என் மலர்
இந்தியா

நீட் தேர்வு அச்சம் - 17 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை
- 'நீட்' தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது.
- இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவி நேற்று இரவு தந்து அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். .
கோட்டாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்த மாணவிஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி தேர்வுக்குத் தயாராகி வந்தாள். இந்நிலையில், உரிய பாடங்களை படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தேர்வுக்கு முந்தைய நாள் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






