பாதித்த பணம் ரூ.126 கோடியை தனது தொகுதியில் கல்விக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் பொது மக்களுக்காகவும் செலவு செய்துள்ளார்.
ராஜராஜ சோழன் காலத்தில் அவருக்கு எவ்வளவு பெருமை இருந்ததோ அதை மீட்டு எடுக்க வேண்டும். பிரதமர் மோடி செங்கோலை அறத்தின் சாட்சியாக புதிய பாராளுமன்றத்தில் வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
தொன்மையான தமிழ் மொழியை பிரதமர் ஐநா சபை வரை கொண்டு சென்று பெருமை சேர்த்து உள்ளார். அடுத்த 5ஆண்டு காலத்தில் திராவிட கட்சி இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகத்தில் வளர்ச்சி அரசியலை பேசாமல் பிரிவினை அரசியலை பேசுகிறார்கள்.
வடக்கு தெற்கு என்று பிரித்து பேசும் அரசியல் மக்களிடம் எடுபடாது. என்று அப்போதே அண்ணா விட்டுவிட்டார். அதை தி.மு.க. தற்போது எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. 2024 தேர்தல் முடிவில் தி.மு.க. என்ற கட்சி இல்லாத நிலை ஏற்படும். பின்தங்கிய இந்த பெரம்பலூர் தொகுதியில் ரெயில் வசதி வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கனவை பாரிவேந்தர் மோடியிடம் மத்திய மந்திரிகளிடமும் பேசி வந்துள்ளார்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று பாரிவேந்தர் மீண்டும் எம்.பி. ஆகும்போது, அடுத்த பட்ஜெட்டில் பெரம்பலூர் ரெயில் வழி தடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதை அவரே திறந்து வைப்பார். இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை கொண்டு வருகிறோம். அதில் முதல் பள்ளி பெரம்பலூருக்கு வேண்டுமென்று முதலில் கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். அத்துடன் அதற்கு இடமும்கொடுத்து கட்டிடமும் கட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார். அவருடைய வெற்றி இந்த தொகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பேசுகையில்,
2014-ம் ஆண்டு மோடி குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி நடத்தி வந்தார். அதன்பின்னர் மோடியுடன் பல மேடைகளில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றேன். அப்போது அவரிடம், விரைவில் பிரதமராக ஆவீர்கள் என்று கூறினேன். அதன்படி அவரும் பிரதமர் ஆனார். தமிழன், தன்னை தமிழன் என்று வெளியே கூற தயங்கும் நேரத்தில், தமிழை உலகம் எல்லாம் அவர் பரப்பி வருகிறார்.
பிரதமர் மோடி ஒரு ஞானி, அவர் எங்கு சென்றாலும் இந்தியா உயர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் 3-வது முறையாகவும் பிரதமர் ஆவார் என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. 3-வது முறையல்ல, 4-வது முறையும் நரேந்திரமோடி தான் பிரதமர் ஆவார். இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து பா.ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.
- உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருவதுடன் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை போலீசார் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் 11 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.
- சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
- பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- பாராளுமன்ற தேர்தலோடு பிரதமர் காணாமல் போய்விடுவார்
- திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை.
ஈரோடு:
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் யார் கண்டிப்பாக தோற்பார்களோ அவர்களது பட்டியலை வேட்பாளர்கள் பட்டியலாக பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு தொடர்ந்து பிரதமர் மோடி வந்து செல்வது, நமது ஊரின் சாம்பார் அதிகம் பிடிப்பதால் தான் என நினைக்கிறேன். திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. சுமூகமாக தான் நடக்கிறது. இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதி போட்டியிடுகிறோம் என்று வெளியிடப்படும்.
பிரதமர் மோடி இந்த தேர்தலுடன் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என சொல்கிறார். கண்டிப்பாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மோடியை எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். காணாமல் போய்விடுவார்.
தமிழகத்தில் என் மண், என் மக்கள் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் கூறி வருகிறார். தமிழகமே அவர்களது சொந்த பூமி என்று நினைத்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பணத்தையோ, நிதியையோ, வரியையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்கலாம் என்றில்லாமல், அதனை அவர்கள் சுருட்டி கொண்டுள்ளார்கள்.
விஜயதாரணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வெளியேறுவது, சில கெட்ட மற்றும் மோசமான சக்திகள் காங்கிரஸ் கட்சியினை தூய்மைப்படுத்த வெளியேறி உள்ளனர்.
அவர்களுக்கு எங்களது நன்றி. தமிழகத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்கிறது. அதில், தப்பு தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். இதில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் எத்தனை சமூக விரோதிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுத்தீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு பிறகு அதிகமான குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
- நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.
சென்னை:
லயோலா கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மர்பி நினைவு கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையேயான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 23-வது கல்லூரிகள் கால்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை 6 நாட்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் லயோலா, எம்.சி.சி, செயிண்ட் ஜோசப் ( திருச்சி), அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி , ஜாமியா நத்விய்யா கல்லூரி ( கேரளா) உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடக்கிறது.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-வது , 3-வது, 4-வது இடங்களுக்கு முறையே ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் ஏ. லூயிஸ் ஆரோக்யராஜ், விைளயாட்டு குழு தலைவர் எம்.எஸ்.ஜோசப் அந்தோணி, உடற் கல்வி இயக்குனர் எஸ். விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
- விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுத்துறையில் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
- குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது.
சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
- சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குற்றவியல் முறை சட்ட பிரிவு 144-ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் வருகிற 29-ந்தேதி வரை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
- அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (திங்கட் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இதன்படி சென்னையில் 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பால கங்கா, வி.என்.ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.
இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.
இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.
- தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் என்ற புதிய வட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. நிர்வாக வசதிக்காக இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டமும், கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலம் மாவட்டமும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். புதிய மாவட்டங்களை உருவாக்க அதிக செலவு ஆகாது. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழக அரசை தடுப்பது எது? என்பது தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெண் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர்.
- வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்து வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கொக்குளம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து திடீரென வெடித்ததில் சதீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் வீடு தரைமட்டமானது.
அதேபோல வெடி மருந்து வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.
வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடி மருந்து வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






