என் மலர்
ராஜஸ்தான்
- "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
- ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.
ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
"பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.
- மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்.
- நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது
* நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.
* நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
* இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது
* காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
* நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.
* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
- இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
- மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் ஷ்யாம் நகரில் உள்ள ஒரு பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் பெயர் சூட்டப்படும் என்று நகர மேயர் பிரமிளா பாண்டே இன்று அறிவித்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த 31 வயதான சுபம் திவேதி, இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அவரது மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.
மேலும் அஷான்யா விரும்பினால் கான்பூர் நகராட்சியில் அவுட்சோர்சிங் வேலை வழங்குவோம் என்றும் மேயர் பிரமிளா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக நேற்று அவருக்கு அந்நகரில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு நடத்தபட்டது. பஹல்காம் பயங்ரவாத தாக்குதலில் சுபம் திவேதி உட்பட 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
- தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.
நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.
இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.
மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.
தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- 19 இடங்களில் சோதனை நடத்தினர்.
- அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள பொது சுகாதார பொறியியல் துறையில் மேற்பார்வை என்ஜினீயராக அசோக்குமார் ஜாங்கிட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெய்ப்பூர், கோட்புட்லி, உதய்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அசோக்குமார் ஜாங்கிட்டின் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் அவரது பெயரில் உள்ள 19 சொத்துக்கள், அவரது மனைவி சுனிதா சர்மா பெயரில் 3 சொத்து மற்றும் மகன் நிகில் ஜாங்கிட் பெயரில் 32 சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தத்தில் அவர் ரூ.11½ கோடிக்கு மேல் சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் அவரது சட்டப்பூர்வ வருமானத்தை விட சுமார் 161 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
- எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது.
- 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது என்றார்.
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ரியான் பராக் கூறியதாவது:
எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது. 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது.
இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினர்.
பவுலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நினைத்தோம்.
கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என தெரிவித்தார்.
- அவுட்டானவுடன் வைபவ் கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார்.
- அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதம் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா 8 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால்- ரியான் பராக் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 39 ரன்னில் அவுட்டானார்.
ஹெட்மயர் 12 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தானுக்கு கிடைத்த 6வது தோல்வி ஆகும்.
லக்னோ சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.
- ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
- மருத்துவர்கள் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு சமிபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களின் அவரின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது. மணிஷுக்கு துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் மருத்துவமனையில் உடன் இருந்தார். ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
சம்பவத்தன்று மணிஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஜெகதீஸ் இருந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் சிலர் ஜெகதீஸ் என்பவரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர்.
அப்போது இவர் தனது கையை உயர்த்தினார். பின்னர் அந்த மருத்துவர்கள் ஜெகதீஸை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர்.
இதனை அறிந்த அவரது மகன் மணிஷ் அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக அங்கு சென்ற மணிஷ் மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்தார்.
இதனையடுத்து அவரது தந்தைக்கு கையில் 6 தையல் போடப்பட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
- விராட் கோலி அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.
பெங்களூரு சார்பில் ஹேசில்வுட், குருணால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பில் சால்ட் 65 ரன்னும், விராட் கோலி 62 ரன்னும், படிக்கல் 40 ரன்னும் அடித்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.
இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்தார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
- பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.
- பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தின் 35வது ஆண்டு நிறுவன விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டது.
நிறைவு விழாவான நேற்று ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு காலை 7 மணியளவில் நடக்க இருந்தது. பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியர் வாசுதேவ் காத்ரி(40 வயது) பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ராச்சத பலூன் வான் நோக்கி பறக்க தொடங்கியது. இதில் கயிற்றுடன் அவர் மேலே சுமார் 100 அடி உயரத்திற்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். பின் கயிறு அறுந்து அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தின்போது அவர் மேலே இழுத்துச்செல்லப்பட்டு கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் வாசுதேவ் காத்ரியின் எதிர்பாராத மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு 'விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து போலீசாரிடம் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.
சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தார்.






