search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கண்டா வர சொல்லுங்க... திருப்பூர் தொகுதி எம்.பி.யை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
    X

    கண்டா வர சொல்லுங்க... திருப்பூர் தொகுதி எம்.பி.யை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    • தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள்.
    • மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    அம்மமாபேட்டை:

    திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சுப்புராயன்.

    இவர் கடந்த முறை திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற ஆனந்தனை எதிர்த்து கதிர்அருவாள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

    மீண்டும் தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில் அதே இடத்தில் சுப்புராயன் நிற்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்று அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிக்கு ஓரிரு வரை மட்டுமே வந்துள்ளதாகவும், மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தியூர், பவானி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், பூதப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் "கண்டா வர சொல்லுங்க" எங்கள் தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×