என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வருபவர்கள் பெரும்பாலனோர் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் மாணவ, மாணவிகள் பயணித்து கல்லூரி, வீடுகளுக்கு செல்வது சிரமமாக உள்ளது.
இருப்பினும் பல்வேறு இன்னல்களை தாண்டி மாணவ, மாணவிகள் கல்வி பயில கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பஸ்களை துரத்தி சென்று ஏறும் நிலையும், மாணவிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்லும் நிலையும் ஏற்பட்டது.
கல்லூரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ந்து அரசு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்றாமல் சென்றது.
இதனை கண்டித்தும், பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி எதிரே உள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி. காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு பஸ்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். திடீர் சாலைமறியலால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.
- பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்படும்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் திட்டமிட்டு, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்காவில் நடை பயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயம்பேடு மார்க்கெட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
- சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜை போலீசார் தேடி வந்தனர்.
- போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார்.
சென்னை:
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.
ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.
போலீசார் எச்சரித்தும் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை தாக்கியதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான்.
இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த டி.பி. சத்திரம் எஸ்.ஐ. கலைச்செல்வியை நேரில் அழைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
- புதிய சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வந்தது.
- விஜய் வீட்டில் இருந்து வந்த சொகுசு கார் எம்பிவி ரக மாடல் ஆகும்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டிரைலர் அப்டேட்டுக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜயின் புதிய ஆடம்பர சொகுசு கார் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவில் ஆடம்பர சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய் பயன்படுத்தி வரும் வாகனங்கள் பட்டியலில் இந்த காரும் தற்போது இணைந்து இருப்பதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் கார் லெக்சஸ் LM சீரிஸ் மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. எம்பிவி ரக கார் என்ற வகையில், இந்த கார் ஏராளமான ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்.
- மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
திருப்பூர்:
சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார்.
அதன் பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து அதன்பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள். அதுபோல் பார்சல் பண்டல்களையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொள்கிறார்கள். அதுபோல் ரெயில் தண்டவாள பாதை ரோந்துப்பணியையும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானம், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்று கிறார்கள். மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழக கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
- தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
சென்னை:
நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் தலைவர்கள் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.
அதில் அவர்கள், "கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
- கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும்.
காஞ்சிபுரம்
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைகிறது.
இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும்.
இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும் விமான நிலைய பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, `விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
விமான நிலைய பணிக்கு மத்திய அசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதற்குள் விமான நிலையத்துக்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான பணிகள் வேகம் எடுத்து உள்ளன.
- முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து.
- முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து; அதன் நீரை பயன்படுத்திக் கொள்வதும், அணையை வலுப்படுத்தி அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதும் நமது உரிமை. இதில் தமிழ்நாடு அரசு எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது.
அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது, அணை அமைந்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை தொடர்பான இரு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.
இன்னொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்குத் தடையாக உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் சாதகமான தீர்ப்பைப் பெற்று அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விமான டிக்கெட் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
- கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளன.
ஆலந்தூர்:
தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 31-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாட இப்போதே பயணதிட்டத்தை வகுத்து வருகிறார்கள்.
தீபாவளிக்கு விமான பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். 90 நாட்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி உள்ளதால் தீபாவளி பண்டிகையையொட்டி விமான கட்டணங்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளன.
இதில் அக்டோபர் 30-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் எண்ணிக்கையும் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளன.
பெங்களூரில் இருந்து பாட்னா செல்ல ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் எகிறி உள்ளது. இதேபோல் பெங்களூரில் இருந்து வாரணாசிக்கு ரூ.23 ஆயிரம், மும்பை-லக்னோ ரூ.19 ஆயிரத்து 292, பூனே-லக்னோ ரூ.19ஆயிரத்து 226, டெல்லி-கவுகாத்தி ரூ.18 ஆயிரத்து 573 ஆக கட்டணங்கள் உள்ளன.
இதேபோல் மும்பையில் இருந்து சென்னைக்கு ரூ.5083 ரூபாயும், டெல்லியில் இருந்து சென்னைக்கு ரூ.7,618 ஆகவும் கட்டணம் உயர்ந்துள்ளது.
கடைசி நேரங்களில் ரெயில் மற்றும் பேருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த ஊரு செல்வதற்கு விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவர்.
இதனால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நாட்களில் விமான டிக்கெட் கட்டணம் பலமடங்க அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான்.
- ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாககம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.
கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்ததும் ரோகித்ராஜ் தப்பி ஓட முயற்சித்தான். இதனால் உஷாரான போலீசார் "டேய் தப்பி ஓட நினைக்காதே... போலீஸ் விசாரணைக்கு எங்களோடு வந்து விடு. இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் ரோகித் ராஜோ, போலீசார் சொல்வதை கேட்காமல் தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தான். இதைத் தொடர்ந்து போலீஸ் ஏட்டுகள் சரவணகுமார், பிரதீப் இருவரும் ரவுடி ரோகித் ராஜை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது ரோகித் ராஜ் திடீரென தாக்குதலில் ஈடுபட்டான். மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினான். இதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதில் நரம்பு துண்டிக்கப்படும் அளவுக்கு கொடுங்காயம் ஏற்பட்ட போதிலும் ஏட்டுகள் இருவரும் ரவுடி ரோகித்ராஜை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்து மல்லுக்கட்டினார்கள்.
அப்போது அவர்களோடு கத்தியை வைத்துக் கொண்டே கட்டிப்புரண்டு சண்டை போட்ட ரோகித் ராஜ் போலீஸ் பிடியில் இருந்து நழுவி தப்பி ஓடினான்.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தனது துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ரவுடி ரோகித்ராஜின் பின்னால் ஓடினார். "ஓடாதே... நில்..." என்று அவர் எச்சரித்தார். ஆனால் ரவுடி ரோகித் ராஜோ போலீசில் சிக்கி விடக் கூடாது. தப்பி ஓடி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தான். கல்லறை தோட்டத்துக்கு வெளியே உள்ள கல்லறை சாலையில் தலைதெறிக்க ஓடிய ரவுடி ரோகித்தை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடிக்க முடிவு செய்த அவர் ரோகித்தை நோக்கி குறி பார்த்து சுட்டார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலையில் நடந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டி.பி.சத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரவுடி ரோகித் ராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். காலில் கட்டு போடப்பட்டு ரோகித்ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் இருவரும் கீழ்ப்பாக் கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே என்கவுண்டர் பீதியில் தவிக்கும் ரவுடிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தால் மேலும் கலக்கம் அடைந்து பீதியில் தவித்து வருகிறார்கள்.
- காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
- நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம்.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது வந்திருக்கக்கூடிய இந்த முதலீடுகளில் குறிப்பாக வாகன உற்பத்தி மின்னணு பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சன்தாக் நிறுவனத்துக்கு அவர்களின் முதலீடாக 21 ஆயிரத்து 340 கோடி ரூபாய், வேலைவாய்ப்பாக 1,114 பேர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய திட்டம்.
காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
ஈரோட்டில் மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2025 பேர்களுக்கு வேலைவாய்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் முதலீடு 1,597 கோடி ரூபாய். வேலைவாய்ப்பு 715 பேர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகளாக அமைந்திருக்கிறது.
இது தவிர உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ். மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ ரூ.44 ஆயிரத்து 125 கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் 15 புதிய நிறுவனங்களில் வந்திருக்கிறது. ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேருக்கு இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இது தவிர இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நமது முதலமைச்சர் வரக்கூடிய 17-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட் டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் வல்லம் படுகால் பகுதியில் ரூ.706.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் பாக்ஸ்கான் நிறுவனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 3 முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மூலமாக குறிப்பாக பட்ஜெட்டில் கூட இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம். தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள். அதற்கான கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக்கான கொள்கைக்கும் அனுமதி கொடுத்துள்ளோம்.
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். வரக்கூடிய 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுவு திறனை நாம் அடைய வேண்டும் என்கிற இலக்கை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார்கள்.
இப்போது இருக்கக்கூடிய நிலையற்ற பசுமை எரி சக்தியை நாம் சமப்படுத்தப்பட்ட மின்சாரமாக மாற்றுவதற்கு கட்டமைப்பை உருவாக்கி கிரிடில் அதை கொண்டு வருவதற்காக இந்த 3 கொள்கைகளை நாம் கொடுத்துள்ளோம்.
இந்த திட்டங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு முதலீடுகள் இருப்பதால் தனியார் பங்களிப் போடு செய்வது அவசியமாக இருக்கிறது.
அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் இவைகளுக்காக இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தக்கூடிய திட்டம். அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் 100 சதவீதம் நமது மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என்கிற ஒரு திட்டம்.
நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம். அது தவிர தனியார் மூலமாக செய்யக்கூடிய முறை என 3 வகையாக பிரித்துக்கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த கொள்கைக்கு பல்வேறு சலுகைகளும், கட்டணங்களும் வழங்கி இருக்கிறோம்.
சிறிய புனல் திட்டமும் கொடுத்துள்ளோம். தூய்மையான மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இது சரியாக இருக்கும். காற்றாலையை புதுப்பிக்கும் கொள்கை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நிருபர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எப்போது? என்று கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் முறையான வகையில் அறிவிப்பு வெளியிடும் என்றார்.
- ஆதனூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
- எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,
எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.






