கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது.பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
Published on

சென்னை:

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ளவா்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் திட்டமிட்டு, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவில் நடை பயிற்சிக்கான பாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், இருக்கைகள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பூங்காவும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோயம்பேடு மார்க்கெட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com