கவர்னரின் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

தமிழக கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
கவர்னரின் தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
Published on

சென்னை:

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் தலைவர்கள் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.

அதில் அவர்கள், "கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com